தமிழ்மணம் ஈழம்
புதுப்பிக்கப்பட்ட நேரம் : May 16, 2012, 4:00 pm
சமர்ப்பணம்
இறுதிப் போர் என சிறீலங்கா அரசால் அறிவிக்கப்பட்டு நடந்த ஈழப் போரில் இருபதாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். விமானத்தாக்குதல், ஆர்ட்டிலரி, செல் என பலவகையான கனரக ஆயுதங்களுக்கு பலியான தமிழர்களுக்கு தமிழ்மணம் தனது அஞ்சலியை செலுத்துகிறது. இந்த ’தமி்ழ்மணம் ஈழம்’ தளம் போரில் பலியான மக்களுக்கும், போராளி்களுக்கும் சமர்பிக்கப்படுகிறது
தொடரப் போகும் ஈழத்தின் அரசியல் போராட்டத்தை இந்த தளம் பதிவு செய்யும்
 
இனப்படுகொலை












 
சமீபத்தில் எழுதப்பட்ட ஈழம் சார்ந்த இடுகைகள்


சந்திக்கு வராத சங்கதிகள், திமுக விசுவாசிகளின் சம்பாசணைகள் உங்களுக்காக! கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக, திமுகவின் அதி தீவிர விசுவாசி ஒருவரும், ...மேலும் வாசிக்க
சந்திக்கு வராத சங்கதிகள், திமுக விசுவாசிகளின் சம்பாசணைகள் உங்களுக்காக!
கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக, திமுகவின் அதி தீவிர விசுவாசி ஒருவரும், கட்சியின் தொண்டருமாகிய ஒரு ப்ராப்ள பதிவர் கலைஞரின் கவர்ச்சி மிகு கோவணத்தை பற்றிப் பிடித்தால் தமிழீழம் கிடைக்கும் என டாஸ்மாக் ஊட்டிய பக்திப் பரவசத்துடன் தன் ஓவர் விசுவாசத்தை வெளிப்படுத்தும் வண்ணம் ஓர் கட்டுரை வரைந்து பல பதிவர்களிடமும் வாங்கி கட்டிக் கொண்டார். ஈழப் புளியமரம் எனும் ஈனத் தனமான பதிவெழுதி திமுக கட்சிக்கு இணையத் தளங்களில் இருக்கும் கொஞ்ச மரியாதையினையும் கெடுத்து குட்டிச் சுவராக்கிய பெருமையினை கொண்டவர் தான் இந்த அல்லக் கை விசுவாசி அவர்கள்.
மேலும் படிக்க....

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


சர்வதேச சமூகமும், மனித உரிமைபேசும் அமைப்புகளும் மௌனித்துப் பார்த்திருக்க, சிங்களப்பேரினவாத அரசு நடாத்திய முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ...மேலும் வாசிக்க
சர்வதேச சமூகமும், மனித உரிமைபேசும் அமைப்புகளும் மௌனித்துப் பார்த்திருக்க, சிங்களப்பேரினவாத அரசு நடாத்திய முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வடுக்களுடன் மூன்று ஆண்டுகளைக் கடந்து நிற்கின்றோம்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை முன்னிறுத்திய நகர்வுகள், சர்வதேச தளத்தில் பிறிதொரு பரிமாணத்தில் ஈழப்போராட்டத்தைக் கொண்டு சென்று விட்டுள்ளன.
சிங்கள தேசத்தின் மீது பலம் அல்லது அழுத்தம் பிரயோகிக்காதவிடத்து, ஈழத்தமிழர்களின் உரிமையைக் கேட்க முடியாது என்ற நிலையில், சனல்-04 தொலைக்காட்சி உட்பட பலரது விடாமுயற்சிகளின் பலனாக ஜெனிவாவில் சிறிலங்கா அரசுக்கெதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது ஒரு வகையில் ஈழத்தமிழ்மக்களின் உரிமைகளை சர்வதேச அளவில் ஓரளவு நிலைபெறச் செய்வதற்கான தளத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கின்றது.
மறுவளமாக, இனவிடுதலைக்கான நகர்வுகள் என்ற அடிப்படையில் நோக்கும்போது, முள்ளிவாய்க்காலின் பின்னரான சுழலை வெல்லுதலும் மீள் எழுதலும் என்பது கடினமான காரியமாக இருப்பதாகவே உணரப்படுகின்றது.
ஏனெனில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பிலும், தற்போது நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும், சர்வதேசத்தில் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அப்பால், கடந்த மூன்று வருடத்தில் ஈழத்தமிழினம் தன்னை முள்ளிவாய்க்கால் பின்னடைவிலிருந்தும் அதன் அழிவிலிருந்தும் மீள் ஒழுங்குபடுத்தி அரசியல், சமூக ரீதியாக விடுதலைப்போராட்டத்தை எந்தளவிற்கு முன்னகர்த்தியுள்ளது என்பதும் பாரிய அழிவைச் சந்தித்துள்ள இனத்தின் விடுதலையை நோக்கி தனித்துவமான நிகழ்ச்சி நிரலுக்குள் ஒருமுகப்பட்டு செயற்படுகின்றதா? என்பதும் மூன்று வருடங்களைக் கடந்தும் தொடர்கின்ற கேள்விகளாகவே உள்ளன.
அதேவேளை, ஈழத்தமிழர்களைப் போரில் வெற்றிபெற்ற மனோபாங்கைக் கொண்டுள்ள சிங்களத்தின் பேரினவாத சிந்தனை, இன்று அவர்களின் தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வேரூன்றி வியாபித்து நிற்கின்றது.
பண்பாடு, கல்வி, அரசியல், பொருளாதாரம் என அனைத்து வேர்களிலும் ஊடுருவியுள்ள இனவாதம், இலங்கைத் தீவின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வை ஆட்டிப்படைக்கும் சக்தியாக மேலும் முனைப்புப் பெற்றுள்ளது.
சிங்களப் பேரினவாதத்தின் தற்போதைய பிரமாண்டமான வளர்ச்சியும், எழுச்சியும், அம்மக்களின் சமூக எண்ணவியக்கத்தில் அது புரியும் ஆதிக்கமும், எமக்கு ஒரு யதார்த்தபூர்வமான அரசியல் உண்மையைப் பறைசாற்றுகின்றது.
அதாவது, பகை மற்றும் ஆதிக்கவெறியுடன் சிங்களப் பேரினவாதம் பூதாகரமாக வெளிப்பட்டு நிற்கையில், புலிகளின் ஆயுதப்போராட்டப் பின்னடைவை அடுத்து, ஈழத்தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்நகர்த்தும் விடயத்தை மிகவும் ஆழமாக உற்று நோக்கினாலன்றி, சுதந்திரவிடுதலை சாத்தியமற்றது என்ற அப்பட்டமான உண்மையை நிராகரிக்க முடியாது.
முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவிற்குப்பின் ஈழஅரசியல் என்பது முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலை, போர்க்குற்றங்களின் அடிப்படையிலிருந்து உருவாக்கம் பெறுகின்றது.
இதனூடாக எப்படிப்பட்ட தீர்வு கிடைக்கும். அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது தெளிவில்லாத நிலையில் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய விடுதலைப் போராட்டத்திற்கான ஒரு நம்பிக்கையை சர்வதேசத்தில் ஏற்படுத்தியிருக்கின்றது.
இன்றைய சர்வதேச அரசியல் சூழலில் உரிமைப் போராட்டம் என்பது சர்வதேச நிகழ்ச்சி நிரலின் பின்னால் இயைந்து, இணைத்து, முன்நகர்த்திச் செல்லப்படவேண்டும் என்பது அவசியமானதே.
இருந்தாலும், சுயநலன்களின் அடிப்படையில் உருவாகும் உலக மேலாண்மை சக்திகளின் ஆதிக்க அரசியல் நோக்கத்திற்குள் ஈழத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் மனித அவலம் அவசியப்பட்டது. இதன் வெளிப்பாடாகவே ஜெனிவாத் தீர்மானம் அமைகின்றது என்ற விடயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஏனெனில் வல்லாதிக்க சக்திகளில் நிகழ்ச்சி நிரலில் மகிந்தவைப் பயன்படுத்தி விடுதலைப்புலிகளை இல்லாதொழித்துவிட்டு, அங்கு தான் விரும்பும் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, தமிழ் மக்களுக்கு ஜக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வை வழங்கும் திட்டம் இருந்தது என்ற கருத்துக்களும் இருந்தன.
எனவேதான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மையப்படுத்தப்பட்ட போர்வெற்றியின் பிரதான பங்காளியான சரத் பென்சேகாவை, ஜ.தே.க கட்சி சார்பில் களமிறக்கியது. இது ஈழத்தமிழ் அரசியல் நிகழ்ச்சி நிரலில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
அதேநேரம், தாயகத்தில் ஈழத்தமிழனினத்தின் இருப்பை இல்லாதொழிக்கும் சிங்களத்தின் நீண்டகாலத் திட்டம் கனகச்சிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதை எதிர்கொண்டு தமிழினத்தின் தனித்துவமான சமூக, பொருளாதார, அரசியல் இருப்பிற்கான அடிப்படைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற யதார்த்தத்தினை இவ்வருட மேதின அறிக்கையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளிப்படுத்திய ஆதங்கத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.
அதாவது “போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்க வேண்டும். தமிழ்த்தேசத்திற்கான சுயாதீன பொருளாதாரத்தை நாமே கட்டி எழுப்புவோம். எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சிங்கள தேசம் உதவப்போவதில்லை.
நாம் புலம்பெயர் மக்களின் உதவியுடன் எமது பொருளாதாரத்தை நாமே கட்டியெழுப்புவோம். எமது மக்களை அவரது சொந்தக்காலில் நிற்கச் செய்வோம் என்பதுடன் சிங்களம் அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் தேசத்தில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், கடந்தகாலத்தில் நடைபெற்றதைப்போன்று எதிர்கால சிங்களமயமாக்கல் நடவடிக்கைகளை மையப்படுத்திச் செல்கின்றன” என்று கூறப்பட்டுள்ளது.
எனவே தாயகத்தின் கள யதார்த்தத்தையும் புரிந்து கொண்ட அரசியல் நகர்வுப்பாதையே ஈழத்தமிழினத்தின் இருப்பிற்கான அடிப்படையாக அமையும். சர்வதேச நிகழ்ச்சி நிரலின் இறுதி அடைவிடமும் அதற்காக எடுக்கும் காலமும் வரையறுக்க முடியாதவை. ஆனால் அதற்கு நீண்டகாலம் எடுக்கும் என்பது மட்டும் வெளிப்படையானது.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் தீவிரம் பெற்ற சிறிலங்கா அரசின் கொள்கைகளில் முதன்மைத் தந்திரோபாயங்களாக அமைவது ஈழத்தமிழினத்தின் இருப்பிற்கான அடிப்படைகளை இல்லாதொழித்து, தன்னாட்சிக் கோட்பாட்டிற்கான மூலகாரணிகளை இல்லாது ஒழிப்பதற்கான செயற்பாடுகளை பலமுனைகளில் பல வடிவங்களில் செய்துகொண்டு வருகின்றது.
வடக்கு, கிழக்கை தொடர் இராணுவ பிரசன்னத்திற்குள் வைத்துக்கொண்டு, குடியேற்றம், மறைமுக இனஅழிப்பு, இன விகிதாசாரமற்றத்தை ஏற்படுத்தல், போராட்ட சிந்தனையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கல், பொருளாதாரத்தில் தங்குநிலையை ஏற்படுத்தல், ஆளுமையற்ற அடிமைப்பாங்குள்ள சமூகமாக ஈழத்தமிழினத்தை உருவாக்குதல் என்ற இலக்குகளில் அடிப்படையில் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.
இதன்மூலம் தமிழினம் இயல்பாக தனக்கான தனித்துவத்தை இழந்து போகும். அதேவேளை, தாயகத்தில் அரசியல் பெரும்பான்மையைக் கொண்டுள்ள கூட்டமைப்பு ஈழத்தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை பலவீனப்படுத்தாமல், காத்திரமாக தனது அரசியல் முன்னெடுப்புக்களை செய்யவில்லை என்ற பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் வரை புலிகளின் அரசியல் செல்வாக்கினுள் தனக்கான இருப்பை அமைத்துக்கொண்ட கூட்டமைப்பு, கடந்த மூன்று வருடங்களாக பிராந்திய, சர்வதேச அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் பயணிப்பது மட்டுமல்ல தமிழ்மக்களின் அரசியல் அடிப்படைகளை கைவிட்டுவிட்டது என்ற சந்தேகங்களும் கருத்துக்களும் உருவாகும் வகையில் தனது கருத்துக்களையும் முன்வைக்கின்றது.
தனித்துவமான அரசியல் தளத்தில் இயங்காத அதன் தலைமைத்துவம், சுய அடையாளத்தையும் சுயமரியாதையும் இழந்து தனக்கான அரசியல் நகர்வை செய்யப்போகின்றதா? அல்லது ஈழத்தமிழர்களின் அடிப்படைகளில் இருந்து கொண்டு அங்கு செய்யவேண்டிய அரசியல் அடைவுகளிற்காக பிராந்திய, சர்வதேச அரசியலை தனக்கு வாய்ப்பாக பயன்படுத்தப் போகின்றதா? அல்லது அவர்களின் நிகழ்ச்சி நிரல்களிற்குள் இயங்கும் ஒரு தரப்பாக செயற்படப்போகின்றதா? என்பது கவனத்துக்குரியதாக உள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்துடன் ஆயுதப் போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில் இனத்தின் இருப்பை தக்கவைப்பதற்கானதும் விடுதலைக்கானதுமான அனைத்து விடயங்களும் அது கொண்டிருந்தது. அப்போது கணிசமான அளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்த சிங்களத்தின் தமிழர் தாயகச் சிதைவுத் தந்திரோபாயங்கள் தற்போது மிகவும் மூர்க்கத்தனமாக முன்னெடுக்கப்படுகின்றன.
இதையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சுட்டிக்காட்டியிருந்தது. ஆனால், தமிழ் மக்களின் இருப்பிற்கான அடிப்படைகளை அழிவுக்குள்ளாக்கும் இச்செயற்திட்டங்களை எதிர் கொள்வதற்கான வேலைகளை ஈழத்தமிழினம் செய்கின்றதா?
அரசியல் அடைவிற்கான அல்லது சர்வதேச தலையீட்டிற்கான வாய்ப்பு ஏற்படும் காலப்பகுதிக்குள் தாயகத்தில் வாழும் ஈழத்தமிழினம் தனது சுயத்தை தக்கவைக்குமா? கல்வியில், பொருளாதாரத்தில், இனவிகிதத்தில், கலாச்சாரத்தில், அடிப்படை வாழ்வியலில் பொருளாதாரத்தில் தம்மை சுயமாக நிலை நிறுத்துமா?
சிங்களத்தால் திட்டமிட்டு, மௌனமான நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனப்படுகொலைக்குள் தார்மீக உதவியற்ற, பலவீனமான நிலையில் எவ்வாறு தாயகத்தில் தமிழினம் தன்னை தக்கவைக்க முடியும்? அல்லது அதற்காக பாடுபடும்? என்ற கேள்விகள் மூன்று ஆண்டுகள் கடந்தும் விடையின்றித் தொடர்வது வேதனையானது.
எதிர்கால அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தில் சர்வதேசத்தின் பின்னால் ஒடுவது என்ற தீர்மானத்தில் மட்டும் தனித்து செயற்பட முடியுமா?. இது புலம்பெயர் தேசத்தில் முன்னெடுக்க வேண்டிய பிரதான பணியாகும் என்பதை மறுப்பதற்கில்லை.
அதேவேளை, சர்வதேசத் தலையீடு வரும்வரை, நாம் நீண்டகாலப் போரினால் பாதிக்கப்பட்ட தாயகத்து சமூகத்தின் சமூக, அரசியல், பொருளாதார இருப்பை தக்கவைக்கும் முயற்சிகளை “சர்வதேச தலையீடு வரும் வரை பொறுமைகாப்போம்” என்ற தீர்மானத்திற்குள் அப்படியே விட்டுவிடமுடியுமா?
மூன்று வருடங்களைக் கடந்தும் ஒரு அரசியல் வெளியில் நிர்க்கதியற்றுப் பயணிக்கும் ஒரு நிலையில், தமிழர்களை கையேந்தும் சமூகமாக உருவாக்க சிங்களம் திட்டமிட்டு மேற்கொள்ளும் செயற்திட்டங்களை எவ்வளவு காலம் மௌனித்துப் பார்க்கமுடியும்.
எதிர்காலத்திலும் இனவிடுதலையை தாங்கும் சமூகமாக இருக்கும் தாயகத்து மக்களுக்கு தற்போது நடைபெறும் நிகழ்ச்சிகள் எல்லாமே அனுபவங்களாகப் பதியப்படுகின்றன. எதிர்காலத்தில் அரசியல், சமூகம் தொடர்பான விடயங்களில் அவர்கள் தீர்மானம் எடுக்கும் போது தற்போதைய சம்பவங்களின் தாக்கத்தின் பிரதிபலிப்பும் இருக்கும் என்பது கவனத்திற்குரியது.
எனவே ஈழத்தமிழ் மக்களிற்கான பலம் சுயமாக கட்டியெழுப்பப்படும் வரை அந்த சுயபலத்தை தோளில் சுமக்க வேண்டிய மக்கள் சமூகத்தின் பலமாக நின்று, அவர்களை வலிமையான சமூகமாக உயர்த்திவிடுதல் என்பது தற்போதைய இடைமாறு காலத்தில் அவசியமாகின்றது.
ஏனெனில் இன்றும் பொருளாதார உதவிகளின்றி பசி, பட்டினி, தற்கொலை மற்றும் வாழ்வாதாரம் ஆக்கப்படும் பாலியல் தொழில் என அவலங்களின் மத்தியில் எமது இனம் தவித்துக் கொண்டிருக்கின்றது. உயிர்வாழ்வதற்காக எதையும் இழக்கத் தயாரான ஒரு சமூகமாக எமது சமூகம் மாற்றங்கண்டு வருவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு பல வகைகளில் நெருக்கடிக்குள் வாழ்கின்ற எமது சமூகத்தை எப்படி கட்டமைக்கப் போகின்றோம்?. மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தொடரும் கேள்விகளுக்கு உறுதியான பதில் கிடைக்கப்பெற்றால் மட்டுமே ஈழத்தமிழினத்தின் இருப்பு இலங்கைத்தீவில் உறுதிப்படுத்தப்படும்.
இத்தனை வருடங்களாக ஈழத்தமிழினம் சுமக்கும் அவலங்களுக்கு ஒரு விடிவு வேண்டும். அர்ப்பணிப்புக்களுக்கும் தியாகங்களுக்கும் அர்த்தம் வேண்டும். கோரிக்கைகளுக்கு நியாயம் வேண்டும். எமக்கான கடமையின் அவசியத்தையும் அவசரத்தையும் மீண்டும் ஒருமுறை சொல்லிச் செல்கின்றது முள்ளிவாய்க்காலின் மூன்றாம் வருடம்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தன்னை எட்டி உதைத்து, ஆத்திரமூட்டி எகத்தாளம் செய்யும் ராஜபக்சே கும்பலிடம் இந்தியா ஏன் இப்படி அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும்? ...மேலும் வாசிக்க
தன்னை எட்டி உதைத்து, ஆத்திரமூட்டி எகத்தாளம் செய்யும் ராஜபக்சே கும்பலிடம் இந்தியா ஏன் இப்படி அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும்?

