


சந்திக்கு வராத சங்கதிகள், திமுக விசுவாசிகளின் சம்பாசணைகள் உங்களுக்காக! கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக, திமுகவின் அதி தீவிர விசுவாசி ஒருவரும், ...



சர்வதேச சமூகமும், மனித உரிமைபேசும் அமைப்புகளும் மௌனித்துப் பார்த்திருக்க, சிங்களப்பேரினவாத அரசு நடாத்திய முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ...






.jpg)
திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் ...



தமிழனின் வரலாற்றுப்பக்கங்களில் எப்போதுமே இரத்தக்கறையும் இரத்தவாடையும் காணப்படுவது சகஜமாகிவிட்டது. ஆனால் அந்த இரத்தக்கறைகளின் ரணங்கள் இன்றளவும் வலித்துக்கொண்டுதானிருக்கின்றன. இந்த நாள் 1955ம் ஆண்டு ஈழத்தின் தீவகக்கடற்பரப்பில் தமிழர்களின் குருதி ...





போர் முடிவுக்கு வந்தவுடன் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார் - “பிரபாகரனுடன் அவரது ...



அன்பின் சம்பந்த சுமந்திர சிறீலங்கா தேச மைந்தர்களே..! சிங்கக் கொடி தூக்கி எம் சினம் தனித்த சிங்கங்களே…! அன்னை ...


அன்பின் சம்பந்த சுமந்திர சிறீலங்கா தேச மைந்தர்களே..! சிங்கக் கொடி தூக்கி எம் சினம் தனித்த சிங்கங்களே…!
அன்னை சிறீலங்கா மாதா உங்கள் கடவுளாம் காளியின் மறுபிறப்பே..! அவள் தம் வாகனமே எங்கள் கொடி நடுவே நிற்கும் சிங்கம். அவள் கரமிரு ஆயுதமே எம் சிங்கம் ஏந்திய வாள்..! சிரம் தாழ்த்தி ஏற்றோம்… உம்மிருவர் சிங்கக் கொடிதனைப் பற்றிய சீரிய விளக்கங்களை..!
வன்னிப் போரும் முள்ளிவாய்க்காலும் வதம்…! அசுர வதம்…! தமிழீழம் என்ற வேண்டா வேள்வி செய்த அசுரர்கள் அழிக்க நாம் செய்த வதம்..!
வதம் முடிந்து
ஆண்டுகள் 3 ஆகின்ற
இப் பொன்னான வேளையில்… தமிழீழம் மறுக்கும் தமிழ் தேசியம் மறந்த.. எம் இனிய தமிழ் பேசும் சிங்கங்களே… உம்மிருவரையும் காலி முகத்திடலுக்கு அழைக்கிறோம்..! சேர் பொன் இராமநாதன் காலத்து முத்துப் பல்லக்கும் தூசி தட்டி பெயிண்ட் அடிச்சு இருக்குது..! அதிலோ.. உமக்கான பவனியும் காத்திருக்குது..!
இஸ்ரேலின் கிபீரும் இந்தியாவின் மிக் 21 ம், சீனாவின் எவ் 7 ம் பாகிஸ்தானின் மல்ரி பரலும், ரஷ்சியாவின் கிளஸ்ரரும் அமெரிக்காவின் உளவும், இங்கிலாந்தின் ரவைகளும் அல்ல எம் வெற்றியின் பக்க துணை…! முள்ளிவாய்க்கால் வதம் தனில் நீர் காத்த மெளனமே.. எம் வெற்றியின் முதற் படி..! நாம் மனிதம் மறந்தாலும்.. நன்றி மறக்கும் இனமல்ல..!
வீர காளியின் வெற்றி முழக்கமிட்டு சிறீலங்கா மாதாவின் பாதம் தனில்… வெற்றியைக் கொண்டாடுவோம்.. மே 18 காலி முகத் திடலுக்கு…… சித்தார்த்தன், சங்கரி, வரதராஜப் பெருமாள் என்று விட்டகுறை தொட்டகுறையாய் எவரிருப்பினும் எல்லோரையும் ஓரணியில் படையாய் திரட்டி கூட்டி வாரீர்..!! நாட்டைப் பிரிக்க சூது செய்வோர் முகம் கவிழ நம் ஒற்றுமை செப்புவோம்..!
இனங்கள் மூன்றும்.. ஒன்றாய் சேர்ந்தே சிங்கார மொழியாம் சிங்களத்தில் சிறீலங்கா நமோ நமோ மாதா பாடி வெற்றி வீரர்களாம் தமிழர் சங்காரம் தனில் சாதனை செய்த எம் தவப் புதல்வர்களாம் துட்ட கைமுனுவின் வாரிசுகளை வாழ்த்துவோம்..!
இப்படிக்கு.. உங்கள் அன்பின்.. சகோதரத்துவம் மிகு.. சிங்கள.. பெளத்த பேரினவாத அரசும்.. அதன் பயங்கரவாத முப்படைகளும்..!
Filed under: ஈழம், கவிதை, கவிதைகள்

யாழ். மே தினக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் சிங்கக்கொடி பிடித்த விவகாரம், தென்னிலங்கையில் பலத்த வரவேற்பைப் ...