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விரும்பினார் என்று திமுக ...மேலும் வாசிக்க
இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விரும்பினார் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.சென்னையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் எழுதிய 5 நூல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:தமிழன் தலைகுனிந்து கிடப்பது ஜனநாயகத்தின் பெயரால் அல்ல. கடந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட முடிவுகளால் அல்ல. தேர்தல் தோல்வியைப் பற்றி கவலைப்படுகின்ற கட்சி அல்ல திராவிட முன்னேற்ற கழகம். நமக்குள்ளே இன ஒற்றுமை இல்லை. நமக்குள்ளே மொழி ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. இதை மறுத்தும் பயனில்லை.இலங்கை தமிழர்களுக்காக, ஈழத்தமிழர்களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்பதை இந்த நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக வைத்துக் கொண்டு வீரமணியிடமும், சுப.வீரபாண்டியனிடமும் உரையாடினேன். அவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டப்பட்ட நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்துவிட்டு, எனக்கும் ஒரு தோதான தேதியில் சென்னையில் அமர்ந்து பேசி தமிழ் ஈழ, தனி ஈழ விடுதலைக்கான, டெசோ அமைப்பு மாநாட்டை சென்னையில் விரைவில் நடத்த இருக்கிறோம்.திமுக சார்பில் ஆட்சியமைக்கப்பட்டு நான் முதல்வரானதும் மரியாதை நிமித்தமாக ராஜீவ் காந்தியை சந்தித்தேன். இப்போது ஒரு ரகசியத்தை நான் உங்களிடம் சொல்கிறேன். என்னிடம் ராஜீவ் காந்தி, பிரபாகரன் எப்படி இருக்கிறார்? என்று கேட்டார். பிரபாகரன் தலைமையில் தனித்தமிழ் ஈழம் உருவாக என்னால் ஆன உதவிகளை செய்வேன் என்று கூறினார். அதற்குள் ஏதேதோ தமிழ்நாட்டில் நடந்துவிட்டது. இதன் காரணமாக அந்த முயற்சி தொடரவில்லை. அந்த முயற்சி தொடர்ந்திருந்தால் ராஜீவ் காந்தியே தனித் தமிழ் ஈழத்தை பெற்றுத் தந்திருப்பார் என்றார் கருணாநிதி.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


யாழ்.குடாநாட்டைக் கலங்க வைத்த, இரத்தக் கறை படிந்த குமுதினிப் படகுப் படுகொலையின் 27ஆவது ...மேலும் வாசிக்க
யாழ்.குடாநாட்டைக் கலங்க வைத்த, இரத்தக் கறை படிந்த குமுதினிப் படகுப் படுகொலையின் 27ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும்.1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட  நாள்.
 நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள், இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.
நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள்.
இதன்பின் ஈவிரக்கமின்றி கத்தியால் குத்தியும் கோடரிகளால் வெட்டியும் அவர்கள் கொல்லப்பட்டனர். குற்றுயிரானவர்கள் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் கிடந்தனர். பயணிகளில் சிலர் கடலில் பாய்ந்து தப்பிக்க முயன்றனர். அவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்
பொது மக்களின் அன்றாட கடல் போக்குவரத்துக்கு குமுதினிப் படகே முக்கிய சாதனமாக இருந்தது. அவர்களது வாழ்வோடு இணைபிரியாத ஒன்றாக இருந்தது எனலாம். ஆனால் இதே நாள் இப்படகு படுகொலையின் இரத்தச் சாட்சியாக வரலாறாகி நிற்கிறது.
இவ்வாறான வெறித்தனமான தாக்குதலின் பின் காயமடைந்தோர் புங்குடுதீவு வைத்தியசாலை, யாழ்.போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களைத் தேடி அந்த வன்முறையாளர்கள் சாட்சிகளை அழித்திட மேற்படி வைத்தியசாலைகளில் அலைந்ததும் உண்டு. 
ஏழு மாதக் குழந்தை முதல் வயோதிபர்கள் வரை ஈவிரக்கமின்றி நடுக்கடலில் படுகொலை செய்யப்பட்டமை குறித்து இதுவரை இந்த ஜனநாயக நாட்டில் உரிய நீதி கிடைக்காது வருடாவருடம் அந்த அப்பாவி மக்களை நினைவுகூருவது மட்டுமே யதார்த்தமாகியுள்ளது.
27வருடங்கள் கடந்தாலும் அரச பயங்கரவாதத்தின் இரத்தசாட்சியம் இந்த குமுதினி படகு படுகொலை

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் ...மேலும் வாசிக்க
திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது. இந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது. மானிப்பாயில் பிறந்த பொழுதும் திருமலை அரசடி வாழைத் தோட்டம் என்னும் ஊர்தான் இவரை சிறு பராயத்தில் இருந்து மாபெரும் வீரனாக வீரத்தை ஊட்டி வளர்த்த மண். தந்தை ஜோசப்புக்கும் தாய் திரேசம்மா (பரிபூரணம்) அவர்களுக்கும் மகனாக பிறந்தவன் தான் பிரிகேடியர் சொர்ணம். இவனது இயற்பெயர் அன்ரனிதாஸ். இவன் இளைமைக் காலத்திலேயே குறும்புத்தனம் மிக்கவனாகவும் உயர்ந்த கம்பீரமிக்க தோற்றமுடைய ஆற்றல் மிக்க சிறுவனாக வளர்ந்து வந்தான்.
பாடசாலையிலும் திறமையுடன் படித்து உயர் தரம் வரை சென்றான். உடற் பயிச்சியிலும், தற்காப்புக் கலையிலும் சிறப்புறச் செயற்பட்டு சிறந்த மாணவனாக திகழ்ந்தான். மாணவப் பருவத்தில் பொதுப் பணிகள், வேலைகள் என்றால் இவன் தான் முன்னிப்பான்.
இக்கால கட்டத்தில்தான் தமிழர்கள் வாழ்ந்த மண்ணை சிங்களவர் சிங்கள பூமியாக்க மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் தமிழர்களுக்கு எங்கும் எதிலும் அநீதி, படுகொலைகள், கற்பழிப்புக்கள் இதைக் கண்டு சிறுவயதிலே கொதித்தெழுந்தான்.
திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் உயர்தரம் பயின்றுகொண்டிருந்த வேளையில் சிங்கள இராணுவத்தினரும் இனவாதிகளினதும் கொடூரங்களைக் கண்டு இவ் அநீதியை தட்டிக்க கேட்க வேண்டும் என்றால் போராடித்தான் ஆகா வேண்டும் என்று தன்னை போராட்டத்தில் இணைத்துக் கொள்ள விரும்பினான் அக்காலகட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு வழிகளில் போராடிக் கொண்டிருந்தன. அதில் சரியான பாதையை தேர்தெடுப்பது என்பது அக்கால கட்டத்தில் மிகவும் சிக்கலான விடயம்.
ஆனால் தனது இலட்சிய போராட்டத்திற்கு சரியானது விடுதலைப் புலிகள் இயக்கம் தான் என்று 12.09.1983ல் தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்கிறான். எமது தேசியத் தலைவரின் செயற்பாட்டிற்கு ஊடாகச் சரியானதோர் முடிவெடுத்து எமது போராட்டத்தின் அத்திவாரக்கற்களாக திகழ்ந்த மூத்த தளபதிகளில் இவனும் ஒருவனாக நின்று போராட்டத்தை வளர்த்தெடுத்தான்.
சொர்ணம் என்ற பெயருடன் சமர்ப்புலி வளரத் தொடங்கியது. பயிற்சிக்காலங்களில் திறம்படச் செயற்பட்ட இவன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, மணலாறு மாவட்டங்களிலும் அதன் காடுகளிலும் எதிரியை திணறடித்தவன் இவ் மாவட்டங்களில் பெரும் காடுகளுக் கூடாக நீண்ட நடை பயணத்தை சோர்வின்றி மேற்கொண்டு போராட்ட பணிகளை திறம்படச் செயற்படுத்தினான். வேவு அணி, பதுங்கித்தாக்கும் அணி, விநியோக அணி, வழிகாட்டிகள் என காட்டிற்குள் பல அணிகளை உருவாக்கி கிழக்கு மாகாணத்தில் எதிரியின் தடைகளை எல்லாம் சவாலாக ஏற்று எதிர்த்து நின்று போராடி சாதனைகள் படைத்தவன்.
இவனது போரிடும் ஆற்றலையும் முடிவெடுக்கும் தன்மையையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இனங்கண்டு இதற்கமைவாக தலைவர் அவர்களால் கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்துக்காட்டிய கட்டளைத் தளபதியாகத் திகழ்ந்தான். “சொர்ணம் கதைக்கிறான் என்றாலே சிங்கள இராணுவத்திற்கு கதிகலங்கும்” அந்த அளவுக்கு தனது போரிடும் ஆற்றலை வளர்த்துக்கொண்டவன்.
இவ்வாறு இவன் வெற்றிவாகை சூடிய சமர்க்களங்களே அதிகம் ஆகாயக் கடல் வெளிச்சமர், மாங்குளம், தவளைப் பாய்ச்சல், மண்டைதீவு, மண்கிண்டி மலை, இதய பூமி, புலிப்பாய்ச்சல், சூரியக் கதிர், ஓயாத அலைகள் எனப் பல வெற்றிச் சமர்களை எல்லாம் வழிநடத்திய சமரக்களத் தளபதிகளில் இவனும் ஒருவனாகத் திகழ்ந்தான். இவன் படை ஒழுங்கு படுத்தும் சிறப்பை “புலிப்பாய்ச்சல்” நடவடிக்கையில் கண்டு வியப்படைந்தோம்.
ஜெயசீக்குறு படையினர் மீது திட்டமிட்ட தாக்குதல் மேற்கொள்ள பலமுறை தேசியத் தலைவரிடம் அனுமதி கேட்ட போதும் கிடைக்கவில்லை. ஜெயசிக்குறு படை ஒட்டிசுட்டான் வரை முன்னேறி நிலைகொண்டிருந்த வேளையில் தேசியத் தலைவர் அவர்களால் ஒட்டிசுட்டான், நெடுங்கேணி, கருப்பட்ட முறிப்பு போன்ற படைத்தளங்கள் மீது திட்ட மிட்ட தாக்குதல் மேற்கொள்வதற்கு தளபதி சொர்ணத்திற்கும், தளபதி ஜெயம் அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது. பல வருடங்களாக ஆமை வேகத்தில் நகர்ந்து வந்த ஜெசிக்குறு இராணுவ நடவடிக்கையை மூன்று நாட்களில் பழைய நிலைக்கு வீரட்டியடித்த பெருமை இந்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணத்தையும் சாரும்.
இம்ரான் பாண்டியன் படையணியின் முதல் தளபதியாக விளங்கிய இவன் தலைவரை பாதுகாக்கும் பணியையும் பொறுப்பேற்றான். திறம்படச் செய்த வீரத்தளபதியுடன் தலைவர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சிலர் துரோகம் இழைத்த போது தலைவருக்கு அருகில் நின்று துரோகத்தை துடைத்தெறிந்தவன். தலைவர் அவர்களின் நம்பிக்கைக் குரியவர்களில் இவனும் ஒருவன்.
இக்காலகட்டத்தில்தான் திருமணம் செய்யுமாறு தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதன் படி ஜெனனி என்ற போராளியைத் திருமணம் செய்து 3 பிள்ளைகளை பெற்றெடுத்தான். தனது திருமணத்திற்கு தலைவர் அவர்கள் வருவார் என்பதால் தனது இடுப்பு வேட்டிக்குள் கைத்துப்பாக்கியை வைத்திருந்தபடி தாலி கட்டினான். அந்தளவுக்கு தலைவர் அவர்களின் பாதுகாப்பில் என்நேரமும் விழிப்பாக இருந்து தலைவர் அவர்களை ஆழமாக நேசித்தான். எமது விடுதலைப் போராட்ட விழுமியங்களில் இருந்து என்றுமே அவன் தவறியதில்லை. எமது விடுதலை மரபையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவன். அதே போல் தனது போராளிகளையும் வளர்த்தெடுத்தான்.
“நான் சொர்ணமண்ணையோட நின்ற நான் என்றால்” வேறு எந்தத் தளபதிகளும் எந்தக் கேள்விகளும் இன்றி அவனுக்கு கடமை வழங்குவார்கள். அந்தளவுக்குப் போராளிகளை புடம் போட்டு வளர்த்த ஆற்றல் மிக்க தளபதியாவான். இயக்கத்தில் இக்கட்டான காலங்களில் எல்லாம் திறம்படச் செயற்பட்டு தடைகளை உடைத்தெறிந்த தளபதிகளில் இவனும் ஒருவன்.
இந்த வீரத்தளபதி கேப்பாபுலவிலும், தேவிபுரத்திலும் ஊடறுப்பு தாக்குதல்களை வழிநடத்தி நூற்றுக்கணக்கான இராணுவத்தை கொண்று சிங்கள படையை திணறடித்தான். தேவிபுர ஊடறுப்பு தாக்குதலில் விழுப்புண் அடைந்து தனது கால் இயலாத நிலையிலும் முப்படைகளையும் பொறுப்பெடுத்து இறுதிமூச்சு உள்ளவரை எதிரியோடு சண்டைபிடித்துக் காட்டிய வீரத்தளபதி. இவன் தமிழீழ விடியலுக்காகவும் தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்விற்காகவும் 26 வருடங்கள் அயராது உழைத்த எமது கட்டளைத் தளபதி.
இவனது மூர்க்கமான சமரைக் கண்டு இராணுவம் கதிகலங்கியது. அதன் எதிர் தாக்குதலாக இராணுவம் பெருந்தொகையில் தமிழ் மக்களை கொண்றுகுவித்தது. மக்களுக்காகப் போரிடும் போது மக்களே இறக்கின்றார் என்ற போது இவனால் எதுவும் செய்ய முடியவில்லை.
எமது மண்ணினதும் மக்களினதும் விடிவிற்கான போராட்டத்தை நேசித்த இவனால் போராட்டத்தைக் கைவிட்டு சரணடைய முடியவில்லை. எனவே போராட்ட மரபுக்கேற்ப தனது இலட்சிய உறுதிப்பாட்டுடன் தன்னை தமிழீழ விடியலுக்காக 15. 05. 2009ம் நாள் தன்னை விதையாக்குகிறான்.
விதுரன்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


தமிழனின் வரலாற்றுப்பக்கங்களில் எப்போதுமே இரத்தக்கறையும் இரத்தவாடையும் காணப்படுவது சகஜமாகிவிட்டது. ஆனால் அந்த இரத்தக்கறைகளின் ரணங்கள் இன்றளவும் வலித்துக்கொண்டுதானிருக்கின்றன. இந்த நாள் 1955ம் ஆண்டு ஈழத்தின் தீவகக்கடற்பரப்பில் தமிழர்களின் குருதி ...மேலும் வாசிக்க
தமிழனின் வரலாற்றுப்பக்கங்களில் எப்போதுமே இரத்தக்கறையும் இரத்தவாடையும் காணப்படுவது சகஜமாகிவிட்டது. ஆனால் அந்த இரத்தக்கறைகளின் ரணங்கள் இன்றளவும் வலித்துக்கொண்டுதானிருக்கின்றன. இந்த நாள் 1955ம் ஆண்டு ஈழத்தின் தீவகக்கடற்பரப்பில் தமிழர்களின் குருதி கலந்தோடிய இன்னொரு கறுப்பு நாள்.
யாழ்ப்பாணத்திற்கு மேற்கே 34 மைல் தொலைவில் 10 சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ள அமைதியான தீவுதான் நெடுந்தீவு. அந்தத்தீவு அமைதியாக இருக்குமே தவிர அதை போய்ச்சேர்வதற்கான பயணமோ மிகக்கடினமானது. அந்த தீவு மக்களின் பயணத்திற்கு பக்கபலமாக இருந்ததுதான் குமுதினிப்படகு. அன்றைய காலத்தில் இருந்த படகுகளில் ஓரளவு சௌகரிகமான படகு குமுதினி. 1955ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையிலிருந்து குறிகாட்டுவான் இறங்குதுறையை நோக்கி தனக்கு நேரப்போகும் அசம்பாவிதத்தை அறியாமலேயே ஆர்ப்பரிக்கும் அலைகடலில் காலை ஏழு மணிக்கு பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்தது குமுதினிப்படகு.
குமுதினி புறப்பட்டு அரை மணித்தியாலத்தின் பின்னர் நடுக்கடலில் இரு பிளாஸ்ரிக் படகுகளில் வந்த இலங்கை கடற்படையால் வழிமறிக்கப்பட்டது. ஆறு கடற்படையினர் முக்கோணக்கூர்க்கத்திகள், கண்டங் கோடரிகள், இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். அப்பாவிப் பயணிகளின் பெயர்களை கூறச்சொல்லிவிட்டு கொலைவெறித்தாக்கதல் நடத்தப்பட்டது. பிறந்து ஏழே மாதங்களான பச்சிளம் பாலகி சுபாஜினி விஸ்வலிங்கம் கூட ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டாள். அன்பையும் அறநெறியையும் போதித்த புத்த பெருமானின் வாரிசுகளான அவர்களிடமிருந்து எதனையும் பெறமுடியாது போனது. ஏதும் அறியாத இந்த மழலை மேனியும் முக்கூர் முனை கொண்ட ஆயதத்திற்குப் பலியாகிப்போனது. ஒன்றரை மணி நேர வெறியாட்டத்தின் பின்னர் காடையர்கள் குமுதினியை கண்ணீருடன் கடல் நடுவே விட்டுவிட்டு காணாமல் போனார்கள்.
அலையாடும் ஆழியன்று சிவப்பாகிப்போனது. நயினையில் இருந்த அம்மனுக்கும் புத்தருக்கும் இந்த அப்பாவிகளின் அவல ஓலம் எப்படிக்கேட்காமல் போனதோ தெரியவில்லை. எப்போதும் காலையிலேயே குறிகட்டுவான் இறங்கு துறையினை வந்தடையும் குமுதினி அன்று வரவில்லை. மதியத்தில் பிறிதொரு படகின் துணையுடன் வந்தடைந்த போதும் அவசர அவசரமாக வெளியேறும் மக்கள் கூட்டத்தினை அன்று காணவில்லை. அவர்கள் சடலங்களாக மட்டுமே வந்து இருந்தனர்.
குமுதினிப்படுகொலையில் பங்கேற்ற எல்லாரா கப்பலும் காரைநகர் கடற்படைத் தளத்தில் இருந்து வந்திருந்த காடையர்களின் கப்டன் யு.ஐ.ஜெயவர்த்தனாவும் இணைந்து நடத்திய கோர தாண்டவத்தில் 7 மாதப்பச்சிளம் பாலகி சுபாஜினி விஸ்வலிங்கம் தொடக்கம் 70பது வயது தெய்வானையோடு 36 அப்பாவி பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர்
குற்றுயிருடன் மீட்கப்பட்டவர்கள் புங்குடுதீவு வைத்தியசாலையிலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கும் இலங்கை இராணுவம் வந்து தனது தேடலை தொடர்ந்தது. பயணிகள் உடனடியாக வைத்தியசாலையிலிருந்து விடுதிக்கு மாற்றப்பட்டும் மறைவிடங்களில் ஒளித்து வைத்தும் காப்பாற்றப்பட்டனர். இந்த மறக்கமுடியாத படுகொலையை இன்றுவரை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
இன்றும் குமுதினி தனது சேவையை பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறாள். ஆனால் கொல்லப்பட்டவர்களின் குருதி கலந்த கடல் இன்றும் குமுறிக்கொண்டுதானிருக்கிறது.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?இன்றைய பதிவில் தங்களுடன் ஒரு நகைச்சுவை கலந்த ஏமாற்று வேலைகள் சம்பந்தமாக கதைக்கப் போகிறேன். கடந்த சில நாட்களாக பதிவுலக அசம்பாவிதங்களால் நானும் எனது ...மேலும் வாசிக்க
வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?இன்றைய பதிவில் தங்களுடன் ஒரு நகைச்சுவை கலந்த ஏமாற்று வேலைகள் சம்பந்தமாக கதைக்கப் போகிறேன். கடந்த சில நாட்களாக பதிவுலக அசம்பாவிதங்களால் நானும் எனது வழமையான பதிவுப் பாணியை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. மதுரன் அடிக்கடி இதைக் குத்திக்காட்டுவான்.. “சும்மா சமூகம் சமூகம் என்று நெடுக எழுதாமல் றூட்டை மாத்துங்கப்பா” என்றான். இருந்தாலும் மனம் ஒப்பவில்லை. நாளை நான்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