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்னொரு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் இழுத்துவிட அரசாங்கத் தரப்பு முனைப்புக்காட்டி வருகிறது. ஏற்கனவே ...



இவர்களில் பலர் தமது குடும்பத்தவர்களைப் பராமரிப்பதற்காகவும், வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்துவதற்காகவும் பாலியல் தொழில்களில் ஈடுபடவேண்டிய ...





தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் வழிபாட்டுத் தலங்களையொட்டிய பிரதேசங் களிலும், தனியார் ...



கால் நூற்றாண்டுக்கு மேலாக நடந்த கொடூர யுத்தத்தில் வெயில் மழை பாராது அலைந்து திரிந்து தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி.. பாதி சனம் உயிரையும் கொடுத்து, மீதி ...



இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் தெற்குக் கரையோரப்பகுதியில் இருந்து இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டு ...



இனப்பிரச்சினைக் குத் தீர்வு காண்பதற் கென இலங்கை அரசினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்பது ...


டேய் ஜேகே ஒபாமா, அமெரிக்கா, ஐரோப்பாவில் என்ன தான் நடக்கிறது? சார்கோசி போய்விட்டார். கிரேக்கத்தில் ...

ஒபாமா, அமெரிக்கா,ஐரோப்பாவில் என்ன தான் நடக்கிறது? சார்கோசி போய்விட்டார். கிரேக்கத்தில் தொங்குபாராளுமன்றம். ஜெர்மனியில் கூட அஞ்செலா இடைத்தேர்தலில் வாங்கிக்கட்டுகிறாராமே?
பாரிசில் இருக்கும் அக்காவுடன் இதற்காகவே ஸ்கைப்பில் கதைத்தேன். வீடியோவை ஒன் பண்ணியதும் இரண்டு மருமக்களும் கைத்தட்டி துள்ளிக்குதித்து சொன்னது “மாமா உங்கட சார்கோசியை நாங்க வீட்டுக்கு அனுப்பீட்டோம்”. ஏனென்று அவர்கள் சொன்னபோது தான் பிரெஞ்சுக்காரர்கள் சார்கோசி மீது எவ்வளவு கடுப்புடன் இருந்திருக்கிறார்கள் என்று புரிந்தது. யூரோ என்ற படுகுழிக்குள் விழுந்து மீள முடியாமல், Austerity Plan என்று அவர்கள் கொண்டுவந்த சிக்கனத்திட்டம் அவ்வளவாக மக்களை கவரவில்லை. எல்லாவற்றிலும் கை வைக்க தயாராக இருந்திருக்கிறார்கள். பொதுச்சேவை, மராமத்து, சேமலாபம் என்று மக்கள் வரியில் வழங்கப்படும் சேவைகள் எல்லாவற்றிலும் சிக்கனம். பிரான்சும் ஜேர்மனும் ஏன் தங்கள் பணத்தை தேவையில்லாமல் கிரேக்கத்துக்கும் இத்தாலிக்கும் அழ வேண்டும் என்பது சாதாரண மக்களுக்கு புரியவில்லை. இந்த வலது சாரி பொருளாதார கொள்கைகள் கொஞ்சம் பிசகினால் சங்கு தான். அது தான் ஜெர்மனியிலும் பிரான்சிலும் இடதுசாரிகள் வென்றமைக்கு முக்கியகாரணம். மேலும் சார்கோஸி, தான் தோற்கப்போகிறேன் என்ற பயத்தில், ஜூத சிறுவர்கள் கொலை செய்யப்பட சம்பவத்தை வைத்து முஸ்லிம்கள் மீது இனவாதத்தை தூண்ட முயற்சிக்க, பிரெஞ்சுக்காரர்கள் முழித்துக்கொண்டு விட்டனர். கோவிந்தா! கிரேக்க நிலைமை இன்னும் மோசம். நாடு அதள பாதாளத்துக்கு .. போதாக்குறைக்கு austerity திட்டம் இன்னும் கழுத்தை திருகும் என்ற பயத்தில் தொங்கு பாராளுமன்றத்துக்கு வாக்களித்துவிட … இரண்டு மூன்று வருடத்தில் யூரோ அமைப்பு பெட்டிக்குள் முடங்கிவிட தான் சான்ஸ் கூட!