போர் முடிவுக்கு வந்தவுடன் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார் - “பிரபாகரனுடன் அவரது ...மேலும் வாசிக்க
போர் முடிவுக்கு வந்தவுடன் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார் - “பிரபாகரனுடன் அவரது ஈழக்கனவும் செத்து விட்டது“ என்று. அவர் இவ்வாறு கூறி மூன்றாண்டுகள் கடந்து விட்டன. ஈழக்கனவை இப்போது சாகடிப்பதில் முன்னுக்கு நிற்பவர்கள், தமிழர்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்களே என்பது தான் வேதனை. எம்மையறியாமலே தமிழீழம் பற்றிய விவாதம் மேலோங்கி வரும் போது தான் இவர்கள், இதைச் செய்யத் துணிந்துள்ளனர். 
தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகள் என்று இன்றும் நம்பிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சொல்கிறார் – “நாங்கள் ஈழத்தைக் கேட்கவில்லை, ஒன்றுபட்ட இலங்கைக்குள் கௌரவமான வாழ்வைத் தான் கேட்கிறோம்“ என்று. அதேவேளை, கூட்டமைப்பின் இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சொல்கிறார்- “தமிழ்மக்கள் ஈழம் கேட்வும் இல்லை, அதனால் கூட்டமைப்பும் ஈழத்தைக் கேட்காது” என்று. 
சிங்கக்கொடிச் சர்ச்சையும் அதற்கு இவர்கள் இருவரும் கொடுத்துள்ள வியாக்கியானங்கள் குறித்த சர்ச்சைகளும் முடிந்து போவதற்குள், தமிழீழம் பற்றிய சர்ச்சையைத் தொடக்கி வைத்துள்ளனர். 
முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து மூன்றாண்டுகள் தான் முடிந்து போயுள்ளது. கண்முன்னே நடந்த போரும் அதன் கொடூரங்களும் மனதை விட்டு அகலவில்லை. முள்ளிவாய்க்காலில் வெடித்துச் சிதறிய –கடித்துக் குதறப்பட்ட போராளிகளின் ஆன்மாக்களின் துடிப்புக் கூட இன்னமும் அடங்கவில்லை. அதற்குள் தமிழீழத்தைத் தமிழ்மக்கள் கேட்கவில்லை என்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்துள்ளனர் என்பதற்காக, கூட்டமைப்பில் உள்ள தலைவர்கள், வாய்க்கு வந்தபடியெல்லாம் தமிழர்களின் சார்பில் பேச முடியாது. கொழும்பிலும், வெளிநாடுகளிலும் பெரும்பாலான காலத்தைக் கழித்துக் கொண்டு, பொழுதுபோக்கிற்காக அரசியல் செய்ய வந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு ஏன் வருகிறது என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. 
தமிழ்மக்கள் தமிழீழம் கேட்கவில்லை என்கிறார் சுமந்திரன். 
தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைமுறைத் தலைவராக வரக்கனவு காணும் அவருக்கு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு என்ற கடந்த காலம் மறந்து போனதா? 
அல்லது அதை அவர் குழி தோண்டிப் புதைக்கப் பார்க்கிறாரா என்று தெரியவில்லை. அது மூன்றரை தசாப்தத்துக்கு முந்திய வரலாறு என்பதால் சிலவேளை மறந்து போயிருக்கலாம். ஆனால் அதற்குப் பின்னர், 2009ம் ஆண்டு வரை தமிழர்கள் எதற்காக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள் என்பது கூடவா அவருக்கு மறந்திருக்கப் போகிறது. கொழும்பிலே குடியிருந்த ஒருவர் என்பதற்காக, தமிழீழம் என்ற இலக்கிற்காக தமிழர்கள் நடத்திய போராட்டத்தின் நியாயம் புரிந்திருக்காமல் போயிருக்க முடியாது. மகிந்த ராஜபக்ச மூன்றாண்டுகளுக்கு முன்னர் கூறியதற்கும் சுமந்திரன் இப்போது கூறியுள்ளதற்கும் இடையில் பெரிதான வேறுபாடு ஒன்றும் இல்லை. தமிழீழம் என்பது பிரபாகரனினதோ அவருக்குப் பின்னால் அணி திரண்டவர்களினதோ அபிலாசை மட்டும் அல்ல. அது பிரபாகரனின் கனவு என்று மகிந்த ராஜபக்ச எப்படி நினைத்தாரோ- அதுபோலத் தான் சுமந்திரனும் நினைத்துக் கொண்டிருக்கிறார் போலும். 
தலைவர் பிரபாகரனுக்குப் பின்னால், அணி திரண்ட போராளிகளும், கடைசிவரை இலட்சியத்துக்காக அவருடன் தளராமல் நின்று போராடிய மக்களும், புலம்பெயர் தமிழர்களும் தமிழீழத்தை தமது மூச்சாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 
இதைச் சுமந்திரன் அறியாமல் போனது ஏன்? 
அவ்வாறு அறிந்திருந்தால், அவர் தமிழ்மக்கள் தமிழீழத்தைக் கேட்கவில்லை என்று சுஸ்மா சுவராஜ் போலச் சொல்லியிருக்கமாட்டார். 
அதுவும் யாழ்ப்பாண மண்ணில் நின்று அவர் அவ்வாறு கூறியிருக்கமாட்டார். 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழத்தை அடைவதற்காக உருவாக்கப்பட்டதல்ல என்பதை அறியாத யாரும் இருக்க முடியாது. அத்துடன் தமிழீழத்தை கூட்டமைப்பு பெற்றுக் கொடுக்கும் என்று நம்புவதற்கு தமிழர்கள் ஒன்றும் முட்டாள்களும் இல்லை. ஆனால் கூட்டமைப்பின் சில தலைவர்கள் தமிழர்களின் தலைவிதியைத் தாமே தீர்மானிக்கின்றவர்கள் போல நடந்து கொள்வது தவறானது. சுமந்திரனோ அல்லது சம்பந்தனோ தாம் தமிழீழத்தை வலியுறுத்தமாட்டோம் என்று ஒரு சராசரி அரசியல்வாதியாக வேண்டுமானால் சொல்லியிருக்கலாம். தமிழர்களின் பிரதிநிதியாக நின்று கொண்டு அவர்கள், தமிழ்மக்கள் தமிழீழம் கேட்கவில்லை என்று சொல்ல முடியாது. அவ்வாறு சொல்லும் அதிகாரத்தை தமிழ்மக்கள் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. 
போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் தமிழக ஊடகம் ஒன்று தேசியத் தலைவரிடம், நீங்கள் தமிழீழத்தைக் கைவிட்டு விட்டால்? 
என்று கேள்வி எழுப்பியது. 
அதற்கு அவர், 
“நான் அவ்வாறு செய்தால், கூட இருக்கும் போராளிகளே எனக்குத் தண்டனை தருவார்கள்“ 
என்று பதிலளித்திருந்தார். 
அப்படிப்பட்டவர்களின் தியாகங்களினால் தான் கூட்டமைப்புக்கு மக்களினது அங்கீகாரம் கிடைத்தது என்பதை மறந்து போகக் கூடாது. அதுவும், தேசியப் பட்டியல் மூலம் ஆசனத்தைப் பிடித்தவருக்கு தமிழ்மக்களின் சார்பில் இவ்வாறு கூறும் அதிகாரம் கிடையாது. தமிழீழத்தைக் கேட்காமல் தான் கூட்டமைப்பு தேர்தலில் வென்றது என்கிறார் சுமந்திரன். 
அவ்வாறாயின், தமிழீழக் கோரிக்கையை நிராகரிக்கிறோம் என்று கூறி அவர்களால் வடக்கு மாகாணசபைத் தேர்தலைச் சந்திக்க முடியுமா? 
அதற்குத் தான் திராணி உள்ளதா? 
தமிழீழம் என்பது பெரும்பாலான தமிழர்களின் இலட்சியக் கனவாக - உயரிய அபிலாசையாக ஒவ்வொருவர் மனதிலும் உறைந்திருக்கிறது. 
அதை யாராலும் உடைக்க முடியாது. 
விடுதலைப் புலிகளின் போராற்றல் அழிந்த பின்னர் தேசியத் தலைவரின் மறைவின் பின்னர் இந்த இலட்சியத்தை வென்றெடுப்பதற்கான வழி வேண்டுமானால் அடைபட்டுப் போயிருக்கலாம்.
நிராந்தரமானது அல்ல. 
தமிழீழத்தை அடைய வேண்டும் என்ற வெறியும் வேட்டையும் அவாவும் சுமந்திரனிடமோ, சம்பந்தனிடமோ வேண்டுமானால் இல்லாமல் போயிருக்கலாம். 
மானமுள்ள தமிழர்களிடம் அந்த நம்பிக்கையும் உறுதியும் இன்னமும் குலையாமல் உள்ளது. 
இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவி சுஸ்மா சுவராஜ், புதுடெல்லியிலும் மதுரையிலும் இலங்கைத் தமிழர்கள் தமிழீழம் கேட்கவில்லை என்று கூறியுள்ளதற்குக் காரணம் சம்பந்தன் தான். 
சிங்கள அரசு நியாயமாக அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுத்தால், ஒன்றாக வாழத் தயார் என்று அவர் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். 
அது தான் இராஜதந்திரம். 
ஆனால் சம்பந்தன் அவ்வாறு செய்யவில்லை. 
அவர் ஒன்றாகத் தான் வாழ்வோம் என்று அடித்துச் சொல்லியுள்ளார். 
தமிழ் மக்களுக்கு ஒரு போதும் துரோகம் செய்யப் போவதில்லை என்று அடிக்கடி கூறிக் கொள்வதை அவர் செயலில் காட்டுவதில்லை. 
சம்பந்தன் இந்தியக் குழுவிடம் தமிழீழத்தைக் கேட்கவில்லை என்று வலியுறுத்தியதன் விளைவாக, அது தனியே புலிகளின் கோரிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. 
விடுதலைப் புலிகளை அழித்தவுடன் மகிந்த ராஜபக்சவும் இதையே சொன்னார். ஆனாலும் அவர் சொன்னபடி, ஈழக்கனவு சாகவும் இல்லை, அவரால் சாகடிக்கவும் முடியவில்லை. இன்று சம்பந்தனும் அவரது அரசியல் வாரிசும் தமிழீழக் கனவை சாகடிக்க முனைகின்றனர். சாத்தியமான வழியில் உரிமைகளை வென்றெடுப்பது என்ற கொள்கை நியாயமானதே. கூட்டமைப்பு தன்னால் எதைச் செய்ய முடியுமோ – எதைச் சாத்தியப்படுத்த முடியுமோ- அதைச் செய்யலாம். அதற்காக தமிழர்களின் இலட்சியக் கனவை விலை பேசி விற்க முனையக் கூடாது. இதே நிலைப்பாட்டில் தான் கூட்டமைப்பின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பர் என்பதில் சந்தேகமில்லை. 
தமிழர்களின் உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளதை உலகம் ஏற்கிற நிலை வந்துள்ள போது- தமிழர்களுக்கு சிங்கள அரசிடம் இருந்து நியாயமான உரிமைகள் கிடைக்க வாய்ப்பில்லை என்ற கருத்து சர்வதேச சமூகத்தினால் ஏற்கப்படும் நிலை உருவாகியுள்ள போது – தமிழீழம் என்ற இலட்சியத்தை இவர்கள் பலப்படுத்தாது போனாலும் பரவாயில்லை, பலவீனப்படுத்தாமல் இருப்பதே நல்லது. கூட்டமைப்புத் தலைவர்கள் தமிழீழத்துக்காக எதையும் செய்யா விட்டாலும் பரவாயில்லை, அந்தக் கனவை - இலட்சியத்தை சிதைக்காமல் இருப்பதே மேல். இதுவே தமிழீழத்துக்காக முள்ளிவாய்க்கால் வரை - போரிட்டுப் புதைந்து போன ஆன்மாக்களுக்கு அவர்கள் செய்யும் மிகப்பெரிய அஞ்சலியாக அமையும்.
கட்டுரையாளர் தொல்காப்பியன் இன்போ தமிழ் குழுமம்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


அன்பின் சம்பந்த சுமந்திர சிறீலங்கா தேச மைந்தர்களே..! சிங்கக் கொடி தூக்கி எம் சினம் தனித்த சிங்கங்களே…! அன்னை ...மேலும் வாசிக்க

அன்பின் சம்பந்த சுமந்திர சிறீலங்கா தேச மைந்தர்களே..! சிங்கக் கொடி தூக்கி எம் சினம் தனித்த சிங்கங்களே…!

அன்னை சிறீலங்கா மாதா உங்கள் கடவுளாம் காளியின் மறுபிறப்பே..! அவள் தம் வாகனமே எங்கள் கொடி நடுவே நிற்கும் சிங்கம். அவள் கரமிரு ஆயுதமே எம் சிங்கம் ஏந்திய வாள்..! சிரம் தாழ்த்தி ஏற்றோம்… உம்மிருவர் சிங்கக் கொடிதனைப் பற்றிய சீரிய விளக்கங்களை..!

வன்னிப் போரும் முள்ளிவாய்க்காலும் வதம்…! அசுர வதம்…! தமிழீழம் என்ற வேண்டா வேள்வி செய்த அசுரர்கள் அழிக்க நாம் செய்த வதம்..!

வதம் முடிந்து

ஆண்டுகள் 3 ஆகின்ற

இப் பொன்னான வேளையில்… தமிழீழம் மறுக்கும் தமிழ் தேசியம் மறந்த.. எம் இனிய தமிழ் பேசும் சிங்கங்களே… உம்மிருவரையும் காலி முகத்திடலுக்கு அழைக்கிறோம்..! சேர் பொன் இராமநாதன் காலத்து முத்துப் பல்லக்கும் தூசி தட்டி பெயிண்ட் அடிச்சு இருக்குது..! அதிலோ.. உமக்கான பவனியும் காத்திருக்குது..!

இஸ்ரேலின் கிபீரும் இந்தியாவின் மிக் 21 ம், சீனாவின் எவ் 7 ம் பாகிஸ்தானின் மல்ரி பரலும், ரஷ்சியாவின் கிளஸ்ரரும் அமெரிக்காவின் உளவும், இங்கிலாந்தின் ரவைகளும் அல்ல எம் வெற்றியின் பக்க துணை…! முள்ளிவாய்க்கால் வதம் தனில் நீர் காத்த மெளனமே.. எம் வெற்றியின் முதற் படி..! நாம் மனிதம் மறந்தாலும்.. நன்றி மறக்கும் இனமல்ல..!

வீர காளியின் வெற்றி முழக்கமிட்டு சிறீலங்கா மாதாவின் பாதம் தனில்… வெற்றியைக் கொண்டாடுவோம்.. மே 18 காலி முகத் திடலுக்கு…… சித்தார்த்தன், சங்கரி, வரதராஜப் பெருமாள் என்று விட்டகுறை தொட்டகுறையாய் எவரிருப்பினும் எல்லோரையும் ஓரணியில் படையாய் திரட்டி கூட்டி வாரீர்..!! நாட்டைப் பிரிக்க சூது செய்வோர் முகம் கவிழ நம் ஒற்றுமை செப்புவோம்..!

இனங்கள் மூன்றும்.. ஒன்றாய் சேர்ந்தே சிங்கார மொழியாம் சிங்களத்தில் சிறீலங்கா நமோ நமோ மாதா பாடி வெற்றி வீரர்களாம் தமிழர் சங்காரம் தனில் சாதனை செய்த எம் தவப் புதல்வர்களாம் துட்ட கைமுனுவின் வாரிசுகளை வாழ்த்துவோம்..!

இப்படிக்கு.. உங்கள் அன்பின்.. சகோதரத்துவம் மிகு.. சிங்கள.. பெளத்த பேரினவாத அரசும்.. அதன் பயங்கரவாத முப்படைகளும்..!

Filed under: ஈழம், கவிதை, கவிதைகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


யாழ். மே தினக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் சிங்கக்கொடி பிடித்த விவகாரம், தென்னிலங்கையில் பலத்த வரவேற்பைப் ...மேலும் வாசிக்க
யாழ். மே தினக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் சிங்கக்கொடி பிடித்த விவகாரம், தென்னிலங்கையில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.அதைத் தெரிந்துதான் செய்தேன் என்று அடம்பிடிப்பதால் சிங்களத்திற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. கொடி பிடித்து நல்லிணக்கத்தை உருவாக்கலாமென்று சம்பந்தன் கற்பிதம் கொண்டாலும் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேத்தானந்த தேரர் விடுவதாக இல்லை.வட கிழக்கு தமிழர் தாயகம் என்பது புனைக்கதை, பௌத்த கோவில்களை இடித்தே, திருக்கோணேஸ்வரமும் திருக்கேதீஸ்வரமும் கட்டப்பட்டதென தேரர் புது விளக்கம் தருகின்றார்.
திருமலை பத்திரகாளி அம்மனின் வாகனம் சிங்கம் என்பதால், பௌத்த கோவிலை உடைத்து காளி கோவில் நிர்மாணிக்கப்பட்டதாக மேதானந்த தேரர் கூற முற்படலாம்.இம் மாதத்தோடு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நிகழ்ந்து மூன்றாண்டுகள் ஆகின்றன.
இனக் கட்டமைப்புச் சிதைப்பு, கலாசார இனவழிப்பு என்கிற நிகழ்ச்சி நிரல், தம்புள்ளையிலிருந்து திருமலைப் பிள்ளையார் கோவில் வரை விரிவடைந்து செல்கிறது.வெசாக் பந்தலுக்கு அருகாமையில் மாட்டோடு செல்பவர்களின் உயிருக்கும் உத்தரவாதமில்லை.
இந்நிலையில், கிழக்கு மாகாண சபையைக் கலைத்து செப்டம்பரில் புதிய தேர்தல் ஒன்றை நடத்த அரசு திட்டமிடுவதாக செய்திகள் வருகின்றன. இலங்கை அரசியல் யாப்பின் 148 ஆவது பிரிவின் கீழ், பொது நிதித்துறையின் முழுக் கட்டுப்பாடும் நாடாளுமன்றின் கைகளில் இருக்கும் நிலையில், மாகாண சபைகளுக்கான காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் என்பவற்றோடு மாகாண நிதியம் குறித்த விடயங்களும் நோக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.
1987 நவம்பரில் அரசியலமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தில் நிதி ஆணைக்குழு (Financial Commission) உருவாக்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாணைக்குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரி செயலாளர் மற்றும் மூவினங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் நிதி, சட்டம், நிர்வாகம், வர்த்தகம் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெறற மூவரும் இடம்பெறுவார்கள்.
இக்குழுவுடன் ஆலோசித்து அதற்கான நிதியை வருடாந்த வரவு செலவுத் திட்டத்திலிருந்து அரசாங்கம் ஒதுக்கும். எல்லாவற்றையும், புதிதாக உருவாக்கப் படும் மாகாண நிதியத்தை (Provincial Fund),  ஜனாதிபதியும் மாகாண ஆளுநரும் நாடாளுமன்றமும் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது.ஒவ்வொரு மாகாணத்திற்கும் எவ்வளவு தொகையை ஒதுக்க வேண்டுமென்பதையும் இந்த உயர்குழுவே தீர்மானிக்கும்.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களைப் பற்றிப் பேசும் தமிழ் அரசியல்வாதிகள், இந்த நிதிப் பங்கீடு விவகாரம் குறித்து பேசுவதை தவிர்த்து விடுகிறார்கள்.ஆயினும் நாட்டின் திரட்டிய செல்வத்தின் நியாயமான பங்கினை, மாகாண சபைகளுக்கு கொடுப்பதற்கு நிதி ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென 13 ஆவது திருத்தச் சட்டம் கூறுவதை நடைமுறையில் கொண்டுவர வேண்டுமென அன்றைய வட கிழக்கு முதலமைச்சர் வரதராஜ பெருமாள், ஒன்றரை இலட்சம் இந்தியப் படை பக்கபலமாக இருந்த நிலையில் எதிர்பார்த்தார்.
எதுவுமே நடைபெறவில்லை. ஈழப் பிரகடனத்தை வெளியிட்டு இந்தியாவிற்கு சென்று விட்டார் வரதராஜா பெருமாள்.
பொறுப்புக் கூறும் தன்மையற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற மறுப்பது போன்று, தாமே உருவாக்கிய 13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட நிதி ஆணைக்குழுவினை நிறுவ அன்று மறுத்திருந்தது அரசு.
18 ஆவது திருத்தச் சட்டமானது, சகல ஆணைக்குழுக்களின் ஏகபோக அதிகாரத்தை ஜனாதிபதியின் கரங்களில் ஒப்படைத்துள்ள நிலையில், 13 ஆவது திருத்தச்சட்டத்தில் சொல்லப்பட்ட ஆணைக்குழுக்களுக்கு என்ன நடைபெறுமென்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை.
அரசியல் யாப்பில் 2001 இல் இணைக்கப்பட்ட 17 ஆவது திருத்தச் சட்டத்தினை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவருமாறு வலியுறுத்தும் கூட்டமைப்பின் புதிய பங்காளிக் கட்சியான யூ.என்.பி.க்கு, அதிக பெரும்பான்மையோடு 2010 இல் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது திருத்தச் சட்டம் நினைவில் இல்லை போல் தெரிகிறது.
13 ஆவது திருத்தச்சட்டம் அரசியல் தீர்விற்கான அருமருந்தென வியாக்கியானமளிப்போர், புதிதாக முளைத்த 18 ஆவது திருத்தச்சட்டம் பற்றி மக்களுக்கு விளக்க வேண்டும்.
அதிகாரப் பகிர்விற்கும் (Power Sharing), அதிகாரப் பரவலாக்கத்திற்கும் (Devolution of Power) இடையிலுள்ள வேறுபாட்டினை துல்லியமாக புரிந்து கொள்ள வேண்டுமாயின், 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள முக்கிய அமசங்களான காணி, காவல்துறை, நிதி போன்ற மூன்று விடயங்களை அவதானித்தாலே போதும்.
பெரும்பான்மை இனத்தின் ஒட்டுமொத்த இலங்கையின் இறைமையை, ஏனைய தேசிய இனங்களேõடு பகிர்ந்து கொள்ள சிங்களம் விரும்பவில்லை என்பது புரியும்.
எதனையும் தீர்மானிக்கும் இறுதியானதும் உறுதியானதுமான அதிகாரம், மத்தியில் இருக்க வேண்டும் என்பதுதான் இந்தப் பகிர்வு, பரவலாக்கம் என்கிற மயக்கமான வார்த்தைகள் ஊடாகப் புரியப்படுகிறது.
"இலங்கையின் தேசிய செல்வத்தை பங்கிட மறுக்கும் சிங்கள தேசம்' என்கிற தலைப்பிற்கு 2004 நவம்பரில் 'தராக்கி' சிவராம் வீரகேசரி வார இதழில் எழுதிய கட்டுரையையும், 13 ஆவது திருத்தச் சட்டம் ஒரு 'நகைச்சுவை அரங்கம்' என்று நடேசன் சத்தியேந்திரா அவர்கள் எழுதிய ஆழமான விமர்சனக் கட்டுரையையும் இப்போது மீண்டும் வாசிப்பது அவசியமாகிறது. 
 
அதில் ""தேசிய செல்வத்தின் மீதான ஏகபோக உரிமையை அனுபவிப்பவர்கள், ஏனைய அரசியல் சுக போகங்களையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்'' என்பதோடு, ""தேசிய செல்வத்தில் நியாயமான உரிய பங்கினை ஒரு பகுதியைத் தானும் எவ்வாறு செலவிடுவதெனத் தமிழரே தீர்மானிப்பதற்கான ஒரு கட்டமைப்பை (இடைக்கால தன்னாட்சி அதிகார சபை) பற்றியே விடுதலைப்புலிகள் பேசினார்கள்'' என்றும் தராக்கி குறிப்பிடுகின்றார்.
இவை குறித்து தமிழ் அரசியல்வாதிகள் கரிசனை கொள்வது போல் தெரியவில்லை.நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்குள் செல்ல வேண்டுமா? சிங்கக் கொடியை ஏந்த வேண்டுமா? மாகாணசபைத் தேர்தலில் குதிக்க வேண்டுமா? என்பது குறித்தே அதிகம் விவாதிக்கின்றார்கள்.
ஆனாலும் சர்வதேச அழுத்தங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள ஆட்சியாளர்கள் விரிக்கும் இராஜதந்திர வலைக்குள், தாமாகவே விழும் வகையில் இவர்கள் நகர்வது போலுள்ளது.
வட மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மேற்குலகம் அழுத்தம் கொடுக்கும்போது கிழக்கில் தேர்தலை நடத்த முயல்கிறது அரசு. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றச் சொன்னால், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் வாருங்களென்று ரவூப் ஹக்கீம் ஊடாக தூதனுப்புகிறது இலங்கையரசு.
ஆனாலும் சம்பந்தன் சுமந்திரனைப் பொறுத்தவரை, இந்திய -மேற்குலகின் நிகழ்ச்சி நிரலை தாம் புரிந்து கொண்டதாகக் கற்பிதம் கொண்டு, அதற்கேற்ற வகையில் தமது இராஜதந்திர காய் நகர்த்தலை மேற்கொள்வதாக கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் கூற முற்படுகிறார்கள்.
கொடி பிடித்த விவகாரத்தை நியாயப்படுத்தும் இவர்களின் நிலைப்பாடும் இதன் ஒரு அங்கமே .
வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு. எதற்காக வாக்களிக்கிறோம் என்பதைக் கேட்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு.ஆகவே, மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு முன்பாக அரசியல்தீர்வுத் திட்டம், அதற்கான வேலைத் திட்டம் என்பதை மிகத் தெளிவாக மக்கள் முன்வைக்க வேண்டும்.
ஏனெனில், முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திற்கும் தற்போது பேசுவதற்கும் பாரிய இடைவெளி காணப்படுகிறது.
நன்றி- வீரகேசரி

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்னொரு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் இழுத்துவிட அரசாங்கத் தரப்பு முனைப்புக்காட்டி வருகிறது. ஏற்கனவே ...மேலும் வாசிக்க
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்னொரு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் இழுத்துவிட அரசாங்கத் தரப்பு முனைப்புக்காட்டி வருகிறது. ஏற்கனவே பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து ஒரு வருடத்தை விரயமாக்கி அரசாங்கத் தரப்பு கைகழுவி விட்டது. தற்போது நாடாளுமன்றத் தெவுக்குழு என்ற பொறிக்குள்'' கூட்டமைப்பை இழுத்துவிட திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன. 
இது உண்மையில் பெரிய பொறி என்பதில் எவ்வித கருத்து வேறுபாடுகளுக்கும் இடமில்லை. இந்தப் பொறியில் கூட்டமைப்பு சிக்குவதன் மூலம் தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாஷைகளுக்கும் அரசாங்கத் தரப்பு பெரும்பான்மையின ஜனநாயகத்தின் மூலம் சவப்பெட்டிக்கான இறுதி ஆணியை அடிப்பதாகவே அமையும். 
பெரும்பான்மையின ஜனநாயகம் தமிழ் மக்களின் தலைவிதியை தனது இஷ்டம்போல் தீர்மானித்ததை கடந்த கால வரலாற்றில் நிறையவே பார்க்கலாம். 1948 ஆம் ஆண்டு சுமார் 10 இலட்சம் இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் தலைவிதியையே மாற்றியமைத்து அம் மக்களை அரசியல் அனாதைகளாக்கியது இந்த பெரும்பான்மையின ஜனநாயகமே.
அது மாத்திரமல்ல இந்த பெரும்பான்மையின ஜனநாயகம் எப்பொழுதும் தனக்கு சார்பான விடயங்களை நிறைவேற்றிக் கொள்வதில் தொடர்ந்தும் எதேச்சதிகார போக்கினையே கடைப்பிடித்து வந்துள்ளது என்பதும் இலங்கை வரலாற்றில் பதிவுகளாக உள்ளன. இப்பத்தியில் ஏற்கனவே ஒரு விடயத்தை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம். 
 
முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் புதிய ஸ்ரீலங்கா ஒழுங்கமைப்பை உருவாக்குவதற்கான முனைப்பில் அரசாங்கத் தரப்பும், கொள்கை வகுப்பாளர்களும் தீவிரவாத சக்திகளும் வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதாக இப்பத்தியில் (01.04.2012) இல் குறிப்பிட்டிருந்தோம். இந்தப் பயணத்திற்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழு மேலும் வலுவூட்டும் என்பதில் எவ்வித ஐயமில்லை. 
தெரிவுக் குழுவிற்கு எவ்வித நிபந்தனையும் இன்றி திறந்த மனதுடன் அதாவது அரச தரப்புடனான பேச்சுவார்த்தைக்கு கூட்டமைப்பு எவ்வாறு திறந்த மனதுடன் வெறுங்கையுடன் சென்றதோ அதேபோல் மீண்டும் வாருங்கள் என்று முன்நிபந்தனையாக அரச தரப்பு கூறியுள்ளது. 
 
இனவிவகாரத் தீர்வு நோக்கிய பயணத்தில் பல பேச்சுவார்த்தைகளை, ஒப்பந்தங்களை, வட்டமேசை மகாநாடு, சர்வகட்சி மகாநாடு என தமிழ்த் தலைமைகளும் சளைக்காது சென்று வெற்றியுடன் வெறுங்கையுடன் திரும்பிய வரலாற்றை தமிழ் மக்கள் அறிவர். 
 
பண்டா செல்வா உடன்படிக்கை, டட்லி செல்வா ஒப்பந்தம் என்ற வசையில் 1992 ஆம் ஆண்டு மங்கள முனசிங்க தெரிவுக் குழு அறிக்கை அரசியல் தலைமைத்துவங்களின் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் மரணித்தது. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக்களைக் கொண்ட குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியமித்தார். அமைச்சரும் பேராசிரியருமான திஸ்ஸ விதாரண தலைமையில் 18 மாதங்கள் இந்த குழு கூடியது. 64 கூட்டத் தொடரை நடத்தி அறிக்கையை ஜனாதிதியிடம் கையளிக்கப்பட்டும் இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை. 
 
இந்த ஒரு நிலையில் மீண்டும் ஒரு நாடாளுன்றத் தெரிவுக்குழுவை அமைத்து இன விவகாரத்திற்கு தீர்வைக் காணப் போவதாக அரசாங்கம் உரத்துக் கூறுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் இன விவகாரத்திற்கான தீர்வு குறித்து அரசாங்கம் தென்னிலங்கை சக்திகளும் எதைக் கூறினாலும் தென்னிலங்கை மக்கள் செவிசாய்க்கும் நிலையில் உள்ளனர். 
போரின் போது இனவிவகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும் என சிந்தித்த சிங்கள மக்கள் முள்ளிவாய்க்கால் போருடன் பெரும்பாலான சிங்கள தலைமைத்துவங்கள் சிந்திப்பது போல் இன விவகாரம் என்ற ஒன்று இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டனர். 
உண்மையில் அரசாங்கத் தரப்பை பொறுத்து குறிப்பாக ஜனாதிபதி இன விவகார தீர்வு குறித்து தனக்கு இருக்கும் பொறுப்பை தட்டிக் கழிக்கும் வகையில் நாடாளுமன்ற தெரிவுக் குழுவை பயன்படுத்த முனைகிறார். 
தெரிவுக் குழு மூலமாக அதிகாரப்பகிர்வு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுவதாக காட்டி ஜெனீவா மனித உரிமை பேரவையின் செயற்பாட்டை முடக்குவதும் நாடாளுமன்ற தெரிவுக் குழு நகர்வின் ஒரு அங்கமாகும். 
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பல தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷை குறித்த கடுங்கோட்பாட்டினைக் கொண்டிருக்கின்றன. ஒன்றும் கொடுக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்ளுடன் பேசுவதால் என்ன பயன் என்று தெரியவில்லை. 
மொத்தத்தில் நாடாளுமன்றத் தெரிவுக் குழு மேலும் காலத்தை இழுத்தடித்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஒரேயடியாக சாவு மணி அடிப்பதாகவே அமையும். 
அது மாத்திரமல்ல நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் மூலமான பெரும்பான்மையின ஜனநாயக முடிவினை உலகத்திற்கு உரத்து சொல்வதாகவும் அமையும். 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்து நாடாளுமன்றத் தெரிவுக் குழுவால் ஒன்றும் நடைபெறாது என்ற நிலைப்பாட்டில் கூட்டமைப்பில் ஒரு சாரார் இருக்கின்றனர். 
ஒன்றும் நடைபெறாது என்பதற்காக தெரிவுக் குழுவுக்கு போகாமல் இருக்க முடியாது போய்த்தான் பார்ப்போமே! இது இன்னொரு சாராரின் நிலைப்பாடாக உள்ளது. 
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு போகுமாறு அமெரிக்காவும் இந்தியாவும் வலியுறுத்துகின்றன. இவை கூறுவதை தட்டாது தெரிவுக் குழுவுக்குப் போவோம். தெரிவுக் குழு மூலம் ஒன்றும் நடைபெறவில்லை என்பதை உலகிற்கு உணர்த்துவோம். இது இன்னொரு சாராரின் நிலைப்பாடு. 
 
மொத்தத்தில் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு போகும் நிலையில் இருக்கின்றது. 
 
இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை கூடி ஆராயப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் இருவர் தெரிவுக் குழுவுக்குப் போவது பற்றி தெரிவித்த போது பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கு பற்றுவதா இல்லையா என்ற இழுபறிக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்வது குறித்த நீண்டகால இழுபறி விவகாரம் கூட்டத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
 
கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்யவில்லையெனில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பெரும்பாலானவர்கள் பிரிந்து சென்று கட்சிப் பதிவை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்ததாகவும், இது பற்றி முடிவெடுக்க ஒரு வாரம் அவகாம் கேட்கப்பட்டதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அதாவது கூட்டமைப்பு ஒரு தேர்தல் கூட்டாக அன்றி தமிழ் மக்களுக்கான அரசியல் கட்சியாக கட்டுப்பாட்டுடன், தூரநோக்குடன் செயற்பட வேண்டும் என்பதையே பதிவு பற்றி அக்கறை காட்டுவோரின் நிலைப்பாடாகவுள்ளது. 
 
மொத்தத்தில் எந்தவொரு விடயத்திலும் உறுதியான நிலைப்பாட்டினை எடுக்க முடியாத நிலையில் கூட்டமைப்புத் தடுமாறிக் கொண்டிருக்கின்றது என்பதே உண்மையாகும். அராங்கத் தரப்பினரின் சாணக்கியம், பேச்சுவார்த்தைப் பொறிக்குள் மாத்திரம் கூட்டமைப்பை வீழ்த்தி விடவில்லை. கூட்டமைப்பின் இருப்பையே ஆட்டம் காண வைத்துள்ளது.
 
தமிழ் மக்களுக்கு தற்போது இருக்கும் ஒரே ஒரு பற்றுக்கோடு கூட்டமைப்பு தான். அதனைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பு அதில் அங்கம் வகிக்கும் தலைமைகளுக்கு உண்டு. 
தமிழ் மக்களின் சார்பில் மீண்டும் இப்பத்தி மூலம் கோரிக்கையினை முன்வைக்கின்றோம். 
 
திறந்த மனதுடன் நிபந்தனைகள் எதுவுமின்றி நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வருமாறு நிபந்தனையுடன் கூடிய அழைப்பை அரசாங்கத் தரப்பு கூட்டமைப்பை நோக்கி விடுக்கும் இவ்வேளையில், கூட்டமைப்பு கடந்த காலங்களைப் போன்று வெறுங்கையுடன் பேச்சுவார்த்தை மேசைக்கு சென்றது போலல்லாது தமிழ் மக்களின் சார்பில் உறுதியான தீர்வுப் பொதியுடன் தெரிவுக்குழுவுக்கு செல்வதே நல்லது. 
அத்துடன் இன விவகார தீர்வு குறித்து கால அட்டவணைக்குள் தீர்வினை எட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வதாக இருந்தால் செல்ல வேண்டும். 
ஏனெனில் நாடாளுமன்ற தெரிவுக்குழு என்பது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை சவப் பெட்டிக்குள் வைத்து இறுதி ஆணி அடிக்கும் இறுதி நிகழ்வாக இருக்கும் என்பதை மனதில் கொண்டு கூட்டமைப்பும் தமிழ் தலைமைத்துவங்களும் தமது நகர்வை மேற்கொண்டாக வேண்டும். 
மொத்தத்தில் இனவிவகாரத் தீர்வுக்கென கூட்டமைப்பு சர்வதேச மத்தியஸ்தத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. 
 
 
-வி.தேவராஜ் 
வீரகேசரி- வார இதழின் பிரதம ஆசிரியர்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


இவர்களில் பலர் தமது குடும்பத்தவர்களைப் பராமரிப்பதற்காகவும், வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்துவதற்காகவும் பாலியல் தொழில்களில் ஈடுபடவேண்டிய ...மேலும் வாசிக்க
இவர்களில் பலர் தமது குடும்பத்தவர்களைப் பராமரிப்பதற்காகவும், வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்துவதற்காகவும் பாலியல் தொழில்களில் ஈடுபடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு IPS செய்தி நிறுவனத்திற்காக Feizal Samath எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் மூன்று பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் இறுதியில் காணாமற் போன மற்றும் இராணுவத்திடம் சரணடைந்த தமது கணவன்மார்களின் நலம் வேண்டி மே 18 அன்று சிறிலங்காவின் வடக்கில் வாழும் 800 பெண்கள் வரை இந்து மத வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளனர். "இறுதி யுத்தத்தின் போது காணாமற் போன மற்றும் சரணடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் யுத்தத்தின் போது கொல்லப்பட்டிருப்பதற்கான சாத்தியப்பாடுகள் தென்படுகின்ற போதிலும், தமது கணவன்மார் உயிருடன் இருப்பதாக தமிழ்ப் பெண்கள் தொடர்ந்தும் நம்பிக்கையுடன் வாழ்கின்றனர்" என சிறிலங்காவின் வட பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவர்களுக்காக பணிபுரியும் முதன்மையான மனித உரிமைச் செயற்பாட்டாளரான ஸ்ரீன் அப்துல் சரூர் [Shreen Abdul Saroor] தெரிவித்துள்ளார். "மறுபுறத்தில், தமது கணவன்மார் யுத்தத்தின் போது கொல்லப்பட்டு விட்டனர் என அறிந்தபோதிலும், தாம் ‘விதவைகள்’ என்ற பெயரில் வாழ்வதை இந்தப் பெண்கள் விரும்பவில்லை. இது அவர்கள் வாழும் சமூகத்தில் அவர்கள் மீது எதிர்மறை மனப்பாங்கைத் தோற்றுவித்துவிடும் என இவர்கள் கருதுகின்றனர். இதனால் இவர்கள் தம்மை குடும்பங்களைத் தலைமை தாங்கும் பெண்களாக அல்லது தனித்து வாழும் பெண்களாக தம்மை அடையாளங் காட்டிக் கொள்ளவே விரும்புகின்றனர்" எனவும் சரூர் மேலும் விபரித்தார். இந்து சமய முறைப்படி, கணவன்மாரை இழந்த பெண்கள் அபசகுனமாகக் கருதப்படுகின்றனர். இவர்கள் மீண்டும் திருமணம் செய்வதை இந்து சமயம் விரும்பவில்லை. சிறிலங்காவின் 20 மில்லியன் மக்களில் 12 சதவீதம் வரை காணப்படும் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இந்து மதத்தையும், சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் 74 சதவீதம் வரை காணப்படும் சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள் பௌத்த மதத்தையும் பின்பற்றுகிறார்கள். தமிழர்கள் அதிகம் வாழும் சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில், உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக 59,000 வரையான பெண்கள் யுத்த விதவைகளாக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பெண்களுக்கான புனர்வாழ்வுச் செயற்பாடுகள் மிகக் குறைவாகக் காணப்படுகின்றது. இதனால் இவர்களில் பலர் தமது குடும்பத்தவர்களைப் பராமரிப்பதற்காகவும், வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்துவதற்காகவும் பாலியல் தொழில்களில் ஈடுபடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். "நாங்கள் இவ்வாறான பாலியல் தொழில்களில் ஈடுபடும் பெண்களை அதிலிருந்து மாற்றுவதற்கு முயற்சிக்கின்றோம். ஆனால் இதை விட்டால் தமக்கு வேறு தெரிவு எதுவும் காணப்படவில்லை என அவர்கள் கூறுகின்றார்கள்" என அச்சத்தின் காரணமாக தனது பெயரை வெளியிட மறுத்துவிட்ட செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். சிறிலங்கா அரசாங்கத்தால் வடக்கில் பணிபுரிவதற்காக அனுமதி வழங்கப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் வீடமைத்தல், வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்கள், கட்டுமானத் திட்டங்கள் போன்ற அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அமைதி, மனவடு மற்றும் பெண்கள் உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் உந்துதலை வழங்கவில்லை. "அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்தவள் என நான் என்னைக் கூறினால் அங்கு பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. இவ்வாறான சூழலே இங்கு நிலவுகின்றது" என மன்னார் வடக்கு பெண்கள் அபிவிருத்தி நிலையம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கான மன்னார் பெண்கள் அமைப்பு ஆகியவற்றின் நிறுவுனரான சரூர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "சிறிலங்காவின் வடக்கில் சிறுமிகள் பாலியல் துர்நடத்தைகளுக்கு உட்படுத்தப்படுவது மிகப் பெரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 26 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற சிறுவர் பாலியல் சீர்கேட்டுச் சம்பவங்கள் பல வெளிக்கொண்டு வரப்படவில்லை" என ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாவது N-PEACE விருதைப் பெற்ற நான்கு வெற்றியாளர்களில் ஒருவரான சரூர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விருதானது நேபாளம், இந்தோனேசியா, சிறிலங்கா மற்றும் தீமோர் ஆகிய நாடுகளில் பெண்களுக்கு ஆதரவை வழங்கக் கூடியவாறு சமாதானம், சமஉரிமை, தொடர்பாடல், சமூகம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்கான மூலோபாயத்தில் பங்குபற்றி பாதிக்கப்பட்ட சமூகத்தின் பெண்களுக்கு உறுதுணையாக விளங்கும் பெண்களுக்கு வழங்கப்படுகின்றது. நாட்டில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலை மற்றும் குடும்பத்தைப் பாதுகாக்கும் ஆண்கள் இல்லாமை போன்றவற்றால் வளப் பற்றாக்குறை போன்றவற்றால் சிறிலங்காவின் வடக்கில் வாழும் இளம் பெண்களின் பாதுகாப்பு என்பது அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளது. "ஒன்பது வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தமது பிள்ளைகளின் பாதுகாப்புக் கருதி தாம் வீட்டுக்கு வெளியே செல்வதற்கு அச்சப்படுவதாக பெண்கள் கூறுகின்றனர்" என சரூர் தெரிவித்தார். "சிறிலங்காவின் வடக்கில் வாழும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்தப் பெண்களுக்கு, தமது மனவடுக்களை மனந்திறந்து பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இதனால் இந்தப் பெண்களுக்கான ஆற்றுப்படுத்தல் நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்" என யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சேவையாற்றும் மனித வள அபிவிருத்திக்கான விழுது அமைப்பின் நிறைவேற்று இயக்குனர் சாந்தி சச்சிதானந்தம் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட இறுதி யுத்தத்தில் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்களில் பெருந் தொகையானவர்கள் கொல்லப்பட்டமை மற்றும் மே 2009 இலும் அதற்கு முற்பட்ட மாதங்களிலும் சிறிலங்கா வான்படையினர் விமானத் தாக்குதல்களை மேற்கொண்ட போது அதில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களை மேற்குலக நாடுகள் மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் முன்வைக்கின்ற போதிலும் அவற்றை சிறிலங்கா அரசாங்கம் ஏற்க மறுக்கின்றது. யுத்தம் தீவிரம் பெற்றிருந்த இறுதிக் கட்டத்தில், யுத்தம் நடந்த வலயத்ததுக்கு செல்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன், யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் செயற்பட்டுக் கொண்டிருந்த அரச சார்பற்ற நிறுவனங்களையும் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதனால் சிறிலங்காவின் கொலைக் களங்களில் உண்மையில் என்ன நடந்தது என்பதற்கான சுயாதீன சாட்சியங்கள் எதுவும் காணப்படவில்லை. இவ்வாண்டு மார்ச் மாதத்தில், ஜெனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா தலைமையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் பிரகாரம், யுத்தகால மீறல்களை விசாரணை செய்வதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை உடனடியாக அமுல்படுத்துமாறு இத்தீர்மானத்தின் மூலம் கோரப்பட்டுள்ளது. தமது கணவன்மாரையும், அன்புக்குரியவர்களையும் இழந்து வாழும் பெண்கள் மற்றும் தாய்மார் சிக்கலான விடயங்களை வெளிப்படுத்துவதற்கு அச்சப்படுகின்றனர். ஷீலா [இது அவரது உண்மைப்பெயரல்ல]என்கின்ற பெண் சில வாரங்களுக்கு முன்னர் சிறிலங்காவின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்ற செய்தியை சில பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததால், பின்னர் இவரும் இவருடன் நிறுவனத்தில் பணிபுரியும் ஏனைய பணியாளர்களும் அச்சுறுத்தப்பட்டனர். "இந்தப் பெண்கள் மிகவும் நலிவடைந்தவர்கள். இவர்களின் பிரச்சினை என்ன என்பதை அறிந்து நாங்கள் அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளோம். அரசின் ஆதரவின்றி இந்த விடயத்தில் நாங்கள் நிறையச் செய்ய முடியாது" என ஷீலா தெரிவித்தார். குடும்பக் கட்டுப்பாட்டு முறை தொடர்பாக போதியளவு விழிப்புணர்வு இல்லாததால், சட்ட ரீதியற்ற பிள்ளைகள் பிறப்பதற்கும், எயிட்ஸ் நோய் மற்றும் ஏனைய பாலியல் ரீதியான நோய்கள் பரவுவதற்கும் இது காரணமாக அமைவதாக ஷீலா மேலும் தெரிவித்தார். தனது நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் ஆய்வு யூன் மாதத்தில் முடிவடையும் எனவும் இதன் பின்னர் இது வடக்கில் வாழும் பெண்களின் நிலை தொடர்பாக தெளிவான வரைபடம் ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் காணாமற் போன இராணுவ வீரர்களின் பெற்றோர் சங்கத்தின் தலைவியும், நிறுவுனருமான விசாகா தர்மதாச தெரிவித்துள்ளார். "யுத்தத்தின் போது காணாமற் போனவர்களின் உறவுகளை ஆற்றுப்படுத்துவதற்கான எந்தவொரு திட்டங்களும் வடக்கு, கிழக்கில் உருவாக்கப்படவில்லை. ஆனால் சிறிலங்காவின் வடக்கு, கிழக்கில் கட்டுமான மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பாக மட்டும் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளது" என விசாகா தர்மதாச மேலும் தெரிவித்துள்ளார். "வடக்கு கிழக்கில் யுத்தத்தின் போது தமது கணவன்மாரை இழந்த பெண்கள் பொருளாதார ரீதியாக மேம்படுத்தப்படவில்லை. ஆனால் இவர்களுடன் ஒப்பிடும்போது, போரின் போது சாவடைந்த சிறிலங்கா இராணுவ வீரர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக கவனிக்கப்படுகின்றனர். ஆனால் இரு தரப்பிலும் அவர்களுக்கான சமூக மற்றும் உளவியல் பிரச்சினைகள் இன்னமும் முதன்மைப்படுத்தப்படவில்லை. இவை உண்மையில் மிகப் பெரிய சவால்களாக காணப்படுகின்றன" என தர்மதாச குறிப்பிட்டுள்ளார். "யுத்தத்தின் பின்னான அபிவிருத்தியில் பெண்கள் முக்கியத்துவப்படுத்தப்படுவதாக பல்வேறு உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இளம் பிள்ளைகளைக் கொண்ட பெண்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். ஆடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்புக்கு கடன் வழங்கப்படுகின்ற போதிலும், இவை இறக்கும் நிலையில் தாம் பெற்ற கடனைத் திருப்பிக் கட்ட முடியாத நிலைக்கு இப் பெண்கள் தள்ளப்படுகின்றனர். இதனால் வடக்கில் வாழும் பெண்களைப் பொறுத்தளவில் வாழ்வாதாரத்துக்கான கடன் அவர்களை மேலும் கடனாளியாக்குகின்றது" என சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். இதனாலே சரூர் குறிப்பிட்டவாறு பெண்கள் பாலியல் தொழிலை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகுகின்றனர். "போரில் கணவன்மாரை இழந்த பெண்களின் வாழ்வு தனிமையில் கழிகின்றது. அத்துடன் அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கின்றனர். அவர்களது சொந்த சமூக வட்டத்தில் கெட்ட சகுனத்தின் குறியீடாக இந்தப் பெண்கள் நடாத்தப்படுகின்றனர்" என பெண்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்திய கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணம் செய்து தமது கணவன்மாரை இழந்த பெண்கள் தாம் திருமணம் செய்து கொண்டதை தமது திருமண சான்றின் மூலம் உறுதிப்படுத்த முடியும். ஆனால் வடக்கில் வாழும் பெண்களின் பதிவுச் சான்றிதழ்கள் யுத்தத்தின் போது அழிவடைந்ததால் அவர்களால் தாம் திருமணம் செய்து கொண்டதைக் கூட உறுதிப்படுத்திக் கொள்ள முடியாது உள்ளது. மே 2009ல் புலிகள் என சந்தேகிக்கப்பட்ட 11,995 வரையான ஆண்கள் தம்மிடம் சரணடைந்ததாகவும், இவர்களில் 10,874 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், 852 பேர் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் புனர்வாழ்வளிக்கப்படுவதாகவும், 13 பேர் இயற்கை மரணத்தை அடைந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் றுவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
புதினப்பலகை