வில்லிபுத்தூரர், author of மகாபாரதம்டேய் ஜேகே, நான் எழுதினதே புனைவு! அத வரலாறு என்று சொல்லி திரிபுபடுத்தி எழுதுறது ஞாயமா? ஏகலைவன் அரசன் என்று வேறு எழுதியிருக்கிறாய்? உதைக்கிறதே?
மிஸ்டர் வில்லி, மகாபாரதமே குழப்பங்களின் ஒட்டுமொத்த பிளேஸ் தானே. இந்த கதையின் முடிச்சே ஏகலைவனில் இருந்து தான் ஆரம்பித்தது. ஏகலைவனின் குருதட்சணை காட்சிக்கு பிறகு அவனுக்கு என்ன நடந்தது என்று அறிய ஆர்வம். ஏகலைவன் நிடத நாட்டுக்கு மன்னனாக இருந்திருக்கிறான். என்ன எங்கேயோ கேள்விப்பட்ட நாடா? நம்ம நள மகாராஜா சூதில் பறிகொடுத்த அதே நாடு! உண்மையில் அது காடுகள் பலவற்றை உள்ளடக்கிய நாடு(நாடு-காடு எதிர் எதிர் பதமில்லை). ஏகலைவன் அப்புறமாக அரசசேவை செய்து வந்திருக்கிறான். ஜராசந்தனுக்கு நம்பிக்கையானவனாய் வாழ்ந்திருக்கிறான். சிசுபாலனுக்கு ருக்மணியை மணம் முடித்துவைக்க ஜராசந்தன் சார்பில் ருக்மணியின் அப்பன்காரனிடம் தூது போயிருக்கிறான். நிச்சயம் முடிந்த தருவாயில் கிருஷ்ணன் ரெட்டியை தாக்கிவிட்டு பொண்ணை தூக்கிவிட்டான். அப்புறம் ஜராசந்தனுக்கும் கிருஷ்ணனுக்கும் நடந்த யுத்தத்தில் ஏகலைவன் கொல்லப்பட்டிருக்கிறான். ஆக ஒன்றையும் ரெண்டையும் கூட்டிப்பார்த்தேன், ஏகலைவனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஆகாது. ஸோ ஏகலைவன் இயல்பாக கௌரவர் பக்கம் சாய்கிறான். ஓரளவுக்கு முடிச்சு விழுகிறது. இனி கதைக்கு ஒரு நோக்கம், தீம் தெரிவு செய்து பின்னவீனத்துவம் இணைத்து கரைசெர்த்தால் “கதை சொல்லாத கதை” ரெடி!
மயிலன்பொம்பள மனசு பற்றி என்ன நினைக்கிறீர்கள் தம்பி?
என்ன தலைவரே, நம்மள பார்த்தா ஆபரேட் பண்ணுப்பட்ட ஆளு மாதிரி இருக்கா? பொம்பள மனசு பற்றி நாங்க என்னவெல்லாம் நினைக்கிறோமோ அவை ஒன்றுக்குமே பொருந்தாத புதிரான மனசு தான் பொம்பள மனசு! அட அதைத்தானே நான் நினைக்கிறேன் .. ஸோ அதுவும் இல்லையா? மூடு குழம்பி போச்சு! மன்மதகுஞ்சு ஒரு பாதாம் பீர் ப்ளீஸ்!
ஜேம்ஸ் கமரூன்தம்பி எங்களோட புது ப்ராஜெக்ட்ல ஜாய்ன் பண்ணுறீங்களா?
ஓ ..வால் வெள்ளி, பூமிக்கு அண்மையில் சுற்றும் குட்டி குட்டி வான்கற்களில் இருந்து கனியம் எடுக்கும் திட்டமா? புதுமையான விஷயம் தான் பாஸ். உங்கள் டீமை பார்த்தாலே ஆச்சர்யம். கூகிள் அதிபர்கள் லாரி பேஜ், எரிக், மைக்ரோசாப்ட் சிமோனி என்று வித்தியாசமான கூட்டணி தான். பூமியை சுற்றி கிட்டத்தட்ட 9000 வான்கற்கள் சுத்துகின்றனவாம். இந்த கற்களில் நீர் செறிந்த பனிக்கட்டிகள் இருக்காம். அவற்றில் இருந்து எரிபொருள்/குடிநீர் போன்றவை எடுக்கலாமாம். பூமியில் இருந்து கொண்டுபோவதைவிட, ஆங்காங்கே பவர் ஸ்டார் நடாத்தும்
தண்ணீர்பந்தல் போல கிண்டி எடுத்துக்கொண்டு போனால், அடுத்த தலைமுறை காந்தி கூட கிண்டி யாத்திரை வெள்ளிவரை போகும் அளவுக்கு விண்வெளி வசப்படுவிடும். ஆனால் இவர்களின் டார்கட் அதுவல்ல. இந்த கற்களை தோண்டினால் நிறைய உலோகம் கிடைக்குமாம். அதுவும் தங்கம் பிளாட்டினம் போன்ற அறிய ஐட்டம்ஸ். பூமிக்கு கொண்டுவந்தால் தங்கம், பிளாட்டினம் போன்றவற்றை தொழிற்துறையில் கூட பாவிக்கலாமாம். ஒரு குட்டி கல் பில்லியன் டொலருக்கு மேல் பெறுமதி வருமாம். இதெல்லாம் சரிவருமா? கஷ்டம் இல்லையா என்று கேட்டதுக்கு கென்னடி சொன்ன பஞ்ச் டயலாக்கை அடிக்கிறார்கள்.