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வெகுநாளைக்குப் பிறகு - மாதங்களுக்குப் பிறகு என்றுதான் சொல்லவேண்டும் - கலாவைச் சந்திக்கிறேன். அவளிடம் என்னவோ வித்தியாசமாகத் தெரிகிறது, ஆனால் என்னவென்று சட்டென்று பிடிபடவில்லை. ...மேலும் வாசிக்க
வெகுநாளைக்குப் பிறகு - மாதங்களுக்குப் பிறகு என்றுதான் சொல்லவேண்டும் - கலாவைச் சந்திக்கிறேன். அவளிடம் என்னவோ வித்தியாசமாகத் தெரிகிறது, ஆனால் என்னவென்று சட்டென்று பிடிபடவில்லை. அவளோ ”அக்கா, அக்கா” என்று ஆர்வமாகப் பேசிக்கொண்டே இருக்கிறாள்.  என் எண்ணத்தை ஓடவிட்டுக்கொண்டே, அவளிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன்.  பேசிமுடித்ததும், அவள் சுடிதார் துப்பட்டாவைச் சரிசெய்தவாறே.. ஆ.. சுடிதார்.. எப்பவும் சேலையில் மட்டுமே பார்த்த கலா இப்போ சுடிதாரில்!!”இப்போ சுடிதார் போடத் தொடங்கியாச்சா? வெரிகுட்!!” என்றேன். புன்னகைத்தவாறே விடைபெற்றாள்.  “அக்கா, இவருக்கு சுடிதார், நைட்டி எதுவும் பிடிக்காதாம். சேலைதான் கட்டிக்கணும்னு சொல்றார். எனக்குச் சேலைன்னாலே பிடிக்காது. இதவச்சே பெரிய்ய சண்டை வருது” என்று முன்பு புலம்பியது நினைவுக்கு வந்தது.
”ஊருலகத்துல ஹஸ்பெண்ட் வைஃபுக்குள்ள என்னென்னவோ பிரச்னைகள் வருது. பேப்பர் வாசிக்கிறீங்கள்ல? அதெல்லாம் பார்க்கும்போது சேல கட்டிக்கச் சொல்றதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை கலா. உங்களவரை ஒரு ஃப்ரெண்டா நினைச்சுக்கோங்க. உங்க டியர் ப்ரெண்ட் கேட்டாச் செய்யமாட்டீங்களா? அப்புறம் கொஞ்ச நாள்ல அவரும் புரிஞ்சுகிட்டு மாறிடுவார்” என்றதற்கு, “என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொன்னப்போ, எல்லாருமே இப்பவே அவர் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டினா, அப்றம் உன் பேச்சே எடுபடாதுன்னாங்க. நீங்கதான் முதமுதல்ல வேற மாதிரி சொல்றீங்க”  என்று பதிலளிக்கும்போது அவள் முகத்தில் இருந்த பலத்த சிந்தனை நன்றாக நினைவிருக்கிறது. அதன்பிறகு அவளை இப்போதான் பார்க்கிறேன்.ரஹீமாவும் இப்படித்தான் சொன்னாள். புதிதாய்த் திருமணமாகி அமீரகம் வந்தபோது அளவிலா மகிழ்ச்சியோடுதான் வந்தாள்.  பின்னர், வெளிநாட்டு வாழ்வுக்கேயுரிய இயல்பான தனிமையில் துவங்கியது பிரச்னை. கணவரின் நீண்ட வேலைநேரம் காரணமாய்,  தனிமை வாட்டத்துவங்கிய போது, புதுவாழ்வு சலிக்க ஆரம்பித்தது.  தொடங்கிய  சண்டை சச்சரவுகள் கொஞ்சம் சீரியஸாகி, அவள் ஊருக்குச் செல்லப் போவதாக என்னிடம் சொன்னபோது,”எவ்வளவோ பெண்கள், வெளிநாடுகளில் வேலைபார்க்கும் தம் கணவரின் நிதிநிலைமை அல்லது குடும்பச்சூழ்நிலை இடம்கொடுக்காததால் வருடக்கணக்கில் பிரிந்து இருக்கிறார்கள்.  ஆனால், உங்களுக்கு இறைவனருளால் இந்தப் பாக்கியம் கிடைத்திருக்கிறது.   தனிமையை வெல்வதொன்றும் பெரிய விஷயமில்லை. இதற்காக ஊருக்குச் செல்வதென்பது முட்டாள்தனம்.  மேலும் அங்கும் பேனைப் பெருமாளாக்கும் சிலரால் பிரிவு பிளவாகலாம்” என்றபோது “ஊருல நான் இங்க கிளம்பும்போதே நிறையப் பேர் போர் அடிக்குமேன்னுதான் சொன்னாங்க.  இபபவும் நாங்கதான் அப்பவே சொன்னோமேன்னு சொல்றாங்க.  நீங்க ஒருத்தர்தான் இப்படிச் சொல்லிருக்கீங்க.” என்றாள். எனினும் கிட்டத்தட்ட 12 வருடங்கள் அமீரகத்தில் இருந்துவிட்டு, தற்போது அவள் ஆசைப்படியே கணவரோடே இந்தியா போய் செட்டிலாகிவிட்டாள்!! (இதெல்லாம் ஒரு பிரச்னையா என்று கேட்பவர்கள், சிநேகா-சேரன் நடித்த “பிரிவோம் சந்திப்போம்” படத்தைப் பார்க்கக் கேட்டுக்கொள்கிறேன். )இதற்கு நேரெதிர் நிலை ஃபௌஸியாவினது. மாமியாரின் தலையீடு காரணமாய் திருமணமாகிச் சில வருடங்கள் கழித்தே கணவனுடன் அமீரகம் வந்து குடித்தனம் செய்ய முடிந்தது.  இப்போது மாமியார் இங்கு வரப்போகிறாராம். வந்தபின், மகனை எதெற்கெல்லாம் தூண்டிவிடுவாரோ என்ற பயம் அவளுக்கு. பொதுவாகவே ஆண்களுக்குள்ள குணம், கல்யாணம் வரை அம்மாவை அலட்சியப்படுத்தியதற்கான பிராயசித்தமாகக் கருதிக்கொண்டு, கல்யாணத்திற்குப் பின் மனைவியை அலட்சியப்படுத்துவது!! அதைப் புரிந்துகொள்ளாத சில பெண்கள் சரியாகக் கையாளத் தெரியாமல் குழம்(ப்)பிவிடுகிறார்கள்.  அப்படியிருந்த ஃபௌஸியாவிடம் “அதுக்கேன் பயப்படுறீங்க? வரட்டுமே! நினைச்சாலும் வீண் செலவுகள் செய்யமுடியாதபடி, நீங்க இங்கே குழந்தைகளோட இப்பிடி ஒரு குருவிக்கூட்டுல, அதுவும் கட்டுசெட்டா (சிக்கனமாக) இருக்கீங்கன்றதைப் பார்த்துப் பாராட்டிட்டுத்தான் போவாங்க பாருங்க.” என்று நம்பிக்கை கொடுத்தேன்.  வெளிநாடு வரும் அநேக மாமியார்கள் இந்தியா திரும்பிச் செல்லும்போது தவறாமல் சொல்லிச் செல்வது தான்!!விவாகரத்தின் விளிம்பில் நின்ற சஜினாவிடம் பேசியதுதான் மறக்கமுடியாது. “என் சிரமங்களையெல்லாம் சொல்லிட்டேன். கஷ்டம்தான்னு ஒத்துக்கிறீங்க. ஆனா, விவாகரத்து செய்யப் போறேன்னு சொன்னா மட்டும் அவசரப்படாதே, யோசிக்கலாம், பேசிக்கலாம்னு சொல்றீங்களே” என்று புலம்பினாள். உண்மைதான். துயரங்களிலிருந்து விடுபடட்டுமே என்று தோன்றினாலும், பிரிந்துவிடும்படி மனதாரச் சொல்லமுடியவில்லை. எப்படியாவது இருவரும் மனம்மாறி ஒன்றுசேர்ந்துவிடமாட்டார்களா என்றுதான் இருந்தது. பிரிப்பது மிகச்சுலபம். “உனக்கென்ன, சொந்தக் காலில் நிற்கிறாய். பெற்றோர் ஆதரவும் இருக்கு, அப்புறமென்ன” என்று ஒருவரி போதும் அதற்கு.  பின், நீதிமன்றம் வரை துணைக்குப் போகலாம். அதன்பின்னான வாழ்வை அவர்களல்லவா தனியே, அதுவும் குழந்தைகளோடு, எதிர்கொள்ளவேண்டும்? விரும்பியபடியே, ஆனால் எதிர்பார்க்கவே இல்லாமல், ஒருசில லீகல் கவுன்சிலிங்குகளின் பின்னர் இப்போது சஜினாவும் கணவரும் இணைந்துவாழ்கிறார்கள்.  இது இன்னுமொரு படிப்பினை எனக்கு. ஒருமுறை நெருங்கிய உறவினப் பெண்ணின் கணவர் ஃபோன் செய்து தன் மனைவியைக் குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.  எல்லாம் கேட்டபின், அவரிடம் இப்பிடியிப்பிடி நடந்து பாருங்களேன் என்று ஆலோசனை கூறியபோது, வைத்தாரே ஒரு குற்றச்சாட்டு!! “அவ உங்க சொந்தக்காரிங்கிறதனாலத்தானே அவளைக் குத்தம் சொல்லாமே, நாந்தான் திருந்தணும்னு சொல்றீங்க?” என்று எகிறினார். இது பரவால்லை, உறவு என்பதால் குற்றமானது. சிலர், நீங்களும் பெண் என்பதால் பெண்களை விட்டுக்கொடுக்கவேமாட்டீங்களே என்பார்கள்.அவரிடம் “ஏற்கனவே நீங்க கோவமா இருக்கும்போது, அவ செய்றது தப்புதான்னு உங்ககிட்ட சொன்னா உங்களுக்கு வெறுப்புகூடித்தான் போகுமே  தவிர குறையாது. அது பிரச்னையத் தீர்க்கவும் செய்யாது. அதனாலத்தான், அவ இப்படி நடந்துக்கிறதுக்கு என்ன காரணமா இருக்கும்னு என் பார்வையில் யோசிச்சு, உங்களைக் கொஞ்சம் மாத்திக்கச் சொல்றேன். உங்க தவறுகளை உங்ககிட்டதான் சொல்லணும். உங்க வைஃப்கிட்டதான் அவ எப்படியிருக்கணும்னு சொல்லமுடியும். அவங்கவங்க தப்பு அவங்களுக்குத் தெரியாது, வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்குத்தான் தெரியும்.” என்று விளக்கியபிறகு அமைதியானார்.இதுவே அவளிடம் பேசியபோது, “நீ பெரூசா பெண்ணுரிமை, பெண்ணீயமுன்னெல்லாம் பேசுற. ஆனா, இப்போ என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கோன்னு சொல்றே. பேச்சுல புலி, வீட்டுல எலிதானா நீயும்!!” என்று கிண்டல் செய்தாள்!! அடிப்பாவி, பெண்ணுரிமை பேசினால், பாயும் புலியாய்தான் எப்போதும் இருக்க வேண்டுமா? சூழ்நிலைக்கேற்ப “பதுங்கும்” புலியாகவும் அவ்வப்போது இருந்தால்தான் ராஜாவான ‘சிங்கமும்’ அடங்கும் என்று அவள்பாணியிலேயே விளக்கினேன்.பெண்ணுரிமைகள் காப்பதற்கு புலியாகவோ, சிங்கமாகவோத்தான் இருக்கவேண்டும் என்றில்லை.  அல்லது கொடிபிடித்து, போராட்டம் நடத்தினால்தான் பெண்ணுரிமை காக்கிறோம் என்றும் பொருளில்லை. அதுவெல்லாம் இல்லாமல், எத்தனையோ அக்காக்கள், மாமிகள் வீட்டிலேயேயிருந்தாலும், உள்ளார்ந்த அன்போடு தக்க அறிவுரைகொடுத்து வழிகாட்டுகிறார்கள். இணைந்துவாழ்வதே நன்மை என்று, புதுவாழ்வெனும் சக்கரசுழற்சியில் தோன்றும் சின்னச்சின்னப் பொறிகளை அணைத்து விடுபவர்களாயிருக்கிறார்கள்.  சின்னப் பொறிகள்தானே பெருநெருப்பின் தொடக்கம்? அந்தப் பொறியை, ‘விட்டுக்கொடுத்தல்’ என்ற நீரைத் தெளித்து ஆரம்பத்திலேயே அணைத்துவிட்டால், சிறு புகையோடு தப்பித்துவிடலாம். விட்டுக் கொடுத்தல் என்றால் தங்கள் உரிமைகளையோ, சுயமரியாதையையோ விட்டுக் கொடுப்பதல்ல;  ’ஈகோ’வை விட்டுவிடுதல் மட்டுமே.  உரிமைகளை விட்டும்விடாமல், பறிக்கவும் அவசியப் படாமல், வேண்டிய இடத்தில், தக்க நேரத்தில் பெண்ணுக்குத் தானே கிடைக்கும்படியான வாழ்க்கையை வழிகாட்டும் இவர்களெல்லாம் தங்களைப் பெண்ணுரிமைப் புலிகள் என்று பெயரிட்டுக் கொள்வதுமில்லை.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் வழிபாட்டுத் தலங்களையொட்டிய பிரதேசங் களிலும், தனியார் ...மேலும் வாசிக்க
தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் வழிபாட்டுத் தலங்களையொட்டிய பிரதேசங் களிலும், தனியார் காணிகளிலும் அத்து மீறிப் பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளை அமைப்பதற்கு எதிராக ஐ.நா. சபையிடம் முறைப்பாடொன்றைச் சமர்ப்பிக்கும் முயற்சியில் இந்து மத அமைப்புக்களும் தமிழ் புத்திஜீவிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசின் ஆசிர்வாதத்துடன் அத்துமீறி அடாத்தாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையீடு செய்வதற்கான முன்முயற்சிகள் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருவதாக நம்பகரமாக அறியமுடிகின்றது.
தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் இந்த அப்பட்டமான மத உரிமை மீறல்கள் குறித்துப் பல்வேறு மட்டங்களிலும் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களுக்கு நீதியான பதில் கிட்டாத காரணத்தினால் இவ்வாறு  ஐ.நாவிடம் நீதி கேட்பதெனத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கமைய, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்களை இந்துமத அமைப்பு களும், தமிழ் உணர்வாளர்களும் தயார் செய்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டனிலுள்ள பிரபலமான சட்டத்தரணிகள் ஊடாக ஐ.நாவிடம் இந்த முறைப்பாட்டைச் செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக அகில இலங்கை இந்துமாமன்ற வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் புத்தர் சிலை அமைக்கப்பட்டிருப்பது, வடக்கு, கிழக்கில் ஆலய காணிகளில் படையினர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, தம்புள்ள பள்ளி வாசல் விவகாரம் ஆகியன உட்பட்ட பல்வேறு விடயங்கள் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டப்படவுள்ளதாக இந்துமாமன்ற வட்டாரங்கள் மேலும் கூறின.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தின்போது இலங்கை அரசிடம் ஐ.நா. கேள்வி எழுப்பக்கூடிய வகையில் இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகிறது. 
உதயன்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


கால் நூற்றாண்டுக்கு மேலாக நடந்த கொடூர யுத்தத்தில் வெயில் மழை பாராது அலைந்து திரிந்து தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி.. பாதி சனம் உயிரையும் கொடுத்து, மீதி ...மேலும் வாசிக்க
கால் நூற்றாண்டுக்கு மேலாக நடந்த கொடூர யுத்தத்தில் வெயில் மழை பாராது அலைந்து திரிந்து தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி.. பாதி சனம் உயிரையும் கொடுத்து, மீதி சனம் சொந்த பந்தங்கள இழந்து சொத்துக்கள இழந்து அனாதையாகி அகதியாகி..இறுதி யுத்ததில் அடிபட்டு முள்ளிவாய்க்காலில் சிக்கி.. அகதிகள் முகாமில் தஞ்சமடைந்து யுத்தம் முடிந்த பிறகு இந்த ஈழமும் வேணாம் மண்ணாங்கட்டியும் வேணாம்னு.. மீதமிருக்கிற உயிரை பாதுகாத்துக்கொண்டு, ஒரு வேளையாவது சாப்பிட்டு, ஏதாவது வெங்காயமோ,வேளாண்மையோ விவசாயம் செய்து பிழைத்துக்கொண்டு, பழைய ரணங்களிலிருந்து கொஞ்சமாக கொஞ்சமாக விடுபட்டு, பழைய நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கும் அப்பாவி வசதிகளற்ற தமிழ்சனம்தான் உண்மையான போராளிகள்..
இங்கே தமிழீழ விடுதலை புலிகளின் பின்னணியை எடுத்து நோக்கினால் அதில் மேல்மட்ட சில தலைவர்களை தவிர மற்றைய ஏறக்குறைய 95 வீதமானவர்கள் வறுமையில் வாழ்ந்து வந்த மக்கள்தான்.. இவர்களிடம் மன தைரியத்தை தவிர வேறெந்த சொத்துக்களும் இருக்கவில்லை.. அன்றாட விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டு தன் குடும்பங்களோடு நிம்மதியாக வாழ்ந்தவர்கள். 1970/80 ஆரம்பகால பகுதிகளில் சிங்களவர்களால் நடாத்தப்பட்ட சில இனவாத நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த ஒரு சிலரால், நம் சமூகத்தை காப்பதற்கு ஆயுதமேந்தி பெரும்பாண்மையினரை கொல்வதை தவிர வேறெந்த வழியுமில்லை என கண்மூடித்தனமாக யுத்தகளத்தில் இறக்கிவிடப்பட்டவர்களே இந்த அப்பாவி ஏழ்மை மக்கள்..இவர்கள் எல்லோரும் விரும்பித்தானே யுத்ததில் ஈடுபட்டார்கள் பிறகு என்ன! என, கேட்கவருகிறீர்களா..?அதுதான் இல்லை!!!இங்கே அதிகமான இளைஞர்கள் கட்டாயப்படுத்தி கத்தி முனையிலேயே போராட வைக்கப்பட்டார்கள் என்பதுதான் உண்மை.. அப்படி மறுப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டது.. இயக்கத்துடன் சேர விருப்பமில்லாதவர்கள் கொல்லவும் பட்டார்கள் இதனால் அதிகமானோர்.. உயிரைக்காத்துக்கொள்ளவே இயக்கத்தில் சேர ஆரம்பித்தார்கள்.. இந்த அடக்குமுறை இளம்பெண்களை கூட விட்டுவைக்கவில்லை.. 12 வயதுநிரம்பிய பெண்கள் கையில் துப்பாக்கி கொடுக்கப்பட்டது!!.. இவ்வாறு வரைமுறையின்றி கட்டாயத்தின் பேரில் ஆள் சேர்க்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதே இந்த விடுதலைப்போராட்டம்..ஆள் சேர்க்கவும் அடிபணியாதவர்களுக்கு தண்டனை தரவும் என தனியான ஒரு பிரிவு இருந்தது..
உலக யுத்த தர்மத்தில் எதிரியானாலும் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லக்கூடாது என்பதுதான் உலக நியதி.. ஆனால் இந்த விடுதலை புலிகள் பெண்கள் வயிற்றில் குண்டுகளை கட்டி தற்கொலை தாக்குதல் நடத்த அனுப்பி வைக்கப்பட்டார்கள்..புலம் பெயர் தமிழர்கள் என்பவர்கள் யார்..?யுத்தம் ஆரம்பமான காலப்பகுதியில் யாரெல்லாம அதிகம் படித்து நல்ல தொழில்களில் இருந்தார்களோ அவர்களும், செல்வ செழிப்புடன் வாழ்ந்த செல்வந்தர்களும்.. தங்களிடமுள்ள பண செல்வாக்கை பயன்படுத்தி, யுத்தத்தை காரணம் காட்டி, அகதி அந்தஸ்து பெற்று ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏனைய சில நாடுகளுக்கும் யுத்தத்துக்கு பயந்து ஓடிப்போனவர்களே இந்த புலம்பெயர் தமிழர்கள்.. சிலர் கொழும்பு பிரதேசத்துக்கும் இடம்பெயர்ந்தனர். தற்போது தாங்களும் ஈழப்போராளிகள் என மார்தட்டிக்கொள்ளும் புலம்பெயர் தமிழர்கள்..ஈழத்திலிருந்து தப்பித்து வந்தது மட்டுமல்லாமல்! வேலை தேடி கொண்டதும், சொகுசான வாழ்க்கை அமைத்துக்கொண்டதும் ஈழ யுத்தத்தை காரணம் காட்டித்தான் என்பது வேடிக்கையான விடயம்.. மொத்தத்தில் இந்த யுத்தம் புலம்பெயர் சமூகத்துக்கு நண்மையே அளித்திருக்கிறது..இல்லையென்றால் மேற்கத்திய வாழ்க்கை இலகுவில் கிடைத்திருக்குமா..?முன்னொருகாலத்தில் ஈழத்தில் பிறந்தவர்கள் நாங்கள் என்ற அடையாளத்தைத்தவிர வேறெந்த ஈழப்போராட்ட அடையாளமும் அவர்களிடமில்லை.. யுத்தத்தில் உயிரைக்கொடுத்ததும் பலிக்கடா ஆக்கப்பட்டதும் அப்பாவி ஏழை சனங்களைத்தவிர வேறு யாருமில்லை.. புலிகளுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்குமான உறவு..?இந்த புலம்பெயர்ந்து சென்றவர்களிடம் கப்பம் வசூலித்தே தனது இயக்கத்தை நடத்தி வந்தனர் விடுதலைப்புலிகள்.. புலம்பெயர்ந்து சென்றவர்களும் ஈழத்தில் உள்ளவர்களின் பாசத்தினால் கொடுக்கவில்லை.. கொடுக்காவிட்டால் புலிகள் கொன்றுவிடுவார்கள் என்ற அச்சத்தினாலேயே கொடுத்தார்கள்!!!இன்று இந்த யுத்தம் தொடரவேண்டும் என ஆசைப்படுபவர்களும் இந்த புலம்பெயர் தமிழர்கள்தான்.. காரணம் இனி ஈழத்திற்கு திரும்பும் எந்தவித நோக்கங்களும் அவர்களிடமில்லை.. யுத்தம் ஆரம்பித்தால் பங்குபற்ற வேண்டும் என்ற கவலையும் இல்லை.. கப்பம் என்ற பெயரில் கொஞ்ச பணத்தை தூக்கி எறிந்துவிட்டு.. தன் சந்ததிகளுக்கும் ஐரோப்பிய நாடுகளிலேயே குடியுரிமை பெற்று அங்கேயே சொகுசாக வாழலாம் என்ற நோக்கம்தான்.. வேறெந்த ஈழ உணர்வும் இவர்களிடமில்லை.
. ஆனால் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு கால் நூற்றாண்டை இருண்ட கொடுமைகள் மிகுந்த யுகமாக கடந்துவந்து ஒவ்வோர் ஈழத்தமிழனும் யுத்தமில்லாமல் அமைதியாக வாழவே விரும்புவான்.. அவன் விரும்பியதும் அதுதான்!!! இதுதான் நிதர்சனமான உண்மை!!யுத்தத்தில் பங்குபற்றிய விடுதலைப்புலிகள் போராளி பெண்களை மணந்துகொள்வதற்கு இன்றைய இளைஞர்கள் தயாரில்லை என்பதுதான் ஈழத்திலிருந்து வெளிவரும் கசப்பாண உண்மை!!!!டிஸ்கி1.. சிங்களவர்களும் சிங்கள அரசாங்கமும் செய்தது,செய்துகொண்டிருப்பது சரி என வாதாடுவதல்ல இந்த பதிவின் நோக்கம்.. சிங்களவர்கள் மிகப்பெரும் இனவாதிகள் எனபதில் மாற்றுக்கருத்துக்குமிடமில்லை!!!டிஸ்கி2.. விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் அதிகம் சிதைந்து போனது அப்பாவி ஏழை சனத்தின் வாழ்க்கைதான், வசதியானவர்களின் வாழ்க்கை அல்ல என வாதிடுவதுதான் இப்பதிவின் நோக்கம்..

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் தெற்குக் கரையோரப்பகுதியில் இருந்து இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டு ...மேலும் வாசிக்க
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் தெற்குக் கரையோரப்பகுதியில் இருந்து இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டு இப்போது மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு போதிய அளவில் அடிப்படை வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை என முறையிடப்பட்டிருக்கின்றது.
இந்தப் பிரதேசத்திற்கு விஜயம் செய்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இப்பிரதேசத்து மக்கள் தமது சிரமங்களையும், கவலைகளையும் தெரிவித்திருக்கின்றார்கள்.
இடம்பெயர்வதற்கு முன்னர் தாங்கள் விவசாயம் செய்து வந்த தங்களுக்குச் சொந்தமான ஏழாயிரம் ஏக்கர் காணிகளைப் போய் பார்க்கவோ அவற்றில் பயிர் செய்யவோ முடியாதிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். காலம் காலமாகத் தாங்கள் பயிர் செய்து வந்த காணிகளில் இப்போது சிங்கள மக்களே விவசாயம் செய்வதாகவும், தமது காணிகளைத் தங்களுக்குப் பெற்றுத் தருவதற்கு வழி செய்யுமாறும் அவர்கள் கோரியிருக்கின்றார்கள்.
குடியிருக்கும் காணிகளுக்கு ஊடாக போர்க்காலத்தில் இராணுவ பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள மண் அணை அகற்றப்படாததனால், பலகுடும்பங்கள் தமது காணிகளின் எல்லைகளை வரையறுத்து வேலியிடவோ தோட்டச் செய்கையில் ஈடுபடவோ முடியாதிருக்கின்றது.
கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி பாடசாலைகள் இயங்காத காரணத்தினால் போக்குவரத்து சிரமங்களுக்கு மத்தியில் கொக்கிளாய் பாடசாலைக்கே மாணவர்கள் செல்ல வேண்டியிருப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். எனவே இந்த இரு கிராமங்களிலும் இராணுவத்தின் பொறுப்பில் உள்ள பாடசாலையைப் பெற்றுக் கொடுத்து தமது பிள்ளைகள் தங்கள் ஊரிலேயே கல்வி கற்பதற்கு வழி செய்யப்பட வேண்டும் என்றும் அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீள்குடியேறியுள்ள மக்களின் காணி பிரச்சினை தொடர்பில், உரிமை கோருகின்ற காணிகளுக்கான உரிமைப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய விவரங்களை மேல் நடவடிக்கைக்காகத் திரட்டப்படுவதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்தப் பிரதேசத்து மக்களின் போக்குத்துவரத்துக்கென மக்கள் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மூலம் பிபிசி

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


இனப்பிரச்சினைக் குத் தீர்வு காண்பதற் கென இலங்கை அரசினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்பது ...மேலும் வாசிக்க
இனப்பிரச்சினைக் குத் தீர்வு காண்பதற் கென இலங்கை அரசினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. தெரிவுக்குழுவில் பங் கேற்பதனால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து நேற்றுக்கூடிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டன.
 
இது குறித்து விரைவில் ஒரு தீர்க்கமான முடிவை மேற்கொள் வது எனவும் நேற்றைய  கூட்டத்தில் தீர் மானிக்கப்பட்டிருக்கிறது.கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்றுக் காலை தலைவர் இரா. சம்பந்தன் தலைமை யில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. 
 
இனப்பிரச்சினைக் கான அரசியல் தீர்வை எட்டமுடியாமைக்கு கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்காமையே காரணம் என அரசு தொடர்ச்சியாகக் கூறிவருகிறது.  அத்துடன் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு கூட்டமைப்பிடமும் அரசு நேரடியாக வற்புறுத்தி வருகிறது. எனினும் இதுகுறித்து கூட்டமைப்பின் தலைமை உறுதியான முடிவு எதனையும் இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில் இந்தத் தெரிவுக்குழு விடயம் குறித்து ஆராயவே நேற்றைய கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.
 
இந்தக் கூட்டத்தில் தெரிவுக்குழுவில் பங்கேற்பதா? இல்லையா? என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதாக அறியமுடிகிறது. தீர்வுக்கான பேச்சுகளைத் தொடர்வதானால் அரசு தெரிவுக் குழுவுக்கு வரவேண்டும் என அரசு தொடர்ந்து வற்புறுத்தி வருவதால் அது குறித்து சாதகமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்வைத்தனர். இதற்கு சிலர் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எனினும் இந்த விடயத்தில் தீவிரமாக ஆராய்ந்து விரைவில் ஒரு முடிவை எட்டுவதற்கு தலைவர் சம்பந்தன் தீர்மானித்ததாகக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உதயனுக்குத் தெரிவித்தார்.
 
நேற்றைய கூட்டம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரசு  கூட்டமைப்பு இடையேயான பேச்சுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கான பெயர்களைத் தருமாறு அரசு கேட்டமையால் பேச்சுகள் தொடரமுடியாமல் தடைப்பட்டன. எனினும் இந்த விடயத்தில் நாம் உறுதியாக உள்ளோம். தெரிவுக்குழுவில் பங்கேற்க முடியாது எனவும் நாம் அவர்களிடம் கூறவில்லை. தீர்வு தொடர்பான வரைவை அரசு முன்வைக்கும் பட்சத்தில் அதுபற்றி பரிசீலித்து முடிவெடுக்கலாம் என்றே கூறியிருந்தோம். எனினும் அரசு விடாப்பிடியாக உள்ளது. இதுகுறித்து இன்றைய (நேற்று) கூட்டத்தில் கலந்துரையாடினோம். உறுப்பினர்கள் பலரும் தமது கருத்துகளை முன்வைத்தனர். எனினும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. மீண்டும் கூடி இந்த விடயம் தொடர்பில் உறுதியான முடிவொன்றை எடுப்பது எனத் தீர்மானித்துள்ளோம் என்றார்.
 
அத்துடன் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு, புத்தர் சிலை விவகாரம் ஆகியவை குறித்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்குகளைத் தாக்கல் செய்யவேண்டியிருக்கிறது. சட்டத்தரணிகளின் ஆலோசனைகளைப் பெற்று அந்த வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைவிட எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள் மூலமும் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவது என முடிவு செய்துள்ளோம் என்றும் மாவை மேலும் கூறினார். 
உதயன்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


  டேய் ஜேகே ஒபாமா, அமெரிக்கா, ஐரோப்பாவில் என்ன தான் நடக்கிறது? சார்கோசி போய்விட்டார். கிரேக்கத்தில் ...மேலும் வாசிக்க
  டேய் ஜேகே

Obama Lies Energyஒபாமா, அமெரிக்கா,ஐரோப்பாவில் என்ன தான் நடக்கிறது? சார்கோசி போய்விட்டார். கிரேக்கத்தில் தொங்குபாராளுமன்றம். ஜெர்மனியில் கூட அஞ்செலா இடைத்தேர்தலில் வாங்கிக்கட்டுகிறாராமே?

பாரிசில் இருக்கும் அக்காவுடன் இதற்காகவே ஸ்கைப்பில் கதைத்தேன். வீடியோவை ஒன் பண்ணியதும் இரண்டு மருமக்களும் கைத்தட்டி துள்ளிக்குதித்து சொன்னது “மாமா உங்கட சார்கோசியை நாங்க வீட்டுக்கு அனுப்பீட்டோம்”. ஏனென்று அவர்கள் சொன்னபோது தான் பிரெஞ்சுக்காரர்கள் சார்கோசி மீது எவ்வளவு கடுப்புடன் இருந்திருக்கிறார்கள் என்று புரிந்தது. யூரோ என்ற படுகுழிக்குள் விழுந்து மீள முடியாமல், Austerity Plan என்று அவர்கள் கொண்டுவந்த சிக்கனத்திட்டம் அவ்வளவாக மக்களை கவரவில்லை. எல்லாவற்றிலும் கை வைக்க தயாராக இருந்திருக்கிறார்கள். பொதுச்சேவை, மராமத்து, சேமலாபம் என்று மக்கள் வரியில் வழங்கப்படும் சேவைகள் எல்லாவற்றிலும் சிக்கனம். பிரான்சும் ஜேர்மனும் ஏன் தங்கள் பணத்தை தேவையில்லாமல் கிரேக்கத்துக்கும் இத்தாலிக்கும் அழ வேண்டும் என்பது சாதாரண மக்களுக்கு புரியவில்லை. இந்த வலது சாரி பொருளாதார கொள்கைகள் கொஞ்சம் பிசகினால் சங்கு தான்.  அது தான் ஜெர்மனியிலும் பிரான்சிலும் இடதுசாரிகள் வென்றமைக்கு முக்கியகாரணம். மேலும் சார்கோஸி, தான் தோற்கப்போகிறேன் என்ற பயத்தில், ஜூத சிறுவர்கள் கொலை செய்யப்பட சம்பவத்தை வைத்து  முஸ்லிம்கள் மீது இனவாதத்தை தூண்ட முயற்சிக்க, பிரெஞ்சுக்காரர்கள் முழித்துக்கொண்டு விட்டனர். கோவிந்தா! கிரேக்க நிலைமை இன்னும் மோசம். நாடு அதள பாதாளத்துக்கு .. போதாக்குறைக்கு austerity திட்டம் இன்னும் கழுத்தை திருகும் என்ற பயத்தில் தொங்கு பாராளுமன்றத்துக்கு வாக்களித்துவிட … இரண்டு மூன்று வருடத்தில் யூரோ அமைப்பு பெட்டிக்குள் முடங்கிவிட தான் சான்ஸ் கூட!

 

eklavya2வில்லிபுத்தூரர், author of மகாபாரதம்டேய் ஜேகே, நான் எழுதினதே புனைவு! அத வரலாறு என்று சொல்லி திரிபுபடுத்தி எழுதுறது ஞாயமா? ஏகலைவன் அரசன் என்று வேறு எழுதியிருக்கிறாய்? உதைக்கிறதே?

மிஸ்டர் வில்லி, மகாபாரதமே குழப்பங்களின் ஒட்டுமொத்த பிளேஸ் தானே. இந்த கதையின் முடிச்சே ஏகலைவனில் இருந்து தான் ஆரம்பித்தது. ஏகலைவனின் குருதட்சணை காட்சிக்கு பிறகு அவனுக்கு என்ன நடந்தது என்று அறிய ஆர்வம். ஏகலைவன் நிடத நாட்டுக்கு மன்னனாக இருந்திருக்கிறான். என்ன எங்கேயோ கேள்விப்பட்ட நாடா? நம்ம நள மகாராஜா சூதில் பறிகொடுத்த அதே நாடு! உண்மையில் அது காடுகள் பலவற்றை உள்ளடக்கிய நாடு(நாடு-காடு எதிர் எதிர் பதமில்லை). ஏகலைவன் அப்புறமாக அரசசேவை செய்து வந்திருக்கிறான். ஜராசந்தனுக்கு நம்பிக்கையானவனாய் வாழ்ந்திருக்கிறான். சிசுபாலனுக்கு ருக்மணியை மணம் முடித்துவைக்க ஜராசந்தன் சார்பில் ருக்மணியின் அப்பன்காரனிடம் தூது போயிருக்கிறான். நிச்சயம் முடிந்த தருவாயில் கிருஷ்ணன் ரெட்டியை தாக்கிவிட்டு பொண்ணை தூக்கிவிட்டான். அப்புறம் ஜராசந்தனுக்கும் கிருஷ்ணனுக்கும் நடந்த யுத்தத்தில் ஏகலைவன் கொல்லப்பட்டிருக்கிறான். ஆக ஒன்றையும் ரெண்டையும் கூட்டிப்பார்த்தேன், ஏகலைவனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஆகாது. ஸோ ஏகலைவன் இயல்பாக கௌரவர் பக்கம் சாய்கிறான். ஓரளவுக்கு முடிச்சு விழுகிறது. இனி கதைக்கு ஒரு நோக்கம், தீம் தெரிவு செய்து பின்னவீனத்துவம் இணைத்து கரைசெர்த்தால் “கதை சொல்லாத கதை” ரெடி!

 

mayilமயிலன்பொம்பள மனசு பற்றி என்ன நினைக்கிறீர்கள் தம்பி?