“We choose to go to the moon in this decade and do the other things, not because they are easy, but because they are hard”
ஜெயராஜ், இலங்கைமெல்பேர்னில் எழுத்தாளர் விழாவாமே. மழைக்கு ஒதுங்கும் ஐடியா இருக்கா?
அடடா .. வருகிற ஞாயிறு மாலை, பிரஸ்டனில் நடக்க இருக்கிறது. கவியரங்கம் அல்லத்து கருத்தரங்கு செய்யுங்கள் என்று கேட்டார்கள். நமக்கு கவிதை ஆகாது. கருத்தரங்கு ஓகே என்றுவிட்டேன். கோகிலா மகேந்திரன், மாத்தளை சோமு எல்லாம் வருகிறார்கள். இருபது வருஷங்களுக்கு பிறகு யசோ அக்காவை சந்திக்கப்போகிறேன். எனக்கு சின்னவயதில் இலக்கியத்தையும் இசையையும் ரசிக்க கற்றுத்தந்த எழுத்தாளர். அவரை இவ்வளவு காலத்துக்கு பின், ஒரே மேடையில் சந்திக்கிறேன் என்னும் போது, அக்காவுக்கு ஓரளவு பெருமை சேர்த்திருக்கிறேன் என்று நம்பத்தோன்றுகிறது. “புலம்பெயர்ந்த படைப்பாளிகள், பதிவுலக தளத்தில் தமிழுக்கு செய்யும் பங்களிப்பு” பற்றியது என்னுடைய டாபிக். கருத்தரங்கு என்றவுடன் புரியாத ஆராய்ச்சி தமிழில் எல்லாம் பேசும் ஐடியா கிடையாது. என் ஸ்டைலில் கொஞ்சம் குசும்பு, சீரியஸ், அவ்வப்போது விஷயம் என்று கலந்து கட்டும் ஐடியா இருக்கிறது. ஆஸிகளே டைம் கிடைத்தால் சும்மா வந்து எட்டிப்பாருங்கள்!
மன்மதகுஞ்சு : மச்சி நீ படிச்ச ஸ்கூலில அவிங்க ஹெட் மாஸ்டர்டா, உன்னைய விட்டா கொஞ்சம் இவனாட்டம் பேசுவாய் .. அடக்கி வாசிக்கணும் தம்பி!பார்த்து இதமா தொடங்கி பதமா முடிச்சு வையி! கண்டறியாத பின் நவீனத்துவம் புடலங்காய் ஒன்றும் வேண்டாம்! புது காளைமாடு வாலில டின்னு கட்டின மாதிரி தலை தெறிச்சு ஆடிடாதே.. அடக்கி ஆடு! ஓகே!
இந்த வார போட்டோ
சில மாதங்களுக்கு முன் மன்மதகுஞ்சுவிடம், வன்னிப்பக்கம் போனால் நம்ம வட்டக்கச்சி மகாவித்தியாலய படம் ஒன்று எடுத்து அனுப்பு என்று சொன்னேன். தல சொன்ன வாக்கை காப்பாற்றிவிட்டது.
வன்னியில் இடம்பெயர்ந்து இருந்தபோது எனக்கு பதினைந்து பதினாறு வயசு. பசுமரத்தாணி. வட்டக்கச்சி மகாவித்தியாலயம் ஒரு கலவன் பாடசாலை. சென்ஜோன்சில் எப்போதாவது வரும் டீச்சர்மாரை லொள்ளுவிட்டுக்கொண்டிருந்தவனுக்கு திடீரென்று ஒரு கிராமப்புற கலவன் பாடசாலை என்றவுடன் சும்மா ஜிவ்வென்று .. அதுவும் அப்போதெல்லாம் கொஞ்சம் புத்தி வேறு ஓரளவுக்கு வேலைசெய்ததால் வகுப்பிலும் முதலிடம். பொண்ணுங்க எல்லாம் கியூவில் வந்து டவுட் கேட்க நான் நிறுவினது எல்லாமே “வெளிப்படை உண்மை” தான்! O/L பரீட்சை அங்கே தான் எடுத்தேன்.காலை பரீட்சைக்கு முட்டை பொரியலும் புட்டும் கிடைக்கும். இரவு பத்துமணிக்கு, பின்னேரம் கறந்த பசுப்பாலில் டீ. அம்மாவை விட வட்டக்கச்சி மாமி தான் பார்த்து பார்த்து கவனித்தார். எனக்கும் இன்னொரு அண்ணாவுக்கும் என்று கன்றுக்குட்டிகள் மழைக்கு ஒதுங்கும் கொட்டிலை சரிக்கட்டி தந்திருந்தார்கள். கிரவல் மண்ணில் நாங்களே மெழுகி கறுப்பு பெயிண்ட் அடித்து, அரிக்கன் லாம்பில்(மேசை விழக்கு அணைந்துவிடும்), அப்படி ஒரு சிட்டுவேஷனில் படிப்பது போல ஒரு சந்தோஷம் உலகத்தில் வேறு என்ன இருக்கு?