என்ன தலைவரே, நம்மள பார்த்தா ஆபரேட் பண்ணுப்பட்ட ஆளு மாதிரி இருக்கா? பொம்பள மனசு பற்றி நாங்க என்னவெல்லாம் நினைக்கிறோமோ அவை ஒன்றுக்குமே பொருந்தாத புதிரான மனசு தான் பொம்பள மனசு! அட அதைத்தானே நான் நினைக்கிறேன் .. ஸோ அதுவும் இல்லையா? மூடு குழம்பி போச்சு! மன்மதகுஞ்சு ஒரு பாதாம் பீர் ப்ளீஸ்!

 

james-cameron-king-of-the-world1110282240562ஜேம்ஸ் கமரூன்தம்பி எங்களோட புது ப்ராஜெக்ட்ல ஜாய்ன் பண்ணுறீங்களா?

ஓ ..வால் வெள்ளி, பூமிக்கு அண்மையில் சுற்றும் குட்டி குட்டி வான்கற்களில் இருந்து கனியம் எடுக்கும் திட்டமா? புதுமையான விஷயம் தான் பாஸ். உங்கள் டீமை பார்த்தாலே ஆச்சர்யம். கூகிள் அதிபர்கள் லாரி பேஜ், எரிக், மைக்ரோசாப்ட் சிமோனி என்று வித்தியாசமான கூட்டணி தான். பூமியை சுற்றி கிட்டத்தட்ட 9000 வான்கற்கள் சுத்துகின்றனவாம். இந்த கற்களில் நீர் செறிந்த பனிக்கட்டிகள் இருக்காம். அவற்றில் இருந்து எரிபொருள்/குடிநீர் போன்றவை எடுக்கலாமாம். பூமியில் இருந்து கொண்டுபோவதைவிட, ஆங்காங்கே பவர் ஸ்டார் நடாத்தும் x2_c638ae2தண்ணீர்பந்தல் போல கிண்டி எடுத்துக்கொண்டு போனால், அடுத்த தலைமுறை காந்தி கூட கிண்டி யாத்திரை வெள்ளிவரை போகும் அளவுக்கு விண்வெளி வசப்படுவிடும். ஆனால் இவர்களின் டார்கட் அதுவல்ல. இந்த கற்களை தோண்டினால் நிறைய உலோகம் கிடைக்குமாம். அதுவும் தங்கம் பிளாட்டினம் போன்ற அறிய ஐட்டம்ஸ். பூமிக்கு கொண்டுவந்தால் தங்கம், பிளாட்டினம் போன்றவற்றை தொழிற்துறையில் கூட பாவிக்கலாமாம். ஒரு குட்டி கல் பில்லியன் டொலருக்கு மேல் பெறுமதி வருமாம். இதெல்லாம் சரிவருமா? கஷ்டம் இல்லையா என்று கேட்டதுக்கு கென்னடி சொன்ன பஞ்ச் டயலாக்கை அடிக்கிறார்கள்.

“We choose to go to the moon in this decade and do the other things, not because they are easy, but because they are hard”

 

0ஜெயராஜ், இலங்கைமெல்பேர்னில் எழுத்தாளர் விழாவாமே. மழைக்கு ஒதுங்கும் ஐடியா இருக்கா?

அடடா .. வருகிற ஞாயிறு மாலை, பிரஸ்டனில் நடக்க இருக்கிறது. கவியரங்கம் அல்லத்து கருத்தரங்கு செய்யுங்கள் என்று கேட்டார்கள். நமக்கு கவிதை ஆகாது. கருத்தரங்கு ஓகே என்றுவிட்டேன். கோகிலா மகேந்திரன், மாத்தளை சோமு எல்லாம் வருகிறார்கள். இருபது வருஷங்களுக்கு பிறகு யசோ அக்காவை சந்திக்கப்போகிறேன். எனக்கு சின்னவயதில் இலக்கியத்தையும் இசையையும் ரசிக்க கற்றுத்தந்த எழுத்தாளர். அவரை இவ்வளவு காலத்துக்கு பின், ஒரே மேடையில் சந்திக்கிறேன் என்னும் போது, அக்காவுக்கு ஓரளவு பெருமை சேர்த்திருக்கிறேன் என்று நம்பத்தோன்றுகிறது. “புலம்பெயர்ந்த படைப்பாளிகள், பதிவுலக தளத்தில் தமிழுக்கு செய்யும் பங்களிப்பு” பற்றியது என்னுடைய டாபிக். கருத்தரங்கு என்றவுடன் புரியாத ஆராய்ச்சி தமிழில் எல்லாம் பேசும் ஐடியா கிடையாது. என் ஸ்டைலில் கொஞ்சம் குசும்பு, சீரியஸ், அவ்வப்போது விஷயம் என்று கலந்து கட்டும் ஐடியா இருக்கிறது. ஆஸிகளே டைம் கிடைத்தால் சும்மா வந்து எட்டிப்பாருங்கள்!

 

41654_100001612310791_4570591_nமன்மதகுஞ்சு : மச்சி நீ படிச்ச ஸ்கூலில அவிங்க ஹெட் மாஸ்டர்டா, உன்னைய விட்டா கொஞ்சம் இவனாட்டம் பேசுவாய் .. அடக்கி வாசிக்கணும் தம்பி!பார்த்து இதமா தொடங்கி பதமா முடிச்சு வையி! கண்டறியாத பின் நவீனத்துவம் புடலங்காய் ஒன்றும் வேண்டாம்! புது காளைமாடு வாலில டின்னு கட்டின மாதிரி தலை தெறிச்சு ஆடிடாதே.. அடக்கி ஆடு! ஓகே!

 

இந்த வார போட்டோ

சில மாதங்களுக்கு முன் மன்மதகுஞ்சுவிடம், வன்னிப்பக்கம் போனால் நம்ம வட்டக்கச்சி மகாவித்தியாலய படம் ஒன்று எடுத்து அனுப்பு என்று சொன்னேன். தல சொன்ன வாக்கை காப்பாற்றிவிட்டது.

VMV

வன்னியில் இடம்பெயர்ந்து இருந்தபோது எனக்கு பதினைந்து பதினாறு வயசு. பசுமரத்தாணி. வட்டக்கச்சி மகாவித்தியாலயம் ஒரு கலவன் பாடசாலை. சென்ஜோன்சில் எப்போதாவது வரும் டீச்சர்மாரை லொள்ளுவிட்டுக்கொண்டிருந்தவனுக்கு திடீரென்று ஒரு கிராமப்புற கலவன் பாடசாலை என்றவுடன் சும்மா ஜிவ்வென்று .. அதுவும் அப்போதெல்லாம் கொஞ்சம் புத்தி வேறு ஓரளவுக்கு வேலைசெய்ததால் வகுப்பிலும் முதலிடம். பொண்ணுங்க எல்லாம் கியூவில் வந்து டவுட் கேட்க நான் நிறுவினது எல்லாமே “வெளிப்படை உண்மை” தான்! O/L பரீட்சை அங்கே தான் எடுத்தேன்.காலை பரீட்சைக்கு முட்டை பொரியலும் புட்டும் கிடைக்கும். இரவு பத்துமணிக்கு, பின்னேரம் கறந்த பசுப்பாலில் டீ. அம்மாவை விட வட்டக்கச்சி மாமி தான் பார்த்து பார்த்து கவனித்தார். எனக்கும் இன்னொரு அண்ணாவுக்கும் என்று கன்றுக்குட்டிகள் மழைக்கு ஒதுங்கும் கொட்டிலை சரிக்கட்டி தந்திருந்தார்கள். கிரவல் மண்ணில் நாங்களே மெழுகி கறுப்பு பெயிண்ட் அடித்து, அரிக்கன் லாம்பில்(மேசை விழக்கு அணைந்துவிடும்), அப்படி ஒரு சிட்டுவேஷனில் படிப்பது போல ஒரு சந்தோஷம் உலகத்தில் வேறு என்ன இருக்கு?

5ரிசல்ட் வந்தது. 7டியும் 1சியும். ஆங்கில இலக்கியம் ‘சி’ என்று என்னைவிட, என் குடும்பத்தை விட வட்டக்கச்சி அதிகம் கவலைப்பட்டது. இப்போதும் கூட இந்த பாடசாலை மகசினில் 1996ம் ஆண்டு சஞ்சிகையில் என் பெயர் விவரம் இருப்பதாக சொல்லிக்கொள்வார்கள். பத்து வருடங்கள் படித்தும் சென்ஜோன்ஸ் கொடுக்க தவறிய அங்கீகாரத்தை   இடம்பெயர்ந்து இரண்டு வருடங்களே படித்த எனக்கு இந்த பாடசாலை கொடுத்தது. அகதியாய் வந்தவனுக்கு, இடம் கொடுத்து, சாப்பாடு கொடுத்து படிக்க கொட்டில் கொடுத்து பார்த்து பார்த்து செய்து, நான் படித்து நல்ல ரிசல்ட் எடுப்பதை எப்போதுமே பெருமையாய் பார்த்து, இன்றைக்கும் என் பெயரை சொல்லி சொல்லியே தன் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதாக சொல்லுவார்கள்.எப்படிப்பட்ட ஊர் அது.

4சென்றவருடம் அவர்கள் வீட்டுக்கு போயிருந்தேன். அப்போது தான் மானிக்முகாமால் வீடு திரும்பியிருந்தார்கள். நான் வந்துவிட்டேன் என்று, நின்ற ஒரே சேவலையும் சட்டிக்குள் வைத்து, கோப்பையில் எப்போ கொஞ்சம் இறைச்சிக்கரி குறையுதோ, சடாரென்று பாய்ந்து வந்து ஒரு கரண்டி போட்டு .. என்ன மாதிரி சனங்கள்? கால் தூசிக்கு பெறுவோமா?

அந்த குடுப்பத்திலேயே ஒரு பையன் பதினாலு வயசு, ஆள் எங்கே என்று தெரியாது. இன்னொரு பையனும் கடைசி நாள் அன்று தான் …. காயங்கள் இல்லாத நபர்களே கிடையாது. கால் இல்லாமல் போனாலும், கை போனாலும், இன்றைக்கும் பத்து இருபது ஏக்கரில் நெல் விதைக்கும் நம்பிக்கை இன்னும் போகவில்லை.

என்ன செய்யப்போகிறேன்?

 

Spring, Summer, Fall, Winter... and Spring

கிம்கிடுக் பெயர் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் இயக்கிய படம். இடம் கொரியா. ஒரு வயோதிப பௌத்த துறவி, அவரிடம் ஒரு சிறுவன் குருகுல வாசம். ஆளில்லாத ஒரு காட்டுப்பகுதியில், ஆற்றின் நடுவில் மிதக்கும் வீடு. கதை நான்கு பருவங்களை சுற்றி நடக்கிறது.

300383_image2_1வசந்த காலம். சிறுவனுக்கு மகாயான தத்துவம், மூலிகை மருத்துவம் என பல விஷயங்களை போதிக்கிறார். சிறுவன் பிராணிகளை துன்புறுத்துகிறான். தவளை காலில் கல்லு கட்டுகிறான். மீன் சேட்டையை சுற்றி நூலால் இறுக்கி கட்டுகிறான். பாம்பை கொடுமைப்படுத்துகிறான். தூர நின்று அவதானித்த துறவி, அன்றிரவு சிறுவன் நித்திரையில் இருக்கும் போது பாறாங்கல்லை அவன் காலில் கட்டிவிடுகிறார். காலையில் எழுந்த சிறுவன் அழுகிறான். அவனை அப்படியே போய், அந்த பிராணிகளை காப்பாற்றினால் தான் கட்டை அவிழ்த்துவிடுவேன் என்று துறவி சொல்ல, சிறுவன் முனகியபடியே கல்லை இழுத்துக்கொண்டு அந்த தவளையை தேடி போய் அதை காப்பாற்றுகிறான். ஆனால் பாம்பும் மீனும் இறந்துவிட்டது. சிறுவன் கதறுகிறான்.

spring-summer-fall-winter-and-spring5 (1)கோடைக்காலம். இப்போது அந்த சிறுவன் இளைஞன். துறவியை தேடி ஒரு தாயும் மகளும் வருகிறார்கள். அந்த மகளுக்கு ஏதோ ஒரு நோய். குணப்படுத்தி தருமாறு சொல்லி துறவியிடமே ஒப்படைத்துவிட்டு தாய் கிளம்புகிறாள். காட்டுப்பகுதி, கோடைக்காலம். இரண்டு இளைஞர்கள்! சூடு கிளம்புகிறது! இருவருக்கும் காதல் or whatever you name it. ஆனால் இந்த தொடர்பால் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நோய் குணமாகிறது! ஒருநாள் இளைஞனும் அந்த பெண்ணும் ஆற்று நடுவே படகில் ஆடையின்றி கிடப்பதை துறவி கண்டுவிட, அவர் அந்த பெண்ணை வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார். அந்த இளைஞனால் அவளை பிரிந்து இருக்கமுடியவில்லை. துறவியை பிரிந்து ஓடுகிறான்!

இலையுதிர் காலம். இளைஞனுக்கு நடுத்தர வயது திரும்பி வருகிறான். மனைவி இன்னொருவனை விரும்புவது தெரிந்து அவளை குத்தி கொன்றுவிட்டு இரத்தக்கத்தியுடன் வந்து நிற்கும் அவனை துறவி அடித்து விளாசுகிறார். ப்ரஜ்ஞா பரமிதா என்ற மகாயான பௌத்த வேதத்தை தரையில் செதுக்க சொல்லுகிறார். முடிவில் அவனை கைது செய்து கூட்டிப்போகிறார்கள். கொஞ்ச நாளில் அந்த துறவியும் தன் இறுதிக்காலம் வந்துவிட்டது அறிந்து ஆற்றின் நடுவே படகில் தன்னை தானே எரியூட்டி இறந்துபோகிறார்!

600full-spring,-summer,-fall,-winter...-and-spring-posterபனிக்காலம்! அந்த இளைஞன் தண்டனை முடிந்து திரும்புகிறான். ஆறு உறைந்து போய் இருக்கிறது. பனியை வெட்டி குருவின் பற்களை வெளியே எடுக்கிறான். அந்த இடத்தை செப்பனிட்டு குரு செய்த வேலையை தொடர்கிறான். இப்போது ஒரு தாய் தன் குழந்தைக்கு வருத்தம் என்று சொல்லி இவனிடம் ஒப்படைக்கிறாள். அவள் திரும்பி போகும் வழியில் அந்த துறவி போட்ட பனித்துளைக்குள் விழுந்து உயிரிழக்க, இவன் மனம் வருந்தி, தன் காலில் தானே கல்லை கட்டி தனக்கு தானே தண்டனை கொடுக்கிறான். இப்போது அந்த குழந்தை அநாதை. அவனிடம் குருகுல வாசம் இருக்கிறது!

வசந்த காலம். அவன் சிறுவனாய் இருந்த போது செய்த தவறுகளை இந்த குழந்தையும் செய்ய .. வாழ்க்கை ஒரு வட்டமடா என்ற விஜய் தத்துவத்துடன் படம் முடிகிறது!

இந்த படம் ஒரு போரிங் படம்! தானே செதுக்கிய தானைத்தலைவன் அஜித் நடிக்காத படம். அதனால் எல்லோருக்கும் பிடிக்கவேண்டிய தேவை இல்லை. இரண்டு மணிநேரமாய் வாழ்க்கை ஒரு வட்டம் என்ற விஜய் தத்துவத்தை கிம்கிடுக் போன்ற தேர்ந்த இயக்குனர்கள் வெறுமனே சொல்லமாட்டார்கள்! இன்னொரு மாட்டரும் இருக்கிறது! பல பருவங்களில் மனிதன் செய்யும் தவறு அவனுக்கு எவ்வாறு உணர்த்தப்படுகிறது என்பதை மகாயான பௌத்த தர்மத்தின் அடிப்படையில் படம் சொல்லுகிறது. எவர் சொல்லியும் எந்த மனிதனும் திருந்துவதில்லை. ஆனால் தானே பட்டு தெளிவான். இன்னும் எழுதலாம் … ரொம்ப லெந்தாக போய்விட்டது. ஒரு மூட் இருந்தால் பாருங்கள். அட்டு சீனுக்காக பார்க்கவேண்டாம் பாய்ஸ்!

 

இந்த வார பாடல்

“டேய் இந்த மெலடி எண்ட கருமம் உண்மையிலேயே எது தம்பி”

சுகிந்தன் அண்ணா கேட்டபோது அவர் காரில் “ஓ போடு” போய்க்கொண்டிருந்தது. 

“மெலடி தான் அண்ணே டியூன் மெட்டு .. உயிர் .. அதை சுற்றி உருவாவது தான் பாட்டு”

“அப்ப இந்த ஒபோடு பாட்டில மெலடி இல்லையா?”

இருக்கு .. அழகான ஒரு மெலடி இருக்கு ஆனா அதற்கு மேலால ரிதம் ஆக்கிரமிச்சிட்டுது …  அந்த ரிதத்தை தூக்கிட்டு மெலடியை மட்டும் எடுத்தா இன்னும் புரியும், உதாரணத்துக்கு இந்த பாட்டு

அப்பிடி என்றால் ஸ்லோவான பாட்டில மெலடி அதிகம் இருக்குமா? தாளம் கூடினா மெலடி குறையுமா?

அப்பிடி இல்ல அண்ணே .. தாளத்துக்கும் டியூனுக்கும் சம்பந்தமில்லை .. டியூன் தான் மெட்டு, அத போடோணும் முதலில .. அப்புறம் தான் அதற்கேற்ற தாளம் முடிவு செய்யோணும் .. சில நல்ல உயிரை எடுக்கும் மெலடி பாடல்கள் வேகமான தாளத்திலும் வந்திருக்கு .. “சின்ன ராசாவே சித்தெரும்பு உன்னை” பாட்டும் “உள்ளத்திலே நல்ல உள்ளம் உறங்காது” பாட்டும் ஒரே மெட்டு தான் ..

படம் மகாபிரபு. தேவா இசை. ஜானகி எஸ்பிபி. இந்த பாட்டு எப்போது கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத்தொன்றும். ஸ்டார்ட் சும்மா ஒரு தேவா பாட்டு போல, “செங்குருவி செங்குருவி” பாணியில் தான் ஆரம்பிக்கும். ரிதம் கூட வேகமான 1.2.1.2 நடை. “அன்றாடம் நூறு சேதிகள்” என்று எஸ்பிபி சரியான தாளத்தில் எடுக்கவே தடுமாறும் அளவுக்கு வேகமான பாட்டு. சரி இன்னொரு தாளம் போட வைக்கும் பாட்டு என்று ஸ்கிப் பண்ணினால் என்றால் ஐயோ பாவம் நீங்கள்! அவ்வளவு இருக்கு இதில!

சங்கதி ஆரம்பிக்கும் போது தான் பாட்டின் வீரியமே தெரியவரும்.

தாளம் ஸ்டில் “சாங்கு சக்கு சக்கு சை சா” தான்  .. தேவா மாற்றவில்லை ..

கல்யாண வேளை வரும் காதலன் வந்து மாலையிடகண்ணாடி கன்னங்களில் கைநகம் கொண்டு கோலமிட

மேலே இருந்து கீழே ஓடும் மெட்டு. பஸ்சின் பூட்போர்டில் தொங்கும்போது அவள் உள்ளே நிற்பதை கண்டுவிட்டால் வயிற்றை ஒரு உருட்டு உருட்டும் பாருங்கள். கையை விட்டால் கீழே விழுந்துவிடுவோம். உள்ளே போகமுடியாமல் ஏற்கனவே கிரவுட் கூட! அவள் வேறு எந்த ஸ்டாப்பில் இறங்கப்போகிறாள் என்ற குழப்பம். ஜானகிக்கு ஸ்ருதி பிசகவில்லை.

அதே வேகம் அதே தாளம் … காதலுக்கு குறைவில்லை .. மெட்டுக்கும் குறைவில்லை .. அருவி வேகமாக ..

முப்பாலும் சர்க்கரையும் மூடியிருக்கும் பாத்திரமேஎப்போது உண்ணுவது எல்லையை மீறும் ஆத்திரமே

51v tn4bJLL._SL500_AA300_ஸ்டில் அதே தாளம். ஆனால் மெட்டு மட்டும் எம்மை எங்கோ அழைத்துசெல்லும். தேவாவுக்கு இன்னமும் திருப்தியில்லை. அடுத்த அஸ்திரம் வருகிறது. தாளத்துக்கு தோதாக தலைவர் வயலினில் ரிதம் கொடுக்க தொடங்குகிறார். harmonic rhythm என்று அழைப்பார்கள்.

பத்து பேர்களின் பார்வை படும் பகல் நேரத்தில் தூர நில்லுமிச்சம் மீதிகள் ஏதுமின்றி அந்தி ஆனதும் அள்ளிக்கொடு

எஸ்பிபி & ஜானகி, they probably realised its a special song. தாளத்துக்கு முரணான பாவங்கள் கொடுக்கவேண்டும். அந்த contrast தான் பாட்டின் ஜீவன் என்பதை புரிந்து பாட, சரணத்தின் முடிவு வந்துவிழுகிறது

திங்கள் காய்ந்திருக்க தென்றல் காற்றடிக்க நீ நினைத்த கதையை நடத்து

இப்படிப்பட்ட மெலடி பாடல்களுக்கு இந்த வகை தாளம் கொடுத்தால் நடனத்தை கவிதை போல அமைக்கலாம். இந்த பாடல் காட்சியை இன்னும் பார்க்கவில்லை. ஆனால் சோகம் என்னவென்றால் யாரோ ஒரு நாதாரி தான் பாடல் எழுதியிருக்கவேண்டும். கொஞ்சம் கூட ரசனை இல்லாதவன். இப்படிப்பட்ட ஒரு மெட்டு, இந்த தாளத்துக்கு பின்னி பெடலெடுத்திருக்கவேண்டாம்?