ரிசல்ட் வந்தது. 7டியும் 1சியும். ஆங்கில இலக்கியம் ‘சி’ என்று என்னைவிட, என் குடும்பத்தை விட வட்டக்கச்சி அதிகம் கவலைப்பட்டது. இப்போதும் கூட இந்த பாடசாலை மகசினில் 1996ம் ஆண்டு சஞ்சிகையில் என் பெயர் விவரம் இருப்பதாக சொல்லிக்கொள்வார்கள். பத்து வருடங்கள் படித்தும் சென்ஜோன்ஸ் கொடுக்க தவறிய அங்கீகாரத்தை இடம்பெயர்ந்து இரண்டு வருடங்களே படித்த எனக்கு இந்த பாடசாலை கொடுத்தது. அகதியாய் வந்தவனுக்கு, இடம் கொடுத்து, சாப்பாடு கொடுத்து படிக்க கொட்டில் கொடுத்து பார்த்து பார்த்து செய்து, நான் படித்து நல்ல ரிசல்ட் எடுப்பதை எப்போதுமே பெருமையாய் பார்த்து, இன்றைக்கும் என் பெயரை சொல்லி சொல்லியே தன் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதாக சொல்லுவார்கள்.எப்படிப்பட்ட ஊர் அது.
சென்றவருடம் அவர்கள் வீட்டுக்கு போயிருந்தேன். அப்போது தான் மானிக்முகாமால் வீடு திரும்பியிருந்தார்கள். நான் வந்துவிட்டேன் என்று, நின்ற ஒரே சேவலையும் சட்டிக்குள் வைத்து, கோப்பையில் எப்போ கொஞ்சம் இறைச்சிக்கரி குறையுதோ, சடாரென்று பாய்ந்து வந்து ஒரு கரண்டி போட்டு .. என்ன மாதிரி சனங்கள்? கால் தூசிக்கு பெறுவோமா?
அந்த குடுப்பத்திலேயே ஒரு பையன் பதினாலு வயசு, ஆள் எங்கே என்று தெரியாது. இன்னொரு பையனும் கடைசி நாள் அன்று தான் …. காயங்கள் இல்லாத நபர்களே கிடையாது. கால் இல்லாமல் போனாலும், கை போனாலும், இன்றைக்கும் பத்து இருபது ஏக்கரில் நெல் விதைக்கும் நம்பிக்கை இன்னும் போகவில்லை.
என்ன செய்யப்போகிறேன்?
Spring, Summer, Fall, Winter... and Spring
கிம்கிடுக் பெயர் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் இயக்கிய படம். இடம் கொரியா. ஒரு வயோதிப பௌத்த துறவி, அவரிடம் ஒரு சிறுவன் குருகுல வாசம். ஆளில்லாத ஒரு காட்டுப்பகுதியில், ஆற்றின் நடுவில் மிதக்கும் வீடு. கதை நான்கு பருவங்களை சுற்றி நடக்கிறது.
வசந்த காலம். சிறுவனுக்கு மகாயான தத்துவம், மூலிகை மருத்துவம் என பல விஷயங்களை போதிக்கிறார். சிறுவன் பிராணிகளை துன்புறுத்துகிறான். தவளை காலில் கல்லு கட்டுகிறான். மீன் சேட்டையை சுற்றி நூலால் இறுக்கி கட்டுகிறான். பாம்பை கொடுமைப்படுத்துகிறான். தூர நின்று அவதானித்த துறவி, அன்றிரவு சிறுவன் நித்திரையில் இருக்கும் போது பாறாங்கல்லை அவன் காலில் கட்டிவிடுகிறார். காலையில் எழுந்த சிறுவன் அழுகிறான். அவனை அப்படியே போய், அந்த பிராணிகளை காப்பாற்றினால் தான் கட்டை அவிழ்த்துவிடுவேன் என்று துறவி சொல்ல, சிறுவன் முனகியபடியே கல்லை இழுத்துக்கொண்டு அந்த தவளையை தேடி போய் அதை காப்பாற்றுகிறான். ஆனால் பாம்பும் மீனும் இறந்துவிட்டது. சிறுவன் கதறுகிறான்.
கோடைக்காலம். இப்போது அந்த சிறுவன் இளைஞன். துறவியை தேடி ஒரு தாயும் மகளும் வருகிறார்கள். அந்த மகளுக்கு ஏதோ ஒரு நோய். குணப்படுத்தி தருமாறு சொல்லி துறவியிடமே ஒப்படைத்துவிட்டு தாய் கிளம்புகிறாள். காட்டுப்பகுதி, கோடைக்காலம். இரண்டு இளைஞர்கள்! சூடு கிளம்புகிறது! இருவருக்கும் காதல் or whatever you name it. ஆனால் இந்த தொடர்பால் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நோய் குணமாகிறது! ஒருநாள் இளைஞனும் அந்த பெண்ணும் ஆற்று நடுவே படகில் ஆடையின்றி கிடப்பதை துறவி கண்டுவிட, அவர் அந்த பெண்ணை வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார். அந்த இளைஞனால் அவளை பிரிந்து இருக்கமுடியவில்லை. துறவியை பிரிந்து ஓடுகிறான்!
இலையுதிர் காலம். இளைஞனுக்கு நடுத்தர வயது திரும்பி வருகிறான். மனைவி இன்னொருவனை விரும்புவது தெரிந்து அவளை குத்தி கொன்றுவிட்டு இரத்தக்கத்தியுடன் வந்து நிற்கும் அவனை துறவி அடித்து விளாசுகிறார். ப்ரஜ்ஞா பரமிதா என்ற மகாயான பௌத்த வேதத்தை தரையில் செதுக்க சொல்லுகிறார். முடிவில் அவனை கைது செய்து கூட்டிப்போகிறார்கள். கொஞ்ச நாளில் அந்த துறவியும் தன் இறுதிக்காலம் வந்துவிட்டது அறிந்து ஆற்றின் நடுவே படகில் தன்னை தானே எரியூட்டி இறந்துபோகிறார்!
பனிக்காலம்! அந்த இளைஞன் தண்டனை முடிந்து திரும்புகிறான். ஆறு உறைந்து போய் இருக்கிறது. பனியை வெட்டி குருவின் பற்களை வெளியே எடுக்கிறான். அந்த இடத்தை செப்பனிட்டு குரு செய்த வேலையை தொடர்கிறான். இப்போது ஒரு தாய் தன் குழந்தைக்கு வருத்தம் என்று சொல்லி இவனிடம் ஒப்படைக்கிறாள். அவள் திரும்பி போகும் வழியில் அந்த துறவி போட்ட பனித்துளைக்குள் விழுந்து உயிரிழக்க, இவன் மனம் வருந்தி, தன் காலில் தானே கல்லை கட்டி தனக்கு தானே தண்டனை கொடுக்கிறான். இப்போது அந்த குழந்தை அநாதை. அவனிடம் குருகுல வாசம் இருக்கிறது!
வசந்த காலம். அவன் சிறுவனாய் இருந்த போது செய்த தவறுகளை இந்த குழந்தையும் செய்ய .. வாழ்க்கை ஒரு வட்டமடா என்ற விஜய் தத்துவத்துடன் படம் முடிகிறது!
இந்த படம் ஒரு போரிங் படம்! தானே செதுக்கிய தானைத்தலைவன் அஜித் நடிக்காத படம். அதனால் எல்லோருக்கும் பிடிக்கவேண்டிய தேவை இல்லை. இரண்டு மணிநேரமாய் வாழ்க்கை ஒரு வட்டம் என்ற விஜய் தத்துவத்தை கிம்கிடுக் போன்ற தேர்ந்த இயக்குனர்கள் வெறுமனே சொல்லமாட்டார்கள்! இன்னொரு மாட்டரும் இருக்கிறது! பல பருவங்களில் மனிதன் செய்யும் தவறு அவனுக்கு எவ்வாறு உணர்த்தப்படுகிறது என்பதை மகாயான பௌத்த தர்மத்தின் அடிப்படையில் படம் சொல்லுகிறது. எவர் சொல்லியும் எந்த மனிதனும் திருந்துவதில்லை. ஆனால் தானே பட்டு தெளிவான். இன்னும் எழுதலாம் … ரொம்ப லெந்தாக போய்விட்டது. ஒரு மூட் இருந்தால் பாருங்கள். அட்டு சீனுக்காக பார்க்கவேண்டாம் பாய்ஸ்!
இந்த வார பாடல்
“டேய் இந்த மெலடி எண்ட கருமம் உண்மையிலேயே எது தம்பி”
சுகிந்தன் அண்ணா கேட்டபோது அவர் காரில் “ஓ போடு” போய்க்கொண்டிருந்தது.
“மெலடி தான் அண்ணே டியூன் மெட்டு .. உயிர் .. அதை சுற்றி உருவாவது தான் பாட்டு”
“அப்ப இந்த ஒபோடு பாட்டில மெலடி இல்லையா?”
இருக்கு .. அழகான ஒரு மெலடி இருக்கு ஆனா அதற்கு மேலால ரிதம் ஆக்கிரமிச்சிட்டுது … அந்த ரிதத்தை தூக்கிட்டு மெலடியை மட்டும் எடுத்தா இன்னும் புரியும், உதாரணத்துக்கு இந்த பாட்டு