இந்த பாட்டு யூடியூபில் கூட இல்லை. எத்தீட்டோம்ல! ஒரு பாட்டை இப்படி டீப்பாக ரசிப்பது சுத்த பைத்தியக்காரத்தனம் என்று சொன்னீர்கள் என்றால், பைத்தியம் மேலும் மேலும் முத்தவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன்!

  மன்மதகுஞ்சு ஸ்பெஷல்

சென்றவாரம் அல்கைதாவிடம் இருந்து ஒரு ஈமெயில் மிரட்டல் வந்தது. மன்மதகுஞ்சு ஸ்பெஷல் போடாவிட்டால் படலையை குண்டுவைத்து தகர்த்துவிடுவோம் என்று! அந்த வேலையை சத்தம்போடாமல் மன்மதகுஞ்சு கவிதையே செய்கிறது என்பது வேற விஷயம்! ஆக, நேற்று அவனின் facebook சுவரில் இதை எழுதிப்போட்டேன்.bean

“டேய் குஞ்சு.. உன்னுடைய காதலிகளை தொகுத்து ஒரு மாட்டர் கவிதை எழுதி தாறியா? அடுத்த வியாழமாற்றம் உனக்கு தாண்டி! அப்பப்ப மானே தேனே போட்டுக்க! “

அவன் பதில்

“எதுக்கும் யாம் அஞ்சமாட்டோம், நம்மிடம் இல்லை ஒளிவு, யாம் உமக்கு வாக்கு கொடுகிறோம், அடுத்த வியாழமாற்றம் கைபிடிக்காத கண்ணியமான காதலிகள்”

தலைவர் இத facebook ல போட்ட உடனேயே, மூன்று பெண்கள், அவனின் நண்பிகள், ஒருவர் எனக்கும் நண்பி, டெக்ஸ்ட் பண்ணினார்கள் (எப்படித்தான் இதுகளுக்கு மட்டும் என் நம்பர் கிடைக்குதோ!)

“ஜேகே, குஞ்சு என்னய பற்றி ஏதாவது அனுப்பினால் பிரசுரிக்கவேண்டாம். என் பையன் படலை வாசகன். புரிந்துவிடும்”

அட பாவி அன்ரியை கூடவா! என்று நினைத்துக்கொண்டே அடுத்த மெசெஜ் பார்த்தேன்.

“ஜேகே, நான்கு பையன்கள், ஏழு பேரப்பிள்ளைகள், அதில ஒன்று பெரிய பிள்ளை ஆகிவிட்டது. நிறைவான வாழ்க்கை. கட்டைல போற வயசில எதுக்கு ஸ்காண்டல்? அவன் என்னை பற்றி ஏதாவது எழுதி அனுப்பினால் ப்ளீஸ் போடாதே!”

அட நாறப்பயலே போயும் போயும் ஆச்சியையா .. .. அடுத்த மெசேஜ்.

“ஜேகே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நான் குஞ்சுவின் சைக்கிள் பாரில் இருக்க, அவன் மாடு மாதிரி பெடல் மிதிப்பான். நீங்கள் உங்கள் ராலி சைக்கிளில் ஜம்மென்று பக்கத்தில் வருவீர்கள். அவன் ஏதோ தன்பாட்டுக்கு பாடிக்கொண்டு வர, நாங்கள் கண்ணாலேயே பேசுவோமே மறந்துட்டியா? அது மூதேவி நினைக்குது ஏதோ அவன தான் நான் லவ் பண்ணினேன் என்று. ஏதாவது எழுதி அனுப்பும். பிரசுரியுங்கள். பழசை நினைத்து பார்ப்பதிலும் சுகம் தானே!”

இதோ கவிதை அன்பர்களே. தெரிவிப்பது நாங்கள். தீர்மானிப்பது நீங்கள்!

ஸ்கொலர்சிப்புக்காய் கோண்டாவில் கிளாஸ் போன நேரம்

கோட்டையில் சண்டை உக்கிரமான காலம்

jayam-32குரங்கு பெடல் போட்டு டபுள்ஸ்

எல்லாம் குச்சொழுங்ககை வரைதான்

மெயின் ரோட்டு வந்துவிட்டால் நெருக்கம் குறைத்து

நினைவில் வாளியால் தண்ணீர் ஊத்துவாள்

முன் பாரில் அவளை வைத்து மெதுவாக

நாச்சிமாரில் அவனும் ராலியில் வருவாக

சைக்கிள் மிதிக்கையில் தாவடி வெளிவரும்

கூடவே எதிர்க்காத்தும் எம்மை தேடி வரும்

கீரைப்பிடி கூந்தல் என் முகம் தழுவும்

தேங்காய் எண்ணெய் வாசம் அன்று மட்டும் பிடித்துப்போகும்

மனசுக்குள்ளே ராசா பாடல் முணுமுணுக்கும்

வயித்துக்குள்ளே பசி பறந்து

ஒருவித உணர்வு நிரப்பும்

சத்தியமாய் சொல்வேன் இதுவும் காதல்தான்


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். ...மேலும் வாசிக்க
ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர். 
லெமோரியா கண்டம் அழிந்த பின் தமிழர்களின் பூர்வீக மண்ணாக இலங்கை இருந்தது என்றும் சிங்களர்கள்தான் குடியேறியவர்கள் என்று கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர் பால்பெய்ரிங் குறிப்பிடுகிறார். ஐரோப்பியர் தங்கள் காலனிகளாக நாடுகளைப் பிடிக்கப் பல்வேறு திசையை நோக்கி ஸ்பெயினிலிருந்தும் போர்ச்சுகல்லில் இருந்தும் புறப்பட்டது வரலாற்றுச் செய்தி. 
வாஸ்கோடகாமா 1495-இல் இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள கள்ளிக்கோட்டையில் இறங்கி அதன்பின் 1519-இல் இலங்கைக்குப் போனார். அங்கு அப்போது தமிழ் மன்னன் சங்கிலியன் ஆட்சி நடந்தது. வாஸ்கோடகாமா இறங்கியவுடன் அங்கு வியாபார ரீதியாகப் பணிகள் செய்ய உரிய அனுமதியும் அந்தத் தமிழ் மன்னன்தான் வழங்கினார் என்பது சரித்திர உண்மை. 
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவார்கள் என்ற கதைபோலப் போர்ச்சுகீசியர்கள் சிங்களர்களுடன் இணைந்து தமிழருடைய ஆட்சியை வீழ்த்தினார்கள். இந்தக் கலகம் ஏற்பட்டபோதுதான் தஞ்சையை ஆண்ட ரகுநாத மன்னன் சங்கிலி மன்னனுக்குத் துணையாக ஒரு படையை அனுப்பிப் போர்ச்சுகீசியர்கள் மற்றும் சிங்களருடைய தாக்குதலை முறியடிக்க உதவினான். 
அவரது மகன் இரண்டாம் சங்கிலி மன்னனை அவருடைய உடன்பிறந்த சகோதரர் மூலம் சதி செய்து கைது செய்து தமிழ் மன்னனுடைய ஆளுமையை மழுங்கடித்தனர். அந்த மன்னனைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று தங்களது ஆட்சிக்கு உள்பட்டிருந்த கோவாவுக்கு இழுத்துவந்து தூக்கிலிட்டார்கள் போர்ச்சுகீசியர்கள். 
ஐம்பது ஆண்டுகாலம் இலங்கையில் கோலோச்சிய போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று இலங்கையில் நுழைந்தனர். 1833-இல் தமிழர் பகுதியும் சிங்களர் பகுதியும் சேர்த்து ஆங்கிலேயருடைய ஆளுமையான நாடாக மாறியது.
1933-இல் இங்கிலாந்திலிருந்து வந்த சோல்பரி பிரபு ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி இலங்கைத் தீவு என்று அறிவிக்கிறார். 
அப்போது தமிழர்கள் தங்களுக்கு நியாயமும் சம உரிமையும் கிடைக்கும் என்று நம்பினர். ஆனால், அதற்கு மாறாக 1948 டிசம்பர் 12-ஆம் தேதி குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது மட்டுமல்லாமல் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்கள் பத்து லட்சம் பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டது. 
தோட்டத் தொழிலாளர்கள் என்பவர்கள் இந்தியாவிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் ஆவார்கள். அவர்கள் அந்த மண்ணைத் தமிழகத்திலிருந்துபோய் வளப்படுத்தி தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்களைக் கடும் உழைப்பால் உருவாக்கியதற்கு அளிக்கப்பட்ட வெகுமதிதான் பத்து லட்சம் தமிழர்களின் குடியுரிமை ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது. 
1956-இல் சிங்கள மொழிதான் ஆட்சி மொழி, புத்தம் தான் ஆட்சி மதம் என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும், தந்தை செல்வா விட்டுக்கொடுத்து 1957-இல் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு பண்டாரநாயகாவுடன் ஓர் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார். 
அதில் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச அதிகாரமும் உரிமைகளும் வழங்க வேண்டும் என்பதுதான் அதில் குறிப்பிடப்பட்டது. அதை புத்த பிட்சுகளும் எதிர்த்தனர். அந்த ஒப்பந்தமும் பரிசீலிக்காமல் குப்பைத்தொட்டிக்குப் போனது. 
இருப்பினும் செல்வா சமாதானம், காந்தியம் என்ற நிலையில் திரும்பவும் 1965-ல் அன்றைய அதிபர் சேனநாயகாவுடன் ஓர் உடன்பாடுக்கு முன்வந்தார். அந்த உடன்பாட்டு ஒப்பந்தத்தில் மாகாணக் கவுன்சில்கள் ஏற்படுத்தி அதிகாரங்களை ஒதுக்கி தமிழர்கள் உரிமை பாதுகாக்கப்படும் என்ற நிலையில் செல்வாவும் சேனநாயகாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 
அதையும் புத்த பிட்சுகள் எதிர்த்தனர். அதனால் அந்த ஒப்பந்தமும் கிடப்பில் போடப்பட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதையொட்டி தமிழர்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதனால் கடுமையாகக் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். நாடாளுமன்றத்திலும் உரிமைக்குரல் எழுப்பினர். 
இந்தக் கொடுமைக்கு இடையில் தமிழர் பகுதியில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் சிங்களர்கள் குடியேற்றப்பட்டனர். வடபகுதியில் சிங்களர்கள் இல்லாத இடத்தில் 1948-லிருந்து இன்று வரை 33 சதவிகிதம் சிங்களவர்கள் தமிழர்கள் பகுதியில் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் யூதர்கள் குடியேறியதைக் கண்டிப்பவர்கள் ஈழத்தில் சிங்களவர்கள் குடியேறியதைக் கண்டிக்காதது மட்டுமல்லாமல் அதை இந்தியா உள்ளிட்ட நாடுகளே பார்த்தும் பார்க்காமல் இருப்பதுதான் வேதனை. 
தமிழ் மாணவர்கள் 50 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஆனால், சிங்கள மாணவர்கள் வெறும் 29 மதிப்பெண்கள் எடுத்தால் போதும். வேலைவாய்ப்பிலும், ராணுவத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். தேவாலயங்களும், கோயில்களும் தாக்கப்பட்டன. நல்லூர் கோயில் அருகே பல சமயங்களில் தாக்குதல் நடந்தன. அதற்குப் பிறகு செஞ்சோலைச் சம்பவம். இப்படி எல்லையற்ற அத்துமீறல்களும் கொடூரங்களும் முள்ளிவாய்க்கால் வரை நடந்ததை யாரும் மறுக்க முடியாது. 
இப்படியெல்லாம் நடக்கும் என்றுதான் தந்தை செல்வா 1976, மே 24-ஆம் தேதி வட்டுக்கோட்டையில் கூடிய தமிழர் விடுதலை முன்னணியின் கூட்டத்தில், இனிமேல் தனி வாழ்வுதான். ஈழம்தான் என்று முடிவெடுத்து அதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம் அங்குள்ள தமிழர்களுடைய வரலாற்று ஆவணமாக இன்னும் திகழ்கின்றது. 
இதை வைத்துக்கொண்டு 1975-இல் நடந்த இடைத்தேர்தல்களிலும் ஈழம்தான் முக்கியப் பிரச்னையாகக் கொண்டு வாக்காளர்களிடம் சென்றபோது 78.4 சதவிகிதம் பேர் செல்வாவின் ஈழத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். 
11 பேர் நாடாளுமன்றத்துக்குச் சென்றபோது மதச்சார்பற்ற தனி ஈழம் தங்களுக்கு வேண்டும் என்று தன்னுடைய உரிமைக் குரலைத் தெளிவாகப் பதிவு செய்துவிட்டு வெளியே வந்து செல்வா மக்களைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் சிங்கள ராணுவம் உள்ளே புகுந்து தாக்கி ஒன்பது தமிழர்கள் சுட்டு சாகடிக்கப்பட்டனர். 
இதையெல்லாம் பார்த்துப் பொறுக்க முடியாமல்தான் தமிழ் இளைஞர்கள் 1972-இல் புதிய புலிகள் என்ற இயக்கத்தை பிரபாகரன் தலைமையில் தொடங்கினர். 10 இலக்கத்துக்குக் குறைவான உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம் ஆல விருட்சமாக வளர்ந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. 
1983-இல் இனப்படுகொலை நடக்கும்போது அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அதைப் பொறுக்க முடியாமல் அது இனப்படுகொலைதான் என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார். மனித உரிமைகளைப் பேசிய உலக சமுதாயம் இந்தக் கொடுமையினைத் தடுக்க வரவில்லை. 
கிழக்கு வங்கத்தில் பிரச்னை வரும்போது தலையிட்டோம். பாலஸ்தீனிலும், கிழக்கு தைமூரிலும் குரல் கொடுத்தோம். ஐரோப்பாவில் பல நாடுகள் இனரீதியாகப் பிரிந்ததை ஆதரித்தோம். யூகோஸ்லோவோகியா இனரீதியாகப் பிரிந்தது. சூடான் பிரிந்தது. இம்மாதிரி பிரிந்த நாடுகளுக்குக் காரணங்கள் இருந்ததைப்போல ஈழம் பிரிந்து செல்லவும் காரணங்கள் உண்டு. அப்படியிருந்தும் இன்னும் அதற்கான வழிவகை தெரியவில்லை. 
ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டது போல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாஜி, போஸ் போன்றவர்களுடைய படங்களையும் காணலாம். அந்த அளவில் இந்தியத் தலைவர்களை அங்குள்ள தமிழர்கள் அன்பு காட்டி நேசித்தார்கள். 
இந்தியா, சீனா போர் நடக்கும் போது இந்தியாவுக்கு ஆதரவாகத் தமிழர்கள் வீரசிங்கம் அரங்கத்தில் கூட்டம் நடத்தியதும்; தந்தை செல்வா, போர் நிதியாக தமிழர் பகுதியிலிருந்து சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பியதும் எல்லாம் வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்ல; நமது நாட்டை ஈழத் தமிழர்கள் எவ்வளவு பாசத்துடன் பார்த்தார்கள் என்பதை உணர்த்துபவை. 
வங்கதேசப் பிரச்னையில் இந்தியாவையும் இந்திரா காந்தியையும் ஆதரித்து இலங்கை நாடாளுமன்றத்தில் மனப்பூர்வமாகக் குரல் கொடுத்தார்கள் தமிழ் உறுப்பினர்கள். ஆனால், சிங்கள அதிகார வர்க்கம் இந்தியா, சீனா போரிலும், இந்தியா பாகிஸ்தான் போரிலும் இந்தியாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தது. 
வங்கதேசம் பிரியும்போது பாகிஸ்தான் விமானங்கள் இந்தியா வழியாகச் செல்ல முடியாமல் இருந்தபோது இலங்கை வழியாகச் செல்ல அனுமதியும் தந்தது சிங்கள அரசு. எவ்வளவோ உதவிகள் இலங்கைக்கு நாம் செய்தாலும் நன்றி கெட்டத்தனத்துடன் தான் சிங்கள அரசியல் தலைவர்களும், அதிகாரவர்க்கத்தினரும் நடந்து கொண்டார்கள். 
இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் பாதுகாப்பு குறித்தும் இங்கே நாம் பார்க்க வேண்டும். தெற்கே இந்தியப் பெருங்கடலில் உள்ள டீக்கோகர்சியாவில் 1974-75-இல் அமெரிக்கா ராணுவத் தளம் அமைக்க முயன்றபோது இந்திரா காந்தி கண்டித்து உலக நாடுகளுடைய ஆதரவைக் கொண்டு அது தடுக்கப்பட்டது. 
அமெரிக்கா அதன் பிறகும் விடாமல் இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் உள்ள திரிகோணமலை துறைமுகத்தில் வாய்ஸ் ஆப் அமெரிக்காவுடைய ராடர்களை அமைக்கவும், எண்ணெய் கிடங்குகளை அமைக்கவும் ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்தியபோது இந்தியாவின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. 
இன்றைக்கு இந்தியாவைச் சுற்றியுள்ள, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், மியான்மர் ஆகியவற்றுடன் நமக்கு சுமுக உறவு இல்லை. இந்தச் சூழலில் நம்மைச் சுற்றியுள்ள நாடுகளோடு சீனா நட்பு பாராட்டி இந்தியாவுக்கு எதிராகத் திருப்பி வருகிறது. இப்போது சீனாவின் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடலிலும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. 
தனது கடற்படைத் தளங்களை அமைப்பது அணுஉலைகளை நிறுவ உதவி செய்வது, ராணுவத் தளவாடங்களைக் கொடுப்பது என்று இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளோடு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் தென்மேற்குப் பகுதியில் பத்தாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அடுத்த 15 ஆண்டுகளில் பாலிமெட்டாலிக் பணியில் ஈடுபடும் என்று சொல்கிறார்கள். செஷல்ஸ் தீவிலும் சீனா ராணுவத் தளம் அமைத்துள்ளது. 
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பின் தன்னுடைய ஆளுமையைக் காக்க சீனா முயன்று வருகிறது. இந்தியாவோடு பகைமை உணர்வை மனதில் கொண்டு சீனா, இலங்கையைத் தனது நட்பு நாடாக வைத்துக் கொண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆர்வம் காட்டி வருகிறது. 
ராணுவத் தளவாடங்கள், அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைத்துக் கொடுத்து சீனாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது என்று அதன் முயற்சிகள் தொடர்கின்றன. கச்சத்தீவில்கூட சீனர்களின் நடமாட்டம் இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. இலங்கையைச் சுற்றி சீனக் கப்பல் படைகள் வருவதும் போவதும் இந்தியாவின் எல்லைப்பக்கத்தில் அந்தக் கப்பல்கள் ஊடுருவதும் இந்தியாவின் நலனுக்கும் பாதுகாப்புக்கு உகந்ததே அல்ல. 
எனவே, இந்தியா ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வையோடு ஈழப் பிரச்னையில் முடிவுகள் எடுப்பது காலத்தின் கட்டாயம். 
ஈழப் போராட்ட வரலாறு, அதில் உள்ள நியாயங்கள், இந்தியப் பெருங்கடலில் வல்லரசுகளின் ஆதிக்கம், இலங்கை இந்தியா மீது மறைமுகமாகக் கொண்டுள்ள பகைமை போக்கு இதையெல்லாம் பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் ஆகும். நாம் எவ்வளவுதான் இலங்கைக்கு உதவினாலும் அவை யாவும் தமிழர்களுக்குச் சென்றடைவது இல்லை. 
தமிழ்மொழியைப் பாதுகாத்து ஆட்சிமொழியாக அறிவிப்பது, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நடத்துவது போன்ற உறுதிமொழிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிப்பதாக இந்திய அரசிடம் வாக்குறுதி கொடுத்த ராஜபட்ச இப்போது பல்டி அடித்துவிட்டார். இந்தியா வழங்கிய 500 கோடி ரூபாய்க்கு மேலான தொகையைக் கொண்டு அங்குள்ள தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாகச் சொன்ன வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. 
இந்தியா கொடுத்த அனைத்து உதவிகளையும் சிங்களப் பகுதியில் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பயணங்கள், அங்கு சென்ற நாடாளுமன்றக் குழுவின் பயணங்களும் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமையவில்லை. 
இந்திய மண்ணில் உள்ள நாம் அனைவரும் இந்தப் பிரச்னையின் நீள அகலத்தை அறிந்து கடந்தகால வரலாற்றை மனதில்கொண்டு பார்த்தால் அங்குள்ள தமிழர்களுக்கு ஈழம்தான் தீர்வு என்ற விடை நமக்குக் கிடைக்கும். 
ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டதுபோல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாஜி, போஸ் போன்றவர்களுடைய படங்களையும் காணலாம்.
வழிமூலம் - தினமணி

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

சூடான இடுகைகள்