அப்பிடி என்றால் ஸ்லோவான பாட்டில மெலடி அதிகம் இருக்குமா? தாளம் கூடினா மெலடி குறையுமா?
அப்பிடி இல்ல அண்ணே .. தாளத்துக்கும் டியூனுக்கும் சம்பந்தமில்லை .. டியூன் தான் மெட்டு, அத போடோணும் முதலில .. அப்புறம் தான் அதற்கேற்ற தாளம் முடிவு செய்யோணும் .. சில நல்ல உயிரை எடுக்கும் மெலடி பாடல்கள் வேகமான தாளத்திலும் வந்திருக்கு .. “சின்ன ராசாவே சித்தெரும்பு உன்னை” பாட்டும் “உள்ளத்திலே நல்ல உள்ளம் உறங்காது” பாட்டும் ஒரே மெட்டு தான் ..
படம் மகாபிரபு. தேவா இசை. ஜானகி எஸ்பிபி. இந்த பாட்டு எப்போது கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத்தொன்றும். ஸ்டார்ட் சும்மா ஒரு தேவா பாட்டு போல, “செங்குருவி செங்குருவி” பாணியில் தான் ஆரம்பிக்கும். ரிதம் கூட வேகமான 1.2.1.2 நடை. “அன்றாடம் நூறு சேதிகள்” என்று எஸ்பிபி சரியான தாளத்தில் எடுக்கவே தடுமாறும் அளவுக்கு வேகமான பாட்டு. சரி இன்னொரு தாளம் போட வைக்கும் பாட்டு என்று ஸ்கிப் பண்ணினால் என்றால் ஐயோ பாவம் நீங்கள்! அவ்வளவு இருக்கு இதில!
சங்கதி ஆரம்பிக்கும் போது தான் பாட்டின் வீரியமே தெரியவரும்.
தாளம் ஸ்டில் “சாங்கு சக்கு சக்கு சை சா” தான் .. தேவா மாற்றவில்லை ..
கல்யாண வேளை வரும் காதலன் வந்து மாலையிடகண்ணாடி கன்னங்களில் கைநகம் கொண்டு கோலமிட
மேலே இருந்து கீழே ஓடும் மெட்டு. பஸ்சின் பூட்போர்டில் தொங்கும்போது அவள் உள்ளே நிற்பதை கண்டுவிட்டால் வயிற்றை ஒரு உருட்டு உருட்டும் பாருங்கள். கையை விட்டால் கீழே விழுந்துவிடுவோம். உள்ளே போகமுடியாமல் ஏற்கனவே கிரவுட் கூட! அவள் வேறு எந்த ஸ்டாப்பில் இறங்கப்போகிறாள் என்ற குழப்பம். ஜானகிக்கு ஸ்ருதி பிசகவில்லை.
அதே வேகம் அதே தாளம் … காதலுக்கு குறைவில்லை .. மெட்டுக்கும் குறைவில்லை .. அருவி வேகமாக ..
முப்பாலும் சர்க்கரையும் மூடியிருக்கும் பாத்திரமேஎப்போது உண்ணுவது எல்லையை மீறும் ஆத்திரமே
ஸ்டில் அதே தாளம். ஆனால் மெட்டு மட்டும் எம்மை எங்கோ அழைத்துசெல்லும். தேவாவுக்கு இன்னமும் திருப்தியில்லை. அடுத்த அஸ்திரம் வருகிறது. தாளத்துக்கு தோதாக தலைவர் வயலினில் ரிதம் கொடுக்க தொடங்குகிறார். harmonic rhythm என்று அழைப்பார்கள்.
பத்து பேர்களின் பார்வை படும் பகல் நேரத்தில் தூர நில்லுமிச்சம் மீதிகள் ஏதுமின்றி அந்தி ஆனதும் அள்ளிக்கொடு
எஸ்பிபி & ஜானகி, they probably realised its a special song. தாளத்துக்கு முரணான பாவங்கள் கொடுக்கவேண்டும். அந்த contrast தான் பாட்டின் ஜீவன் என்பதை புரிந்து பாட, சரணத்தின் முடிவு வந்துவிழுகிறது
திங்கள் காய்ந்திருக்க தென்றல் காற்றடிக்க நீ நினைத்த கதையை நடத்து
இப்படிப்பட்ட மெலடி பாடல்களுக்கு இந்த வகை தாளம் கொடுத்தால் நடனத்தை கவிதை போல அமைக்கலாம். இந்த பாடல் காட்சியை இன்னும் பார்க்கவில்லை. ஆனால் சோகம் என்னவென்றால் யாரோ ஒரு நாதாரி தான் பாடல் எழுதியிருக்கவேண்டும். கொஞ்சம் கூட ரசனை இல்லாதவன். இப்படிப்பட்ட ஒரு மெட்டு, இந்த தாளத்துக்கு பின்னி பெடலெடுத்திருக்கவேண்டாம்?
இந்த பாட்டு யூடியூபில் கூட இல்லை. எத்தீட்டோம்ல! ஒரு பாட்டை இப்படி டீப்பாக ரசிப்பது சுத்த பைத்தியக்காரத்தனம் என்று சொன்னீர்கள் என்றால், பைத்தியம் மேலும் மேலும் முத்தவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன்!
மன்மதகுஞ்சு ஸ்பெஷல்
சென்றவாரம் அல்கைதாவிடம் இருந்து ஒரு ஈமெயில் மிரட்டல் வந்தது. மன்மதகுஞ்சு ஸ்பெஷல் போடாவிட்டால் படலையை குண்டுவைத்து தகர்த்துவிடுவோம் என்று! அந்த வேலையை சத்தம்போடாமல் மன்மதகுஞ்சு கவிதையே செய்கிறது என்பது வேற விஷயம்! ஆக, நேற்று அவனின் facebook சுவரில் இதை எழுதிப்போட்டேன்.
“டேய் குஞ்சு.. உன்னுடைய காதலிகளை தொகுத்து ஒரு மாட்டர் கவிதை எழுதி தாறியா? அடுத்த வியாழமாற்றம் உனக்கு தாண்டி! அப்பப்ப மானே தேனே போட்டுக்க! “
அவன் பதில்
“எதுக்கும் யாம் அஞ்சமாட்டோம், நம்மிடம் இல்லை ஒளிவு, யாம் உமக்கு வாக்கு கொடுகிறோம், அடுத்த வியாழமாற்றம் கைபிடிக்காத கண்ணியமான காதலிகள்”
தலைவர் இத facebook ல போட்ட உடனேயே, மூன்று பெண்கள், அவனின் நண்பிகள், ஒருவர் எனக்கும் நண்பி, டெக்ஸ்ட் பண்ணினார்கள் (எப்படித்தான் இதுகளுக்கு மட்டும் என் நம்பர் கிடைக்குதோ!)
“ஜேகே, குஞ்சு என்னய பற்றி ஏதாவது அனுப்பினால் பிரசுரிக்கவேண்டாம். என் பையன் படலை வாசகன். புரிந்துவிடும்”
அட பாவி அன்ரியை கூடவா! என்று நினைத்துக்கொண்டே அடுத்த மெசெஜ் பார்த்தேன்.
“ஜேகே, நான்கு பையன்கள், ஏழு பேரப்பிள்ளைகள், அதில ஒன்று பெரிய பிள்ளை ஆகிவிட்டது. நிறைவான வாழ்க்கை. கட்டைல போற வயசில எதுக்கு ஸ்காண்டல்? அவன் என்னை பற்றி ஏதாவது எழுதி அனுப்பினால் ப்ளீஸ் போடாதே!”
அட நாறப்பயலே போயும் போயும் ஆச்சியையா .. .. அடுத்த மெசேஜ்.
“ஜேகே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நான் குஞ்சுவின் சைக்கிள் பாரில் இருக்க, அவன் மாடு மாதிரி பெடல் மிதிப்பான். நீங்கள் உங்கள் ராலி சைக்கிளில் ஜம்மென்று பக்கத்தில் வருவீர்கள். அவன் ஏதோ தன்பாட்டுக்கு பாடிக்கொண்டு வர, நாங்கள் கண்ணாலேயே பேசுவோமே மறந்துட்டியா? அது மூதேவி நினைக்குது ஏதோ அவன தான் நான் லவ் பண்ணினேன் என்று. ஏதாவது எழுதி அனுப்பும். பிரசுரியுங்கள். பழசை நினைத்து பார்ப்பதிலும் சுகம் தானே!”
இதோ கவிதை அன்பர்களே. தெரிவிப்பது நாங்கள். தீர்மானிப்பது நீங்கள்!
ஸ்கொலர்சிப்புக்காய் கோண்டாவில் கிளாஸ் போன நேரம்
கோட்டையில் சண்டை உக்கிரமான காலம்
எல்லாம் குச்சொழுங்ககை வரைதான்
மெயின் ரோட்டு வந்துவிட்டால் நெருக்கம் குறைத்து
நினைவில் வாளியால் தண்ணீர் ஊத்துவாள்
முன் பாரில் அவளை வைத்து மெதுவாக
நாச்சிமாரில் அவனும் ராலியில் வருவாக
சைக்கிள் மிதிக்கையில் தாவடி வெளிவரும்
கூடவே எதிர்க்காத்தும் எம்மை தேடி வரும்
கீரைப்பிடி கூந்தல் என் முகம் தழுவும்
தேங்காய் எண்ணெய் வாசம் அன்று மட்டும் பிடித்துப்போகும்
மனசுக்குள்ளே ராசா பாடல் முணுமுணுக்கும்
வயித்துக்குள்ளே பசி பறந்து
ஒருவித உணர்வு நிரப்பும்
சத்தியமாய் சொல்வேன் இதுவும் காதல்தான்


ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். ...



















icon near each post or send an email to